<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-1470968473851359111</id><updated>2012-02-10T19:39:50.195+05:30</updated><category term='நகைச்சுவை'/><category term='வாசிப்பனுபவம்'/><category term='ஈழம்'/><category term='புனைவு'/><category term='அனுபவம்'/><category term='கட்டுரை'/><category term='கல்வி'/><category term='உலகமயமாக்கல்'/><category term='தொடர் விளையாட்டு'/><category term='பதிவர் வட்டம்'/><category term='கிரிக்கெட்'/><category term='சமூகம்'/><category term='திரைப்படம்'/><category term='அரசியல்'/><category term='சர்வேசன் நச் சிறுகதைப் போட்டிக்கு'/><title type='text'>முரளிகண்ணன்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://muralikkannan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://muralikkannan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>முரளிகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15503809310005245433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/-9LwjCz9jyaw/Tv1YpBSgLkI/AAAAAAAAAbM/cbkhikExF40/s220/DSC00675.JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>237</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-5168548831445490827</id><published>2012-02-07T09:59:00.000+05:30</published><updated>2012-02-07T09:59:47.037+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><title type='text'>தமிழ்நாட்டு கண்டக்டர்கள்</title><content type='html'>பேருந்துகளில் தனியே பயணம் செய்ய ஆரம்பித்து 25 வருடங்களாகிறது. எத்தனை விதமான கண்டக்டர்கள்! இடத்தோல் பட்டையிலே தோல் பையைத் தொங்கவிட்டு, அக்கையிலேயே எல்லா டிக்கட் புத்தகங்களையும் அடுக்கிக் கொண்டு விரலிடுக்கில் ஐந்து, பத்துக்களை மடித்து வைத்துக் கொண்டு, வலக்கையில் நீள நகங்களை வளர்த்துக் கொண்டு வாயிலேயே விசில் கொடுக்கும்  மதுரை ஏரியா கண்டக்டர்கள், நீள் செவ்வக அட்டையில் ரேட் வாரியாக டிக்கெட்டுகளை அடுக்கிக் கொண்டு மெதுவாக இயங்கும் நாஞ்சில் ஏரியா கண்டக்டர்கள், மரியாதையாக நடத்தி மணி அடித்து பஸ்ஸை வழிநடத்தும் கொங்கு ஏரியா கண்டக்டர்கள், பில்கேட்ஸே ஏறினாலும் பிச்சைக்காரனைப் போல் மதிக்கும் சென்னை கண்டக்டர்கள் என டவுன் பஸ்களில் மட்டும் எத்தனை வகை?&lt;br /&gt;&lt;br /&gt;மினி பஸ், ஷேர் ஆட்டோ/டாடா மேஜிக் கண்டக்டர்களில் இருந்து தொலைதூர பேருந்து கண்டக்டர்கள் வரை பல ஜாதியினர் இருந்தாலும், பெரும்பாலான கண்டக்டர்கள் இரண்டே பிரிவுகளில் தான் அடங்குவார்கள். கவர்மெண்ட், பிரைவேட்.&lt;br /&gt;&lt;br /&gt;கவர்மெண்ட் கண்டக்டர்கள் என்றால், எப்படியாவது சாம, பேத, தண்டங்களைப் பயன்படுத்தி அரசு போக்குவரத்து கழகங்களில் நுழைந்து விடுபவர்கள். அவ்வளவுதான். அதன்பின் அவர்கள் அனைவரும் ஒரே ஜாதிதான். இவர்களுக்கும் பிரைவேட் கண்டக்டர்களுக்கும் திறமை அளவில் பெரிய வேறுபாடு இருக்காது. சொல்லப்போனால் பிரைவேட் கண்டக்டர்களின் ஸ்மார்ட்னெஸ் இவர்களிடம் அறவே இருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசு கண்டக்டர்கள் அவர்களுக்குள் பேசிக் கொள்ளும் போது அந்த வக்காபுலரி ஒரு இருபது சொச்ச வார்த்தைகளுக்குள் அடங்கிவிடும். நைட் டூட்டி, சொச்சக்காசு, எல்பிஎஃப், சிஐடியு, ஐஎண்டியூசி, பி எம், கலெக்‌ஷன் பேட்டா, செக்கரு, போனஸ், டொச்சு ரூட்டு போன்றவையே அவை. &lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு வகையான பிரைவேட்டில் தான் மினி பஸ் கண்டக்டர் முதல் ஆம்னி பஸ் கண்டக்டர் வரை அடங்குவார்கள். கூட்டி கழித்துப் பார்த்தால் எந்த வாகனமாய் இருந்தாலும் இவர்களின் சம்பளத்தில் பெரிய வேறுபாடு இருக்காது. மாவுக்கேத்த பனியாரம் என்பது போல கலெக்சனுக்கு ஏற்பவே இவர்கள் சம்பளம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களின் கனவே எப்படியாவது அரசு போக்குவரத்து கழகத்தில் இணைந்து விட வேண்டும் என்பது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கூட்டத்தில் தான் பல வகையான பர்சனாலிட்டிகளைப் பார்க்கலாம். இசை அமைத்தவர் கூட மறந்து விட்ட பாடல்களை ஞாபகமாக வைத்து, சிச்சுவேஷன் பாடல் கேசட் தயாரிப்பவர்கள், காக்கியாக இருந்தாலும் பூட் கட், ஷார்ட் குர்தா என டிரெண்டுக்கு ஏற்ப தைத்துப் போடுபவர்கள், வாகனத்தில் ரெகுலராக வரும் கல்யாணமாகாத பெண்களுக்கு இடம் போட்டு மனதில் இடம் பிடிப்பவர்கள், கூட்டம் எவ்வளவு இருந்தாலும், பாடல் எவ்வளவு சத்தமாக ஒலித்தாலும், அரை டிக்கட் பிரச்சினை, லக்கேஜ் பிரச்சினை என எல்லாவற்றையும் சமாளித்து கடைசி டிக்கட் கிழித்த உடனேயே அசிஸ்டெண்ட் கண்டக்டரிம் கணக்கை சொல்லும் அளவுக்கு தசாவதானிகள் என பல வகை உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;70-90 களில் கண்டக்டர் வேலைக்கு வந்தவர்கள் பெரும்பாலும் தந்தை, உறவினர்களைப் பின்பற்றி வந்தவர்களாகத்தான் இருந்தார்கள். பி யூ சி யோ, பத்தாம் வகுப்போ பெயிலாகியோ, நூல் பிடித்து பாஸ் செய்தவர்களுக்கோ போக்கிடம் போக்குவரத்து துறையாகத்தான் இருந்தது. 90களுக்குப் பின் கண்டக்டராக வந்தவர்களை குடும்ப வறுமையே உள்ளே தள்ளியிருக்கும். இப்போது கூட புதிதாக எந்த வாகனத்திலாவது கண்டக்டராக ஏறுபவர்களின் பின்னால் வசதிக் குறைவே முக்கிய காரணியாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கால இளைஞர்களின் விருப்பத் தொழில்களில் கண்டக்டர் பணிக்கு கடைசி வரிசையில் தான் இடம் தான் இருக்கிறது. கவர்மெண்டில் கிடைக்காட்டி என்ன பண்ணுவது? என்பதே இவர்களின் முன்னால் இருக்கும் கேள்விக்குறி.&lt;br /&gt;&lt;br /&gt;ட்ரைவராக வருபவர்களுக்கு இந்த பிரச்சினை பெரிய அளவில் இல்லை. நல்ல தொழில் தெரிந்தவர்களுக்கு வழக்கமான நேரம் போக, டூரிஸ்ட் பஸ் ஓட்டுதல், நீண்ட தூரப் பயணங்களுக்கு இணையாகப் போகுதல் என பல வழிகளிலும் வருமானம் கிடைக்கும். 60 வயதானால் கூட பொறியியல் கல்லூரிகள், பள்ளிகளின் வாகன ஓட்டுநராக இருந்து சமாளிக்குமளவுக்கு சம்பளம் பெறலாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;72க்குப் பின் தான் இந்த கவர்மெண்ட், பிரைவேட் பிரிவு. அப்போதைய காங்கிரஸுக்கு ரத்தம் பாய்ச்சியவர்கள் பண்ணையார்களும், பெரும் பஸ் முதலாளிகளான மதுரை டி வி எஸ், பொள்ளாச்சி மகாலிங்கம், திருச்சி, தஞ்சையில் கோலோச்சிய ராமன், சக்தி விலாஸ் போன்றவர்களும்தான். காங்கிரஸின் பெரும்பாலான எம் எல் ஏக்கள் பஸ்ஸுடன் தொடர்புடையவர்கள் தான். திமுகவின் 67 தேர்தல் அறிக்கையில்  ரூபாய்க்கு படி அரிசி போன்ற கவர்ச்சிகர அம்சங்கள் இருந்தாலும், பஸ்களை அரசுடையாக்குவோம் என்ற கோஷமும் இருந்தது. எம்ஜியார் பிரச்சாரம் என்ற பிரம்மாஸ்திரம், இந்தி எதிர்ப்பால் மாணவர் ஆதரவு என்ற நாகாஸ்திரம் ஆகியவையே அண்ணாவுக்கு போதுமானதாக இருந்தது அந்த தேர்தலில்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்புறாத்துணியில் தூங்கிக் கொண்டு இருந்த பஸ் அரசுடமையாக்கம் என்ற அஸ்திரத்துக்கு வேலை கொடுத்தவர் கருணாநிதிதான். 67 அமைச்சரவையில் போக்குவரத்து, பொதுப்பணித்துறை அமைச்சராகப் பதவியேற்று அண்ணா மறைவுக்குப் பின் 69ல் முதல்வரான பின்  காங்கிரஸின் பொருளாதார மூலத்தை அசைக்க அதை எய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;50 பேருந்துகளை மட்டும் முதலாளிகள் வைத்துக் கொள்ளலாம், அதற்கு மேல் உள்ளவற்றை அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட வேண்டும் என்ற ஆணையால் வெறுப்புற்ற மதுரை டி வி எஸ் நிர்வாகம், எனக்கு பஸ்ஸே வேணாம், பார்சல் சர்வீஸ் நடத்திக்கிறேன் என்று மொத்தத்தையும் ஒப்படைத்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்வு  தமிழகத்தில் ஓரளவுக்கு சமூக, பொருளாதார மாற்றங்களை கொண்டு வந்த ஒன்று. தனியார் வேலைகள் குறைவாகவும், மிக மிக குறைவான சம்பளத்துடனும் இருந்ததால் 80,90 களில் ட்ரான்ஸ்போர்ட் கார்பொரேஷன் மாப்பிள்ளைகளுக்கு நல்ல கிராக்கி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;91-96 ஜெயலலிதா ஆட்சியில் ஒருமுறை பஸ் கட்டணம் உயர்த்தப் பட்டது. அப்போதைய நிதி அமைச்சரான நெடுஞ்செழியன் நிருபர்களிடம் பேசும் போது சொன்னார், கோயம்புத்தூர்ல நாலு பஸ் வச்சிருக்கவங்க நாலஞ்சு வருஷத்துல கோடீஸ்வரன் ஆகிடுறாங்க. இவ்வளோ பஸ் வச்சுக்கிட்டு நாம நஷ்டத்துக்கு ஓட்டுறோம் என்று.&lt;br /&gt;&lt;br /&gt;கார்பொரேஷன் கண்டக்டர்கள் நீ ஏறினா என்ன, ஏறாட்டி என்ன என்ற முக பாவத்துடனே பெரும்பாலும் காணப்படுவார்கள். காரணம் அவர்களுக்கு கிடைக்கும் கலெக்‌ஷன் பேட்டா, மற்ற அலவன்ஸுகளுடன் ஒப்பிடும்போது, மிகக் குறைவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தனியார் பேருந்துகளிலோ, சம்பளம் என்பது பேருக்குத்தான். கலெக்‌ஷன் பேட்டாதான் கண்டக்டர்களின் முக்கிய வருமானம். அதனால் அவர்கள், ஆள் ஏற்றுவது, டயத்தை நெருக்கி வண்டி எடுப்பது என்று சகல வித்தைகளையும் காட்ட வேண்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இவற்றை வைத்து கார்பொரேஷனின் நஷ்டத்திற்கு கண்டக்டர்கள் தான் காரணம் என்ற முடிவுக்கு யாரும் வர வேண்டாம். அவர்களின் பங்கு இதில் ஓரளவே.    &lt;br /&gt;&lt;br /&gt;தற்போது அதிக அளவில் டிக்கெட் விலை ஏறியபோதும், ஜெயவிலாஸ் போன்ற தனியார் நிறுவனங்கள், பெரிதும் விலை ஏற்றவில்லை. சொல்லப் போனால் இந்த ரேட்டுக்கு வண்டி ஓட்டினால் திவாலாகிப் போய்விடுவோம், நான் எங்கே போவது என ஜெயலலிதா மடிப்பிச்சை கேட்ட சமயத்தில் தனியார் பஸ் முதலாளிகள் எல்லாம் சொத்துக்களை வாங்கி குவித்துக் கொண்டுதான் இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தனியார் முதலாளிகள் எல்லாம் ரேடியல் டயர் போட்டு, டீசல் உபயோகத்தை குறைக்கிறார்கள். ஆனால் கார்பொரேஷனில் கமிஷன் காரணமாக தொடர்ந்து டயர்களுக்கு ரீ பட்டன் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். எஞ்சின் ஆயில் வாங்குவதில் இருந்து, சகல உதிரிப்பாகங்களுக்கும் கமிஷன். இதில் இரண்டு வண்டிகளுக்கு இடையே பாகங்களை மாற்றிப் போட்டு இரண்டு செட் உதிரிப்பாகங்கள் வாங்கியதாக மோசடி பில்கள் வேறு.&lt;br /&gt;&lt;br /&gt;போக்குவரத்து விஜிலன்ஸ் அதிகாரி பதவியிடமானது, பழிவாங்கப்படும் இடமாகப் பார்க்கப்படுவதால் அங்கே வருபவர்களும் டீமாரலைஸ் ஆகி விடுகிறார்கள். பஸ் டி ஜி பி என்று திரைப்படங்களில் கிண்டல் செய்யப்படும் அளவுக்கு அந்தப் பதவி இருக்கிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;பஸ் இரவு நேரங்களில் ஓட ஜீவாதாரமானது ஹெட் லைட். அதைக்கூட மாற்றுவதில்லை நம் ஆட்கள். எனவே பெரும்பாலான ட்ரைவர்கள், தனியே பல்பு வாங்கி வைத்துள்ளார்கள். இரவு ட்ரிப் எடுக்கப் போகும்முன் அதை மாட்டி விட்டு, இறங்கும் போது கழட்டி எடுத்துச் சென்று விடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்சியில் உள்ள தொழிற்சங்கங்க நிர்வாகிகள் வேலை செய்யத் தேவையில்லை என்ற உயரிய வழக்கமும் இங்கேயிருக்கிறது. டிரைவர், கண்டக்டர்களுக்கு டூட்டி போடும் அதிகாரமும் இவர்கள் கையில் உள்ளதால் எந்த சங்கத்திடமாவது அடைக்கலம் ஆக வேண்டிய கட்டாயமும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இததனை குறைகள் இருந்தாலும் குக்கிராமங்களுக்கும் பஸ் வசதி, ஏழை மாணவர் இலவச பஸ் பாஸ், அரசு சம்பளத்தினால் பல குடும்பங்களுக்கு ஏற்பட்ட உயர்வு என்ற அம்சங்களும் உள்ளன. முழுக்க முழுக்க போக்குவரத்து தனியாரிடமே இருந்தால் இவையெல்லாம் கனவாகவே இருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் குறையெல்லாம்  நல்ல அக்கவுண்டபிலிடி உள்ள சிஸ்டத்தாலும், கடுமையான விஜிலன்ஸ் முறை மூலமும் சரி செய்யக்கூடியவையே. &lt;br /&gt;&lt;br /&gt;சில மாதங்களுக்கு முன் பெரும் மனக் கிலேசத்தில் இருந்த நாளொன்றின் இரவில் அதை அதிகப்படுத்தும் விதமாக  நெருங்கிய உறவினரின் இறப்புச் செய்தி வேறு வந்தது. தனியார் பேருந்தில் பயணிக்கையில் முதல் 15 நிமிடங்கள் ஒலித்த பாடல்களை சரியாக கவனிக்கவில்லை. பின்னர் தான் அவை ஒரே கருத்துப் பிண்ணனியில் அமைந்த  பல்வேறு காலகட்டத்தில் வெளியான பாடல்கள் என்று உணர்ந்தேன். இரண்டு மணி நேரப் பயணத்தில் சுமார் 20 பாடல்கள். காலை முதல் இருந்த மனச் சோர்வு நீங்கி ஒரு தெளிவான மன நிலை பேருந்தை விட்டு இறங்கும் போது கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த கண்டக்டரைப் பார்த்தேன். பெரும்பாலான கண்டக்டர்களைப் போலவே  பிளஸ் டூ பெயிலாகி, வேன், மினி பஸ் என ஒரு சுற்று சுற்றி பின் இன் ஆடி ஓடி தனியார் பேருந்தில் இடம் பிடித்து, லைசென்ஸ் எடுத்து வைத்து கார்பொரேஷனுக்கும், கல்யாணத்துக்கும் காத்திருக்கும் வயதில் இருந்தார். அடுத்த போஸ்டிங்கின் போது ஏதாவது உப தெய்வத்துக்கு சில லட்சங்கள் கொடுத்து, அமைச்சர் அருள் பெற்று விட வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பவராய் தோன்றினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு அரசு கழகத்தில் வேலை கிடைக்காவிட்டால்? 50 வயது வரை அவர்கள் பாஷையில் சொன்னால், ரூட்டில் ஓடுவார். பின்னர் சரியா ஆள் ஏத்தத் தெரியல, வேகம் பத்தலை என கமெண்டுகள் வரும். ஒரு சுபயோகமில்லாத தினத்தில் அவரை கழட்டி விடுவார்கள். ஒரு நாளில் பஸ்ஸிற்குள்ளேயே 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் நடந்த அவர் கால்கள்  எங்காவது அடைக்கலம் புகும்.&lt;br /&gt;&lt;br /&gt;கிடைத்து விட்டால், மாதம் தவறாத சம்பளம், பயணப்படி, பஞ்சப் படி, ஸ்டிரைக் செய்யாமலே கிடைக்கும் போனஸ், போதும் போதும் எனும் அளவுக்கு கிடைக்கும் ஓய்வு, கல்யாண மார்க்கட்டில் கௌரவமான இடம், பிள்ளைக்கு கூட ஐ ஆர் டி டி யில் இட ஒதுக்கீடு, தமிழகம் முழுக்க குடும்பமே இலவசமாக பயணிக்கும் வசதி, சென்னையில் வசிக்கும் பாவப்பட்டர்கள் பொங்கல், தீபாவளிக்கு வர செய்யும் டிக்கட் ரெக்கமண்டேஷன்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சரியான பூசாரியைப் பிடிக்காததும், ஓரளவு வசதி இல்லாததும் எவ்வளவு பெரிய வித்தியாசத்தை வாழ்வில் ஏற்படுத்தி விடுகிறது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.panbudan.com/story/bus-conductors"&gt;பண்புடன் இணைய இதழில் வெளியான கட்டுரை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நன்றி&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பிப்ரவரி 1 இதழின் பொறுப்பாசிரியர் கார்த்திகை பாண்டியன்&lt;br /&gt;&lt;br /&gt;பண்புடன் இதழ் ஆசிரியர் குழு&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1470968473851359111-5168548831445490827?l=muralikkannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muralikkannan.blogspot.com/feeds/5168548831445490827/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1470968473851359111&amp;postID=5168548831445490827' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/5168548831445490827'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/5168548831445490827'/><link rel='alternate' type='text/html' href='http://muralikkannan.blogspot.com/2012/02/blog-post_07.html' title='தமிழ்நாட்டு கண்டக்டர்கள்'/><author><name>முரளிகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15503809310005245433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/-9LwjCz9jyaw/Tv1YpBSgLkI/AAAAAAAAAbM/cbkhikExF40/s220/DSC00675.JPG'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-3795195597109128557</id><published>2012-02-06T11:31:00.000+05:30</published><updated>2012-02-06T11:31:11.054+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><title type='text'>பூவும் பூ சார் இடங்களும்</title><content type='html'>சில நாட்களுக்கு முன், சென்னையில், பேருந்துக்காக காத்து இருந்தபோது, அருகேயுள்ள பூக்கடையில் பூ வாங்கிய பெண் ஒருவர், தன் கணவரிடம் சன்னமான குரலில் பேசியது என் காதில் விழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“துஷ்டிக்கு கட்டுற  மாதிரி இடம் விட்டு கட்டியிருக்காங்க”. கடந்த ஐந்தாண்டுகால சென்னை வாழ்க்கையில் இந்தமாதிரியான அங்கலாய்ப்புகள் கேட்டது மிகக் குறைவு. பூ கட்டும் குடும்பத்திலோ அல்லது அதன் அருகாமை வீடுகளிலோ இருப்பவர்கள் தான் இந்த வார்த்தையைப் பிரயோகப் படுத்துவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அன்பு நண்பர் மருத்துவர்  புருனோ ஒருமுறை சொன்னார் “சென்னையில் வழங்கப்படும் சிகிச்சையை தென் மாவட்டங்களில் கொடுத்தால் மருத்துவருக்கு அடிவிழும்” என்று.&lt;br /&gt;அம்மாதிரி இங்கு கிடைக்கும் பொருட்கள், சேவைகள் ஆகியவை குறைவான தரத்தை கொண்டவையாகவே இருக்கின்றன. அன்பு நண்பர் ஆதிமூல கிருஷ்ணன் சென்னை புரோட்டா சால்னாவின் தரத்தைப் பற்றி சொல்லும் போது, “சாணியில் முக்கி சாப்பிடுவது போல் இருக்கிறது” என்பார். சென்னைவாசிகளுக்கு உண்மையான தரம் தெரிவது இல்லை என்பது மதுரைப் பகுதி மக்களின் உறுதியான எண்ணம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால்தான் திண்டுக்கல்,சேலம்,மதுரை, விருதுநகர்,ஆம்பூர் என பல ஊர்களின் ஸ்பெசல் அயிட்டங்களும் சென்னையில் சக்கைப் போடு போடுகின்றன். சென்னைக்கு உரிய பிரத்யேக அயிட்டமான வடகறியை, சென்னை எல்லையைத் தாண்டி யாரும் சீண்டுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மயிலாப்பூரில், மதுரை மல்லிகையை மட்டுமே கட்டி ஒரு கடையில் மாலை வேளையில் விற்கிறார்கள். முன் தினமே அட்வான்ஸ் கொடுத்தால்தான் கிடைக்கும் நிலையில் அதன் டிமாண்ட் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி பூவிற்கு பெயர் போன, மதுரை ஏரியா பக்கம் பூக்காரர்கள் நிலை எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;பூக்கட்டி விற்பது தற்போது மட்டுமல்ல ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகவே எல்லா ஜாதியினராலும் செய்யப் பட்டு வந்திருக்கிறது. அதற்கு ஆதாரம் பல ஆண்டுகளாக பல்வேறு ஜாதியினரால் மீனாட்சி அம்மன் கோயிலில் இருக்கும் பூக்கடைகள். முன்காலத்தில் பண்டாரம் என்ற பிரிவினர் மட்டும் இத்தொழில் ஈடுபட்டதாக பூக்கடைகாரகள் சொன்னார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;மதுரையைச் சுற்றியுள்ள பூக்கடைகாரர்களின் தினப்படி வாழ்க்கை காலை மூன்று மணியளவில் தொடங்கிவிடுகிறது.&lt;br /&gt;சமயநல்லூர், மேலூர், அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் வரையிலான பூக்காரர்கள் மதுரையிலும், திண்டுக்கலுக்கு அருகிலுள்ளோர் திண்டுக்கலிலும், நிலக்கோட்டை தாலுகா, அதைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ளோர் நிலக்கோட்டையிலும் பூ வாங்குவார்கள் (அவர்கள் மொழியில் உதிரிப்பூ). மதுரைக்கு தூங்கா நகரம் என்ற பெயர் வர இந்தப் பூக்கடைகளும் காரணம். 12 மணிக்கு மேல் தான் பூ வரத்து தொடங்கும். காலை நாலு மணிக்குள் வியாபாரிகள் வாங்கிப் போய்விடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி வாங்கிச் சென்ற பூக்களை தாங்கள் பிடித்து வைத்திருக்கும் வீடுகளில் டெலிவரி செய்து விடுவார்கள். அந்த வீட்டுப் பெண்கள், தங்கள் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, அவசரத்திற்கேற்ப பூக்களை கட்டிக் கொடுப்பார்கள். இதற்கு மல்லிகை, கனகாம்பரம் என்றால் ஆயிரத்திற்கு இவ்வளவு என்றும், கதம்பப் பூவிற்கு பந்துக்கு இவ்வளவு என்றும் கட்டுக்கூலி நிர்ணயித்திர்ப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தீப்பெட்டி ஓட்டுவது, தீக்குச்சி அடுக்குவதை விட இது வருமானம் தர்ம் தொழில் தான். ஆனால் டிமாண்ட் மாறிக் கொண்டேயிருப்பதால் சீரான வருமானம் கட்டிக் கொடுப்பவர்களுக்கு இருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;பூக்கடைக் காரர்கள் ஒருவர், இருவருக்கு மேல் வேளைக்கு வைத்துக் கொள்ள மாட்டார்கள். மாலை கட்டத் தெரிந்த ஒருவர் இருந்தால் போதும். மீதமுள்ளவற்றை அவுட் சோர்சிங் முறையில் செய்து கொள்வார்கள். தற்போது பெரிய நகர பூக்கடைகளில் மட்டுமே பலரை வேலைக்கு வைத்துக் கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சுப முகூர்த்த நாட்கள், தீபாவளி பொங்கல் போன்ற விசேஷ நாட்கள், வெள்ளிக்கிழமைகள், ஆடி மாத அம்மன் பண்டிகளைகள், வழக்கமான வெள்ளிக்கிழமைகளில் பூ வியாபாரம் களை கட்டும். இந்த நாட்களில் விலை அதிகமாகவும் மற்ற நாட்களில் அதில் பாதியாகவும் இருக்கும். இருப்பதிலேயே ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை சமயங்களில் தான் பூ விலை உச்சத்துக்குப் போகும். ஏனென்றால் இந்தப் பண்டிகைகள்தான் வீட்டிலும், அலுவலகத்திலும் கொண்டாடப்படும் நிகழ்வுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது தவிர கூடைகளில் கொண்டு வந்து விற்கும் பெண்கள், பஸ் ஸ்டாண்ட், கோவில் அருகில் கடை போட்டிருக்கும் பெண்கள் ஆகியோர், பெரும்பாலும் கமிசன் வியாபாரிகளிடம் பூ வாங்கி கட்டி விற்பார்கள். இவர்களுக்கு ஆண்களின் சைக்காலஜி அத்துப்படி. கையில் பளபள பிரேஸ்லட், மோதிரத்தை வைத்து புது மாப்பிள்ளை என்று கண்டு பிடித்து விட்டால் எப்படியும் வாங்க வைத்து விடுவார்கள். ஆனால் பெண்களிடம் இவர்கள் ஜம்பம் செல்லாது. இது தவிர இப்போது வீடுகள், கடைகளுக்கு மாத விலை பேசி ரெகுலராக கொடுப்பவர்களும் அதிகரித்து உள்ளார்கள். அவர்கள் சீசனுக்கேற்ப அளவை கூட்டி குறைத்து கொடுப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பூ கட்டும் வீட்டை எளிதில் கண்டு பிடுத்து விடலாம். மல்லி, கனகாம்பரம், சாமந்தி என ஒரு கலவையான வாசனை அடிக்கும். தரை எப்பொழுதுமே ஈரமாக நசநசப்புடன் காணப்படும். வெளியில் பூக்கட்டுவதற்கான வாழை நாரை காய வைத்திருப்பார்கள். இப்போது பலரும் ட்வெயின் நூலை உபயோகிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். செவ்வாய், வெள்ளிகளில் சாம்பிராணி போட்டு வீட்டை புகை மண்டலமாக்கி விடுவார்கள். இல்லையெனில் சிறு சிறு பூச்சிகள், நச்சு உயிரினங்கள் படையெடுக்கத் துவங்கி விடும். ஏனென்றால் பல பெண்கள் குழந்தைகளை அருகில் போட்டுக் கொண்டுதான் பூ கட்டுவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;பூ கட்ட பயிற்றுவிக்கும் போது, முதலில் பேப்பரை கிழித்து, நூலில் கட்டி பழகச் சொல்வார்கள், பின் கதம்பம், கனகாம்பரம் என பழகி, இருப்பதிலேயெ கஷ்டமான மல்லிகைக்கு வருவார்கள். சுப நிகழ்வுகளுக்கு மிக நெருக்கமாகவும், சாதரான உபயோகத்திற்கு நெருக்கமாகவும், துஷ்டிக்கு இடைவெளி விட்டும் கட்டுவார்கள். அடுத்த கட்டம் மாலை போட பழகுதல். இதை பெரும்பாலும் ஆண்களே செய்கிறார்கள். ஒவ்வொரு ஊருக்கும் மாலை கட்டுவதில் ஒரு ஸ்டைல் உண்டு. மதுரைப் பக்கங்களில், ரோஜா மாலை கட்டி முடிந்தவுடன் ஜண்டி எனப்படும் மின்னும் பட்டு நூலால் அலங்கரிப்பார்கள். இதனான் பூ உதிர்வது தடுக்கப்படும். இந்த ஜண்டி அடிப்பது ஒரு கலை. மாலையை மேல் உத்திரத்தில் தொங்க விட்டு கீழ் நாரை கால் கட்டை விரலால் பிடித்துக் கொண்டு மாலையின் மேலும் கூழும் சுற்ற வேண்டும். இப்போது இடையில் தெர்மோ கோலால் செய்யப்பட்ட வண்ண அட்டைகளை வைக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;துக்க நிகழ்வுகள் இவர்களுக்கு எதிர்பாராத வருமானம். பெரிய ஆட்கள் இறந்து விட்டால், பார்க்க வருபர்கள் வாங்குவது, கப்பல், தேர் போன்ற வடிவங்களில் பாடை கட்டுவது என பூ ஓடி அடையும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முன் காலத்தில் இத்தொழிலில் இருந்த சீரற்ற நிலை காரணமாக, பலர் வருமானக் குறைவால் அவதிப் பட்டார்கள். ஆனால் இப்பொழுது  நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. பல பூக்காரர்கள் இப்போது கடன் வாங்கி ஐந்து அல்லது ஆறு பவுனுக்கு ஒரு நகையை வாங்கிக் கொள்கிறார்கள். அந்த கடனை தினப்படி வரவு வைத்து அடைக்கிறார்கள். பின் அந்த நகையை பேங்கில் அடகு வைத்து பணம் வாங்கி, அதில் நகை வாங்கி, பின் திருப்பிக் கொள்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் பூக்கடை ஏரியா, கோவையில் சென்ட்ரல் மார்க்கெட் என கட்டிய பூ விற்பனை கேந்திரங்கள் உள்ளன. இவை இரவு பகலாக செயல்படும். குழந்தை பிறந்த சில நாளில் செய்யப்படும் புண்ணிய தானம் முதல், அவன் நூறாண்டு வாழ்ந்து மறைந்தபின் சில நாட்கள் கழித்து செய்யப்படும் கருமாதி வரையிலான விசேஷங்களுக்கு தேவையான எல்லாப் பொருட்களும் கிடைக்கும். இதே போல் மதுரையில் விளக்குத்தூணுக்கு இடப்பக்கம் இருக்கும் இடத்தில் கிடைக்கும். இது போன்ற பகுதிகளில் இருந்துதான் சிறு பூக்கடைக்காரகள் சந்தனம், பத்தி முதலான பொருட்களை கொள்முதல் செய்து கொள்வார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நீங்கள் பூக்கடைக்குச் சென்றிருந்தால் குறிப்பாக கோயில் சார்ந்த பூக்கடைகள். மாலை, கட்டிய பூ, சந்தனம், குங்குமம், பத்தி, கற்பூரம், தேங்காய், பழம் ஆகியவை மட்டும் தான் இருக்கும். ஆனால் இப்போது பார்த்தால் அந்தக் கடைகளில் நெய் விளக்கு, எள் விளக்கு, துளசி மாலை, அருகம் பூ மாலை, எருக்கம் பூ மாலை போன்றவையே அதிகம் காணப்படுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளில் அவள் விகடன், சினேகிதி, மங்கையர் மலர், மல்லிகை போன்ற மகளிர் பத்திரிக்கைகள் ஜாதகம், தோஷம், பரிகாரத்துக்கு  விளக்கு போடுதல், மாலை சாத்துதல் என தீவிரப் பிரச்சாரம் செய்ததில் இந்த போக்கு அதிகமாகிவிட்டது. கணபதிக்கு அருகம்புல், செவ்வாய் முருகன், வியாழன் தட்சிணா மூர்த்தி, வெள்ளி துர்க்கைக்கு எண்ணெஉ, நெய் விளக்கு. சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர், பெருமாளுக்கு துளசி மாலை நெய் விளக்கு , சனி பகவானுக்கு எள் விளக்கு, என இப்பொருட்களே அதிகம் விற்பனையாகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம் முன்னெல்லாம் நோய் ஏற்பட்டால் எம் பி பி எஸ் டாக்டரைத்தான் பார்ப்போம். ஆனால் இப்போது கால லேசாக வலித்தால் ஆர்த்தோ, பசியால் கை நடுங்கினால் கூட நியூரோ என்று ஓடுகிறோமில்லையா?. அதுபோல் கடவுள்களிலும் ஸ்பெஷலிஸ்டுகள் பெருகிவிட்டார்கள். &lt;br /&gt;தட்சிணா மூர்த்திக்கு சுண்டல் மாலை நிறையப் பேர் கேட்குறாங்க, அதனால அடுத்த வியாழன்ல இருந்து அதுவும்  செய்யலாம்னு இருக்கோம் என்றார்கள். விட்டால் வடை மாலையும் ரெடிமேடாய் செய்து வைத்து விடுவார்கள் போலிருக்கிறது. &lt;br /&gt; &lt;br /&gt;முன்பைக் காட்டிலும் இப்போது பூ விலை அதிகரிக்கக் காரணம் அதிகமான உதிரிப்பூ விலையும் கட்டும் கூலியும் தான். மாலை வேளைகளில்தான் தோட்டங்களில் பூ பறித்தலை தொடங்குவார்கள்.  இரவு ஒன்பது, பத்து  மணி வரை கூட பூ பறிப்பார்கள். வெயில் சேராதவர்கள், அருகிலுள்ள கிராமப் பெண்டிர் ஆகியோர் முன்னர் ஆர்வமாக பறிக்க வருவார்கள். இப்போது ஆட்கள் கிடைப்பது தட்டுப் பாடாய் இருக்கிறது என்கிறார்கள். மாலை வேளைகளில் கணவர், பிள்ளைகளுக்கு சமைக்க வேண்டும், நாங்க இருந்தாத்தான் பிள்ளைக படுக்கிதுங்க போன்ற காரணங்கள் சொல்லப்படுகின்றன. சொல்லப் படாத இன்னொரு காரணம் மாலை நேர சீரியல்கள். இனி பூ பறிக்கவும் ஒரிசா காரர்கள் வந்து விடுவார்கள் போலிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பூக்களை பத்திரப்படுத்த, பதப்படுத்த  குளிர்பதன சேமிப்பு அறை நிலக்கோட்டை பகுதியில் இல்லாதது பெரும் குறையாக இருக்கிறது. 84 ஆம் ஆண்டு தொகுதி அதிமுக எம் எல் ஏ அ. பாலுச்சாமி, ஒரு கோடியில் மல்லிகை செண்ட் தயாரிக்க ஆலை நிறுவுமாரு சட்டசபையில் கோரிக்கை விடுத்தார். எம்ஜியாரும் சரி என்றார். அந்த ஆலை இன்னும் வந்த பாடில்லை. அதன்பின் ஏ எஸ் பொன்னமாள் (காங்கிரஸ்), மற்றும் அதற்கடுத்து வந்த பல அதிமுக எம் எல் ஏக்கள் குளிர்பதன  சேமிப்பு அறைக்கு சட்டசபையில் குரல் கொடுத்து வந்துள்ளார்கள்.   &lt;br /&gt;&lt;br /&gt;ரிலையன்ஸ் நிறுவனம், இந்திய அளவில் தங்கள் ரிலையன்ஸ் பிரெஷ் கடைகளுக்காக பல இடங்களில் காய்கறிக்கான வேர் ஹவுஸ் அமைத்து வருகிறது.  அது போல் பூக்களுக்காகவும் வேர் ஹவூஸ் அமைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக தகவல்கள் வருகின்றன. அடுத்து காங்கிரஸ் ஆட்சி மத்தியில் வந்தால் எப்படியும் வால் மார்ட்டும் உள்ளே நுழைந்து விடும். பிஸ்ஸாவுக்கு கோக் காம்போ போல பூவுக்கு விளக்கு காம்போ வாங்கும் நாளை எதிர்பார்க்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1470968473851359111-3795195597109128557?l=muralikkannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muralikkannan.blogspot.com/feeds/3795195597109128557/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1470968473851359111&amp;postID=3795195597109128557' title='41 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/3795195597109128557'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/3795195597109128557'/><link rel='alternate' type='text/html' href='http://muralikkannan.blogspot.com/2012/02/blog-post.html' title='பூவும் பூ சார் இடங்களும்'/><author><name>முரளிகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15503809310005245433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/-9LwjCz9jyaw/Tv1YpBSgLkI/AAAAAAAAAbM/cbkhikExF40/s220/DSC00675.JPG'/></author><thr:total>41</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-5754739844646232077</id><published>2012-01-02T15:21:00.001+05:30</published><updated>2012-01-02T19:28:43.212+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><title type='text'>2002 ஆம் ஆண்டின் திரைப்படங்கள் – ஒரு பார்வை</title><content type='html'>2001 ஆம் ஆண்டின் மொக்கைப் படங்களால் டயர்ட் ஆகி இருந்த தமிழ் சினிமா துறையையும், ரசிகர்களையும் ஆசுவாசப் படுத்தும்படி இந்த ஆண்டில் சில படங்கள் வெளியாகின.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அறிமுகங்கள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்று பல கிராமியம் சார்ந்த, யதார்த்தக்கதை களன் கொண்ட படங்கள் வருவதற்கு அடித்தளமிட்ட படம் என்று அழகியைச் சொல்லலாம். வட மாவட்ட கதைக்களனை தமிழ் சினிமாவிற்கு வீரியமாக கொண்டுவந்த படம் இதுதான். ஒளிப்பதிவாளர், எழுத்தாளர்  தங்கர் பச்சான் தன் சிறுகதையையே அழகியல் ததும்ப படமாக்கினார். அன்று 30 வயதான பல ஆண்களை மூக்கு சிந்த வைத்த படம். &lt;br /&gt;&lt;br /&gt;இன்று சக போட்டியாளர்களாக விளங்கும் சிம்புவும், தனுஷ்ஷும் நாயகர்களாக அறிமுகம் ஆனது இந்த ஆண்டில்தான். எங்க வீட்டு வேலன் என்னும் படத்தை தன் சிறு வயதிலேயே அனாயாசமாக சுமந்திருந்தாலும், மோனிஷா என் மோனலிஷா வில் ஒரு பாட்டுக்கு வாலிப தோற்றத்தில் ஆடியிருந்தாலும், நாயகன் என்னும் முத்திரையுடன் சிம்பு அறிமுகமானது இந்த ஆண்டு வெளியான காதல் அழிவதில்லை என்னும் படம் மூலம் தான். டி ஆர் தன் மகனுக்காக தமிழ் மக்களையும், பிரகாஷ் ராஜ், சீதாவையும் கடுப்படித்தார். இந்தப் பட அறிமுகம் சார்மி பின் தெலுங்கில் ஒரு ரவுண்டு வந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;செல்வராகனுக்கும் இதை அறிமுக ஆண்டு என சொல்லலாம். ஆனால் அபிசியலாக சொல்ல முடியாது. கஸ்தூரி ராஜா இயக்கத்தில் தன் பெயரைப் போட்டுக் கொண்டார். யுவனின் அருமையான  பாடல்கள் துள்ளுவதோ இளமைக்கு பலம் சேர்த்தது. ஷெரின்னின் கண் பார்வையில் வயசுப் பசங்கள் அனைவரும் சுருண்டார்கள். தனுஷ் இதில் அறிமுகமான போது யார் கணித்திருக்க முடியும், அவர் ரஜினியின் மாப்பிள்ளை ஆவார், தேசிய விருது பெறுவார். படங்களில் காண்பிப்பது போல் ஒரே பாட்டில் உலகப் பிரபலம் அடைவார் என்று.  உண்மையான சிண்ட்ரெல்லா ஸ்டோரியை நாம் லைவ்வாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதே சமயத்தில் தான் இந்தி முதல்வன் ரீமேக்கில் கையைச் சுட்டுக்கொண்ட ஏ எம் ரத்னத்திற்காக பாய்ஸ் படத்தை ஷஙகர் எடுத்துக் கொண்டிருந்தார். இரண்டு படங்களின் மைய இழையும் ஒன்று தான். ஆனால் அப்படம் தோல்வி அடைந்ததுடன் இல்லாமல் அவப் பெயரையும் பெற்றுத்தந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஷங்கரின் உதவி இயக்குநர் பாலாஜி சக்திவேல் சாமுராய் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்தியன், சிட்டிசன் என முன் பிரதிகள் இருந்ததால் இது எடுபடாமல் போனது. ஷங்கரின் இன்னொரு உதவி இயக்குநரான வசந்த பாலனும் இந்த ஆண்டு ஆல்பம் மூலம் அறிமுகமானார். பின் இருவருமே முறையே காதல், வெயில் என தங்கள் குருவின் தயாரிப்பில் தங்களை நிரூபித்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இன்று எஸ் பி முத்துராமன், ராஜசேகர், கே எஸ் ரவிகுமார் வரிசையில் மசாலா இயக்குநராக அறியப்படும் அருவா ஹரி இந்த ஆண்டு தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானார். மதுரை பேக் டிராப்பில் நடுத்தட்டு இளைஞன் வன்முறை பாதைக்கு பயணப்பட்டு பின் மீள்வதை வெற்றிகரமாக சொன்ன படம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;நகைச்சுவை நடிகராக பார்ம் ஆகி விட்ட சிங்கம்புலி இயக்குநராக அறிமுகமான படம் ரெட். அஜீத், மதுரை பேக் டிராப் இருந்தும் படம் மரண அடி வாங்கியது.  &lt;br /&gt;&lt;br /&gt;பேராவூரணி எம் எல் ஏ அருண் பாண்டியன் எம் எல் ஏ ஆகக் காரணமான படம் தேவன். ரேஷன் அரிசி கடத்தலை மையமாக வைத்து தன் நூறாவது படத்தை [உண்மையிலே அவ்வளோ நடிச்சிட்டாரா?] அவரே இயக்கினார். விஜயகாந்த், கார்த்திக் துணை நின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ரோஜா கூட்டம் மூலம் ஸ்ரீகாந்த்தும், பைவ் ஸ்டார் மூலம் பிரசன்னாவும், தமிழன் மூலம் பிரியங்கா சோப்ராவும் இந்த ஆண்டு தமிழுக்கு அறிமுகமானார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;திறமையை நிரூபித்தவர்கள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர்களுக்கு இரண்டாவது படம் ஆசிட் டெஸ்ட். ஒவ்வொரு மனிதனுக்கு உள்ளும் ஒரு கதை இருக்கும். அதை அப்போதைய டிரெண்டுக்கு ஏற்றவாறு இயக்கி வெளியிட்டால் அது வெற்றிதான். ஆனால் இரண்டாம் படம்?. அதில் வெற்றி பெறுபவர்களைத்தான் கோடம்பாக்கம் அங்கீகரிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தீனா படத்தின் மூலம் கவனத்தைப் பெற்ற ஏ ஆர் முருகதாஸுக்கு ரமணா பெரும் பெயரைத் தந்தது. விஜயகாந்த் அரசியலில் இறங்க முதுகெலும்பாக இருந்தது. இப்படம் வெளியான நேரத்தில் அரசுப்பணியில் இருந்த உறவினர் ஒருவரை சந்தித்த போது, “படத்தைப் பார்த்தா வாங்கவே பயமா இருக்குடா”  என்று சொன்னார். அந்த அளவுக்கு ஒரு இம்பாக்டை கொடுத்த படம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்தம் படம் மூலம் கால் வைத்த லிங்குசாமி வேகமெடுத்தது ரன் படத்தின் மூலம். அருமையான பாடல்கள், விவேக் காமெடி, உணர்ச்சிகளை சரியாக காட்டத் தெரிந்த நாயகன், அழகான கதாநாயகி, போதுமான வில்லன் என மக்களைக் கவர்ந்தது இந்தப் படம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நகைச்சுவை படங்கள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆண்டில் ஏராளமான முழு நீள நகைச்சுவைப் படங்கள் வந்தன. பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம், விவரமான ஆளு, ஷக்கலக்க பேபி, சார்லி சாப்ளின், ஒன் டூ த்ரி, தென்காசிப் பட்டணம், சுந்தரா டிராவல்ஸ், நைனா, இதில் சார்லி சாப்ளின் இந்திக்கு நோ எண்ட்ரி என்ற பெயரில் சென்றது. பம்மலும், தந்திரமும் சன் டிவிக்கு விடுமுறை நாட்களில் காலை 11க்கு திரையிட உபயோகப் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஏமாற்றங்கள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;99 படையப்பாவுக்கு பின் மூன்றாண்டுகள் கழித்து வந்த படம் பாபா. மதுரையில் இப்படம் திரையிடப்பட்டிருந்த அரங்கைச் சுற்றி அதிகாலை இரண்டு மணிக் காட்சி காண்பதற்காக  &lt;br /&gt;ஒரு கிமீக்கு ரசிகர் வெள்ளம். இரவு 9 மணியில் இருந்தே பட்டாசு சத்தமும், குரலோசையும் போட்டி போட்டுக் கொண்டிருந்தன. இங்கயே கத்தி தீர்த்துடாதீங்கடா, படத்துக்கும் கொஞ்சம் மிச்சம் வையுங்க என்று பில்லா காலத்து ஆட்கள் அட்வைஸ் பண்ணிக் கொண்டிருந்தார்கள். படம் ஆரம்பித்தது. ஏதோ நியூஸ் ரீல் போல புண்ணிய ஷேத்திரங்கள், சாமியார்கள் என போய்க் கொண்டிருந்தது. ரஜினி ஒரு டர்ன் செய்து ப்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று சொல்லி அறிமுகமாக மொத்த கூட்டத்துக்கும் பியூஸ் போனது.  அவர்கள் பிரகாசமான மீண்டும் மூன்றாண்டுகள் தேவைப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கன்னத்தில் முத்தமிட்டால் என்று மணிரத்னம் வந்தார். ஸ்கின் அலர்ஜி வந்துவிடும் என யாரும் அங்கே போகவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கமர்சியல் ஹிட்டுகள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏ வி எம் ஐந்து ஆண்டு இடைவெளிக்குப் பின் விக்ரம், சரண் காம்பினேஷனில் எடுத்த ஜெமினி நல்ல வசூலைக் குவித்தது. கலாபவனின் மிருக மிமிக்ரி, சேட்டுப் பொண்ணு, ஓ போட்ட பாடல் என கலவை சரியாக அமைந்து வெற்றி பெற்ற படம் இது. இதே ஆண்டு வந்த சாமுராயும், கிங்கும் விக்ரமுக்கு தோல்வியைத் தந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ரெட், ராஜா என படு தோல்விகளுக்குப் பின் அஜீத்துக்கு வாழ்வு தந்தது வில்லன். யூகி சேதுவின் கதை, கே எஸ் ஆரின் திரைக்கதை, அஜீத்தின் நடிப்பு வெற்றிக்குப் போதுமானதாய் இருந்தது. &lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;சூர்யா&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன்னை நினைத்து, ஸ்ரீ என அடிவாங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;விஜய்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழனில் சறுக்கினாலும் யூத்தில் நிலை கொண்டார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1470968473851359111-5754739844646232077?l=muralikkannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muralikkannan.blogspot.com/feeds/5754739844646232077/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1470968473851359111&amp;postID=5754739844646232077' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/5754739844646232077'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/5754739844646232077'/><link rel='alternate' type='text/html' href='http://muralikkannan.blogspot.com/2012/01/2002.html' title='2002 ஆம் ஆண்டின் திரைப்படங்கள் – ஒரு பார்வை'/><author><name>முரளிகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15503809310005245433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/-9LwjCz9jyaw/Tv1YpBSgLkI/AAAAAAAAAbM/cbkhikExF40/s220/DSC00675.JPG'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-5748940591637418392</id><published>2011-12-25T11:14:00.000+05:30</published><updated>2011-12-25T11:14:46.046+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>கார்ல் மார்க்ஸ் வளர்த்த பசுமாடு</title><content type='html'>நண்பனொருவனின் காலம் கடந்த திருமணத்தின் போது நடந்த மது விருந்தில் பொது நண்பன் மூலம் அறிமுகமாகி, பழைய புத்தகக்கடை வைத்திருந்த காரணத்தினால்  நெருக்கமானவர் கார்ல்மார்க்ஸ் (எ)  சிவசுப்ரமணியன். அவர் தந்தை சித்த வைத்தியர். உடனே அவரை அகத்தியர், போகர் ரேஞ்சுக்கு கற்பனை செய்து விடாதீர்கள். ஒரு சித்த வைத்தியசாலையில் உதவியாளராய் இருந்து காய்ச்சல்,தலைவலி மற்றும் வயிற்றுவலி போன்ற எவர்கிரீன் நோய்களுக்கான சூரண பார்முலாவை கற்றுக் கொண்டு தனியே கடை போட்டவர். இலவச இணைப்பாக ஓம வாட்டர் செய்யும் பார்முலாவையும் லவட்டிக் கொண்டு இருந்தவர். &lt;br /&gt;&lt;br /&gt;அந்த பார்முலாதான் இப்போதும் கார்ல் மார்க்ஸின் மூலதனமாக இருந்து வருகிறது. சுற்று வட்டார குழந்தைகள், பாஸ்ட் புட் கஸ்டமர்கள், கோபமுற்ற மனைவிகளின் கணவர்கள் ஆகியோருக்கு வரும் அஜீரணக் கோளாறுகளை கார்ல் மார்க்ஸ் ஓம வாட்டர் தான் குணப்படுத்தி வருகிறது. ஓமத்தை இடித்து சில பல பொருட்களை சேர்த்து (ஆமா பெரிய கிரையோஜெனிக் பார்முலா என்று கிண்டலடிப்பார் ஏங்கெல்ஸ்) சுடுதண்ணியில் கலக்கி, டாஸ்மாக்கில் இருந்து பெறப்பட்ட பீர் பாட்டில்களில் அடைத்து கார்ல் மார்க்ஸ் ஓம வாட்டர் என்ற லேபிளை ஒட்டிவிட்டால் தோழர் ஒரு வாரம் இயக்கப் பணிக்கு வந்து விடுவார். &lt;br /&gt;&lt;br /&gt;இடை இடையே மாக்ஸிம் கார்க்கி பழைய புத்தகக் கடையில் உட்கார்ந்து கணக்கு வழக்குப் பார்ப்பார். அந்த நேரத்தில் அவர் நண்பர்கள் லெனின், ஸ்டாலின், ரணதிவே மற்றும் ஜோதிபாசு ஆகியோரில் யாராவது அங்கிருப்பார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் அனைவரின் பெயர் மாற்றத்திற்கும் காரணம் 15 ஆண்டுகளுக்கு முன் அத்தெருவிற்கு குடிவந்த காம்ரேட் ஒருவர்தான். அனைவரையும் மூளைச்சலவை செய்து இயக்கத்தில் சேர வைக்குமளவுக்கு அவரிடம் பேச்சுத்திறமை இல்லை. ஆனால் பெண்கள் இருவர் இருந்தார்கள். ரஜினி நல்ல கலருல்ல என்று ஆதங்கப்படும் படி ஆத்மாக்கள் இருக்கும்  ஏரியா அது. அங்கே கும்மிருட்டில் கூட முகம் தெரியும் கலரில் இரண்டு வயசுப் பெண்கள் எண்ட்ரி கொடுத்தால் எப்படி இருக்கும்? மார்பிள் போல இருக்கும் இட்லியில் உப்பு அதிகமான சாம்பாரை ஊற்றி சாப்பிடும் போது கூட அந்தப் பெண்களின் முகம் ஞாபகம் வந்துவிட்டால் ம்ம் டிவைனாக மாற்றிவிடும் அளவுக்கு லட்சணமான பெண்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இதனால் சங்கரய்யா, நல்லகண்ணுவைக் கூட யாரென்று தெரியாத  அந்த ஏரியா வயசுப் பையன்கள்  அனைவரும் கம்யூனிசத்தை தழுவலானார்கள். ஞானஸ்னானம் செய்யும் போது பெயர்களை மாற்றுவது போல தங்கள் பெயர்களையும் மாற்றிக் கொண்டார்கள். கவனமாக ராகுல சாங்கிருத்தயன் என்னும் பெயரை மட்டும் தவிர்த்து விட்டார்கள். ஏனென்றால் அது மச்சினன் பெயர். ஆனால் பரிதாபமாக ஒன்றிரண்டு வருடங்களில்அவர்கள் வீடு மாறிப் போய்விட அம்மை போனாலும் தழும்பு நிரந்தரம் என்னும் கதையாக பெயரும், கம்யூனிஸ ஆதரவும் மட்டும் இவர்களிடம் தங்கிவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;சில மாதங்களுக்கு முன் ஒருநாள் கார்ல்மார்க்ஸ் என்னிடம் வந்து, ஒரு பசுமாடு வளர்க்கணும் தோழர், உங்களுக்குத்தான் கிராமத்துல நிறைய சொந்தக்காரங்க இருக்காங்களே, ஏதாச்சும் ஒண்ணை அமைச்சு விடுங்க என்று கேட்டுக் கொண்டார். காரணம் கேட்ட போது, சில நாட்களுக்கு முன் எம்ஜியார் பாட்டைக் கேட்டதாகவும், அதில் இருந்த &lt;br /&gt;&lt;br /&gt;“தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு, சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசுமாடு”&lt;br /&gt;&lt;br /&gt;என்ற வரிகள் கவர்ந்து விட்டதாகவும் கூறினார். மேலும் அது லட்சுமி என்றெல்லாம் ஓவராக பீல் பண்ணினார். &lt;br /&gt;&lt;br /&gt;உழைப்புக்கு உருவகமான காளை மாடுதானே கம்யூனிசத்திற்கு அடையாளம். பசுமாடு பூர்ஷ்வா இன குறியீடாயிற்றே என்ற சிந்தனை எனக்கு வந்தாலும், இவர் என்ன பிரசங்கம் கேட்டா கம்யூனிஸ்ட் ஆனவர், பிகருக்காக ஆனவர் தானே என சமாதானப் படுத்திக் கொண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;பசுவுக்காக அலையும் போதுதான் இத்தனை ரகங்கள், சூட்சுமங்கள் இருக்கிறது என்பதே தெரியவந்ததே. சாதாரண மாடே 100 சிசி பைக்கை விட அதிக விலை விற்கிறது. அதில் கூட இனிசியல் போதும். இதில் சிங்கிள் பேமண்ட். ஈனப் போகும் மாட்டுக்கு தனி விலை.  ஆர்வமாய்த்தான் இருந்தது. தோழர் கூட கேட்டார். நீங்க  கூட ஒண்ணு வாங்கலாமே என்று.&lt;br /&gt;&lt;br /&gt;மார்க்ஸுக்கு சொந்த வீடு. மாடு கட்ட சிறிது இடமும் இருந்தது. நான் இருப்பதோ வாடகை வீடு. முதல் மாடி. மகன் ஓடினாலே கீழே இருந்து கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுவார்கள். ஆசை இருக்கு மாடு வளர்க்க, அதிர்ஷ்டமிருக்கு ஸ்கிரீன் சேவராக்க. &lt;br /&gt;   &lt;br /&gt;ஒரு வழியாக நாப்பத்தஞ்சாயிரத்துக்கு படிந்தது. வண்டி வாடகை, தரகு கூலி என அரை லானா ஆகிவிட்டது. பிருந்தா காரட் என்ற பெயரை எங்கள் குழு அதற்கு பரிந்துரைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதெல்லாம் தோழரை புத்தகக் கடையிலோ, பொதுக்கூட்டங்களிலோ காண முடிவதில்லை. மாட்டுடன் ஐக்கியமாகிவிட்டார. கன்றும் ஈந்தது அது. நீண்ட நாட்களுக்குப் பின் தோழர் சீம்பாலில் செய்த இனிப்புடன் எங்களை எதிர்கொண்டார். &lt;br /&gt;&lt;br /&gt;எதற்கு இந்த அவதாரம் என ஏங்கெல்ஸ் நேரடியாகவே கேட்டார். ”ஒரு கம்யூனிஸ்ட்டாக உழைப்பின் அருமையை, விவசாயிகளின் கஷ்டத்தை அறிய” என மேடைப் பேச்சுக்காக தயாரித்திருந்த உரையில் சில பகுதிகளை எங்களிடம் அவிழ்த்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;”யாரையும் சந்தேகி” என எங்கள் பேராசான் எங்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார் என்றோம். தோழர் பிடி கொடுக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர்தான் தெரியவந்தது. தோழரின் எட்டாவது படிக்கும் பெண்ணுக்கு எஸ் எம் எஸ் வந்து கொண்டிருக்கும் சங்கதி. வீட்ல மாடு கண்ணுன்னு இருந்தா வீடு நச நசன்னு இருக்கும், வீட்டு பொம்பளைகளுக்கு அதை ஒதுங்க வைக்கவே நேரம் இருக்காது, வேளை அதிகமா இருக்கும் போது அலங்காரம் பண்ணத் தோணாது,  என்ற யோசனையில் தான் தோழர் பசு வாங்கியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த வீட்டுப் பிகருக்காக கம்யூனிஸ்ட் ஆகிறவன் தன் பெண்ணுக்காக தாலிபான்  ஆவது நமக்குப் புதுசா என்ன?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1470968473851359111-5748940591637418392?l=muralikkannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muralikkannan.blogspot.com/feeds/5748940591637418392/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1470968473851359111&amp;postID=5748940591637418392' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/5748940591637418392'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/5748940591637418392'/><link rel='alternate' type='text/html' href='http://muralikkannan.blogspot.com/2011/12/blog-post_25.html' title='கார்ல் மார்க்ஸ் வளர்த்த பசுமாடு'/><author><name>முரளிகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15503809310005245433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/-9LwjCz9jyaw/Tv1YpBSgLkI/AAAAAAAAAbM/cbkhikExF40/s220/DSC00675.JPG'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-1041611935942016465</id><published>2011-12-24T09:00:00.001+05:30</published><updated>2011-12-24T09:00:00.765+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>திருமங்கலமும் முல்லை பெரியாறும்</title><content type='html'>மீனாட்சி அம்மனின் திருமணத்திற்கு மாங்கல்யம் செய்த ஊர் அதனால் திருமாங்கல்ய ஊர் என வழங்கப்பட்டு திருமங்கலம் எனத் திரிந்ததாக ஒரு கதை இந்தப் பக்கம் உண்டு. இவ்வூருக்கு அருகில் உள்ள ஊரின் பெயர் பன்னிக்குண்டு. ஆதி காலத்தில் பன்னீர் மரங்கள் நிறைந்த இடமாக இருந்ததால் பன்னீர் குண்டு எனப் பெயர் பெற்று இப்போது பன்னிக்குண்டாக மாறிவிட்டது என்ற செய்தியால் திருமாங்கல்ய கதையையும் நம்பத் தொடங்கி இருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;அந்த பன்னிக்குண்டின் இளைய தலைமுறை தங்கள் ஊர் பெயரை வெளியே சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு, ஆதி பெயரான பன்னீர்குண்டையே நிறுவிவிட வேண்டும் என பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறார்கள். ஊரில் உள்ள சைக்கிள், பைக், கார், ட்ராக்டர் முதல் கொண்டு மாட்டு வண்டி வரை உரிமையாளர் பெயரை சிறிதாக எழுதி பன்னீர் குண்டு என்பதை முரட்டாக எழுதி வருகிறார்கள். அவர்கள் கவலை அவர்களுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;திருமாங்கல்யத்துக்கு சாட்சியாக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆவணம் கிடைத்தது. அப்போது பெய்த பெரு மழையால் மக்கள் ஆக்ரமித்த பகுதிகளில் பெரு வாரியாக தண்ணீர் தேங்கி, அரசின் கவனத்துக்கு வந்தது. ஆக்ரமிப்பை அகற்ற சகல துறையினரும் சேர்ந்து வந்த போது மக்கள் தங்களுக்குரிய ஆவணங்களை கொண்டு அதை தடுக்க முயன்றனர். அதில் ஒருவர் கொண்டு வந்த செப்பு பட்டயத்தை பார்த்து அனைவரும் மூர்ச்சை ஆனார்கள். அதில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான யானைகளை குளிப்பாட்ட ஏற்பாடு செய்யப்பட்ட வாய்க்காலே இப்போது ஆக்ரமிக்கப்பட்ட ஓடை என்னும் செய்தி இருந்தது. எங்கள் முன்னோர்கள் தான் யானையை குளிப்பாட்டினார்கள், அதனால் இதை ஒட்டி தங்கிக் கொள்ள எங்களுக்கு திருமலை நாயக்கர் அனுமதி கொடுத்தார் என்று வாதிட்டார் அந்த பட்டய உரிமையாளர்.&lt;br /&gt;ஆனால் இன்றைய திருமங்கலம் நடுத்தர வர்க்கத்தின் அப்பட்டமான பிரதிபலிப்புகளைக் கொண்ட ஒரு சிறு நகரம். சென்ற தலைமுறையினர் பெரும்பாலும் ஈடுபட்டது ஆசிரியர் பணி. இடம் வாங்கி வீடு கட்டி, மகனை சாப்ட் வேரில் தள்ளிவிட்டு சீரியல் பார்த்து பொழுதைக் கழிக்கும் சராசரிகள் நிறைந்த ஊர்.  பொறியியலுக்கு இணையாக பி எட், டீச்சர் ட்ரைனிங் படிக்கும் ஊர் இது. தற்போது அம்மா டீச்சர் எலிஜிபிலிடி டெஸ்ட் என்று அறிவித்த உடனேயே பல ட்ரைனிங் செண்டர்கள் ஆரம்பிக்கப் பட்டு விட்டன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;30,000 ஓட்டுக்கள் உள்ள இந்த ஊரில் சராசரி மாத வருமானம் 1 லட்சத்திற்கு மேல் இருக்கும் குடும்பங்கள் மட்டும் 5000க்கு மேல் இருக்கும். ஆனால் ஒரு டிசைனர் ஷோ ரூமோ, நல்ல திரையரங்குகளோ இல்லாத ஊர் என்பதில் இருந்தே எந்தளவுக்கு சிக்கனமானவர்கள் இங்கு இருப்பார்கள் என்பதனை நீங்கள் புரிந்து கொள்ளலாம். அந்த இடைத்தேர்தல் ஒரு துன்பியல் சம்பவம். &lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் இங்கே அடிதடி அரசியல்வாதிகளை மதிப்பதில்லை. ஒரு உதாரணம். சென்ற திமுக ஆட்சியில், கருணாநிதி குடும்பத்தை கிழி கிழி யென்று அதிமுக பேச்சாளர் கிழித்தார். அதனால் அப்போதைய நகரச் செயலாளருக்கு சம்மன் அனுப்பிய அழகிரி, ”ஏன் அவன் பேச ஆரம்பிக்கும் போதே அடிச்சு நிப்பாட்டலை?” என்று கேட்டார். பதில் அளித்த நகரம், அண்ணே இந்த ஊர்ல அடிதடி பண்ணுனா ஓட்டே போட மாட்டங்கண்ணே என்று பதில் அளித்தார். கோபப்பட்ட அழகிரி, அவரை மாற்றிவிடுமாறு தலைமைக்கு ஓலை அனுப்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து வந்தவரும் சரி. அதே போல் சம்பவங்கள் நடந்தபோது அமைதி காக்கவே முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு ஆண்டுகளாக நடந்த பல நிகழ்வுகளினால் இந்த ஊர் யார் குடியையும் கெடுக்காத சுயநல ஆசாமிகள் கொண்ட ஊர் என்ற எண்ணத்துடன் இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் முல்லை பெரியாறு என் மனதை மாற்றிவிட்டது. பல சங்கங்கள் தாங்களாகவே முன் வந்து உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். கடந்த மூன்று நாட்களாக ஒரு ராணுவ ஒழுங்குடன் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. எந்த சங்கம் போராடுகிறதோ அவர்கள் 100% ஈடுபாட்டுடன் செயல் படுகிறார்கள். பொது மக்களின் ஆதரவும் அமோகம். &lt;br /&gt;&lt;br /&gt;பெருமையாக இருக்கிறது இங்கே இருக்க.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1470968473851359111-1041611935942016465?l=muralikkannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muralikkannan.blogspot.com/feeds/1041611935942016465/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1470968473851359111&amp;postID=1041611935942016465' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/1041611935942016465'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/1041611935942016465'/><link rel='alternate' type='text/html' href='http://muralikkannan.blogspot.com/2011/12/blog-post_24.html' title='திருமங்கலமும் முல்லை பெரியாறும்'/><author><name>முரளிகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15503809310005245433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/-9LwjCz9jyaw/Tv1YpBSgLkI/AAAAAAAAAbM/cbkhikExF40/s220/DSC00675.JPG'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-5626226425420325329</id><published>2011-12-23T09:00:00.003+05:30</published><updated>2011-12-23T09:00:00.876+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><title type='text'>தமிழ்சினிமாவுக்கு வறட்சியான 2001ஆம் ஆண்டு</title><content type='html'>இரண்டாம் முறை பார்க்கும் படியாக ஒன்றிரண்டு திரைப்படங்கள் கூட வராத ஆண்டு என்றால் அது 2001 தான். இது ஏ ஆர் முருகதாஸ், கௌதம் மேனம், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோருக்கு அறிமுக ஆண்டாகவும், சூர்யாவுக்கு (நந்தா) இரண்டாவது அறிமுக ஆண்டாகவும் அமைந்தது. மணிரத்னத்தின் உதவி இயக்குநர் அழகம் பெருமாள் டும் டும் டும் மூலமும், ஒளிப்பதிவாளர் ஜீவா 12பி மூலமும் இந்த ஆண்டு இயக்குநர் அவதாரமெடுத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2000 ஆண்டு முழுவதும் பொறுமை காத்த விக்ரமுக்கு இந்த ஆண்டு ஆரம்பமே பெரும் அடியாக விழுந்தது. விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற படத்தின் மூலம் தேவயானியின் கணவர் விக்ரமை மண்ணுக்கு கொண்டு வந்தார்.  ஆனால் காசி மற்றும் தில் மூலம் விக்ரம் நாயகன் அந்தஸ்தை இந்த ஆண்டு அடைந்தார். ரமணி என்ற பெயரில் எதிரும் புதிரும் என்று வீரப்பன் கதையை எடுத்து படம் வெளி வரும் முன் விசிடியில் 50 நாட்கள் ஓட்டி சாதனை படைத்த தரணி, தில் மூலம் விக்ரமுக்கு கமர்சியல் ஹீரோ அந்தஸ்தை இந்த ஆண்டு கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வானத்தைப் போல, வல்லரசுவின் வெற்றிக்குப் பின் பெரும் சக்தியாக மாறவிருந்த விஜயகாந்தை கவிழ்த்தவர்கள் வாஞ்சி நாதனும், நரசிம்மாவும். நரசிம்மாவின் இயக்குநரும், பத்திரிக்கையாளரும், வேலாயுதத்தின் ஒரிஜினலை இயக்கியருவருமான திருப்பதிசாமி படம் முடிவதற்குள் இறந்தது பெரும் சோகம். ஆண்டின் பிர்பகுதியில் வந்த தவசி விஜயகாந்த்துக்கு ஆசுவாசம் கொடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;விஜய்க்கு வழக்கம் போல பிரண்ட்ஸ் என்ற மலையாள ரீமேக்கின் மூலம்  சுமாரான வெற்றியும், பத்ரி என்ற தெலுங்கு ரீமேக்கின் மூலம் தோல்வியும் கிடைத்தது. பிரண்ட்ஸ் மூலம் தமிழுக்கு நல்ல வசனமும், காமெடி சேனல்களுக்கு வருமானமும் கிடைத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;தீனாவின்  மூலம் அஜீத்துக்கு தலை என்னும் பட்டப் பெயர் கிடைத்தது. சிட்டிசன் மூலம் சுமாரான தோல்வியும், பூவெல்லாம் உன் வாசம் மூலம் படு தோல்வியும் கிடைத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;கமல்ஹாசன் ஆளவந்தான் என்ற படத்தைக் கொடுத்து பலரை கடனாளியாக்கினார். தவசி வெற்றிப் படம் என்று சொல்லுமளவுக்கு ஆளவந்தானின் தோல்வி அமைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுந்தர் சி யும் தன் பங்குக்கு உள்ளம் கொள்ளை போகுதே, ரிஷி, அழகான நாட்கள் என்று மொக்கை போட்டார். மாயன் மூலம் நாசரும் நம்மை துன்புறுத்தினார். சிங்கீதம் சீனிவாசராவும் லிட்டில் ஜான் என்று பலரை அலற வைத்தார். சேரன், பாண்டவர் பூமி மூலம் குழப்பமான கருத்தை முன் வைத்தார். 60ல் வந்திருக்க வேண்டிய அண்னன் தங்கச்சி கதையை கே எஸ் ரவிகுமார் 2001ல் சமுத்திரம் என்ற பெயரில் எடுத்தார். &lt;br /&gt;&lt;br /&gt;மாதவன் நடித்த மின்னலே ஓரளவுக்கு பொழுது போக்கு படமாக அமைந்தது. அந்த ஆண்டுக்கான சிறந்தவைகளாக சுஜாதா கற்றதும் பெற்றதும் இல் பட்டியலிட்டதில் இந்தப் படம் இடம் பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரி மாணவர்கள் கட் அடித்து காலைக்காட்சி போக வாய்ப்பாக வந்த படம் தான் சாக்லெட். மல மல என்று மும்தாஜ் ஆடியதில் அப்பட நாயகிக்கு கால் இஞ்சி ஜல்லி கூட கிடைக்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;குழந்தை தொழிலாளர் பிரச்சினையை வைத்து புது இயக்குநர் ஜானகி இயக்கிய குட்டி கவனிக்க வைத்த திரைப்படம். &lt;br /&gt;ரஜினி பாபாவுக்காக கடும் ஆராய்ச்சியை இந்த ஆண்டில் தான் மேற்கொண்டு இருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;விவேக் (மின்னலே, மஜ்னு), வடிவேல் (பிரண்ட்ஸ், தவசி) மூலம் காமெடி சேனல்களுக்கு நல்ல வருமானம், மற்றும் ஹாரிஸின் நல்ல பாடல்கள் (மின்னலே, மஜ்னு, 12பி) தான் இந்த ஆண்டின் சிறப்பு என்றால் எவ்வளவு வறட்சியான ஆண்டு இது?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1470968473851359111-5626226425420325329?l=muralikkannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muralikkannan.blogspot.com/feeds/5626226425420325329/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1470968473851359111&amp;postID=5626226425420325329' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/5626226425420325329'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/5626226425420325329'/><link rel='alternate' type='text/html' href='http://muralikkannan.blogspot.com/2011/12/2001.html' title='தமிழ்சினிமாவுக்கு வறட்சியான 2001ஆம் ஆண்டு'/><author><name>முரளிகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15503809310005245433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/-9LwjCz9jyaw/Tv1YpBSgLkI/AAAAAAAAAbM/cbkhikExF40/s220/DSC00675.JPG'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-90384714654041641</id><published>2011-12-22T10:58:00.002+05:30</published><updated>2011-12-22T10:58:37.236+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><title type='text'>செகண்ட் ஷோ நிறுத்தப்படுகிறதா?</title><content type='html'>மற்ற பகுதிகளில் எப்படியோ, ஆனால் எங்கள் ஏரியாவில் செகண்ட் ஷோ தான் குடும்பத்தோடு மக்கள் வந்து பார்க்கும் காட்சியாக இருந்தது. அதுவும் மறு வீட்டுக்கு வரும் மாப்பிள்ளையை பெண் வீட்டார் ஒரு படத்துக்காவது நிச்சயம் அழைத்துச் செல்வார்கள். இரவு உணவை ஒன்பது மணி அளவில் முடித்துவிட்டு சீவி சிங்காரித்து மாலையிலே கட்டி ஈரத்துணியில் சுற்றி வைத்திருக்கும் மல்லிகைப்பூவை தலையில் சூடி ஜிகு ஜிகு வென அந்த குடும்பத்தார் இரண்டாம் ஆட்டத்துக்கு கிளம்புவார்கள். திரையரங்கு முன்பாக ஆற்று மணலை கொட்டி வைத்திருப்பார்கள். குடும்பம் குடும்பமாக அந்த மணலில் உட்கார்ந்து கொள்வார்கள். வறு கடலை வண்டி, சோன் பப்டி வண்டி போன்றவை ஒரு மூலையில் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும். முதல் முறை வரும் போது மாப்பிள்ளைக்கு கவனிப்பு பலமாக இருக்கும். டிக்கெட் வாங்கி உள்ளே சென்றதும் ஃபேனுக்கு நேராக மாப்பிள்ளை, பெண் உட்காருமாரு பார்த்துக் கொள்வார்கள். நெருக்கமான காதல் காட்சிகளிலோ அல்லது பாடல் காட்சிகளிலோ மனைவியின் கையைச் சுரண்டி அச்சாரம் போடும் புது மாப்பிள்ளையும், வீட்டார் அடுத்தடுத்து உட்கார்ந்திருப்பதால் சங்கோஜத்துடன் முகத்தில் லேசான வெட்கச் சிரிப்புடன் நெளிந்து கொண்டே படம் பார்க்கும் புதுப் பெண்ணும் பேரழகு. இடைவேளையில் சூடான பஜ்ஜியுடன் டீ, பெண்களுக்கு கோன் ஐஸ் என வீட்டின் கடைக்குட்டிகள் வாங்கி வருவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்து கிராமங்களில் இருந்து மணமான தம்பதிகள் குழந்தைகளுடன்  சைக்கிளில் வருவார்கள். அந்த சைக்கிளை நிறுத்திவிட்டு டோக்கன் வாங்கிக் கொண்டு வரும் அந்த கணவன் தன் மனைவியிடம் சொல்லுவான் “ கணேசன் அருமையா நடிச்சிருக்கிருராம்மா, நேத்து அழுகாத பொம்ப&lt;br /&gt;ளைகளே இல்லையாம். ஸ்டாண்ட்ல சொன்னாக” என்று.&lt;br /&gt;&lt;br /&gt;மனைவியும் அதைக் கேட்டுக் கொண்டே ”ஆமாமா, வெக்கிலு அக்கா கூட மத்தியானம் தண்ணியெடுக்கும் போது சொன்னாங்க” என்றபடியே குழந்தையை தூக்கிக் கொண்டு தங்கப்பதக்கத்தை பார்க்கப் போவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;நாடக காலத்தின் தொடச்சியாக வழங்கி வந்த பர்ஸ்ட் ஷோ, செகண்ட் ஷோ பதப் பிரயோகம் கான்கிரீட் தியேட்டர்கள் வந்த பின்னும் மாறவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;காலைக் காட்சி என்பது வேலையே இல்லாதவர்கள், பள்ளி, கல்லூரி கட் அடித்து வரும் மாணவர்கள் பார்ப்பது. மதியக் காட்சி என்பது வீட்டிலிருக்கும் பெண்கள் தங்கள் தெருப் பெண்களோடு பார்ப்பது. மாலைக் காட்சி என்பது வேலை பார்க்கும் ஆண்கள் தங்கள்   செட்டோடு வந்து பார்ப்பது. செகண்ட் ஷோ தான் குடும்பத்தோடு பார்ப்பது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு படத்தை எப்போது தூக்குவது என்பதை செகண்ட் ஷோ கூட்டத்தை அடிப்படையாக வைத்து தான் முடிவு செய்வார்கள். நேத்து 40 பேர் தான் வந்தாங்க, அதான் இன்னைக்கு படகோட்டிய போடச் சொல்லிட்டேன் போன்ற உரையாடல்கள் சகஜம்.&lt;br /&gt;&lt;br /&gt;சில டீக்கடைகள், பெட்டிக்கடைகள் இந்த செகண்ட் ஷோ முடிந்து வரும் கூட்டத்துக்காகவே காத்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மதுரை, திண்டுக்கலில் இருந்து வாலிபர்கள் கோவைக்குச் செல்லும் போது இரண்டாம் ஆட்டம் பார்த்து விட்டு ஏறினால் காலையில் கோழி கூப்பிட சென்று விடலாம் என்று ஒரு கணக்கோடு படம் பார்க்க போவார்கள். லாட்ஜுகளில் தங்கியிருப்பவர்களுக்கு, அடுத்த நாள் கல்யாணத்துக்கு வந்து மண்டபங்களில் தங்கியிருப்பவர்களுக்கு நேரம் கடத்த உதவியதே இந்த  செகண்ட் ஷோக்கள் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கால சுழற்சியின் விளைவாக இந்த செகண்ட் ஷோ பார்ப்பதற்கான காரணங்கள் அருகி வருவதால் இப்போதெல்லாம் கூட்டமே வருதில்லை. சமீபத்தில் மதுரை மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டத்தில் இதைப் பற்றிய பேச்சு வந்துள்ளது. மதுரை புற நகர் மாவட்டத்தில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் எல்லோரும் பெரும்பாலும் செகண்ட் ஷோ நட்டத்தில் நடந்து வருவதாகவே சொல்லியிருக்கிறார்கள். ஒரு மனதாக இந்தக் காட்சியை நிறுத்தினால் ஆதரவு தருவதாக எல்லோரும் சொல்லியிருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;மனதுக்கு பிடித்த ஒவ்வொன்றாக வாழ்வில் இருந்து விலகிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதை ஈடு கட்டும் விதத்தில் புது வரவுகளும் இருப்பதால்,  டேக் இட் ஈஸி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1470968473851359111-90384714654041641?l=muralikkannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muralikkannan.blogspot.com/feeds/90384714654041641/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1470968473851359111&amp;postID=90384714654041641' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/90384714654041641'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/90384714654041641'/><link rel='alternate' type='text/html' href='http://muralikkannan.blogspot.com/2011/12/blog-post_22.html' title='செகண்ட் ஷோ நிறுத்தப்படுகிறதா?'/><author><name>முரளிகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15503809310005245433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/-9LwjCz9jyaw/Tv1YpBSgLkI/AAAAAAAAAbM/cbkhikExF40/s220/DSC00675.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-5421955037670823834</id><published>2011-12-21T19:53:00.001+05:30</published><updated>2011-12-24T10:16:12.091+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><title type='text'>2000ஆவது  ஆண்டின் திரைப்படங்கள் – ஒரு பார்வை</title><content type='html'>விஜயகாந்த், விவேக் மற்றும் ரஹ்மானுக்கு சிறந்த ஆண்டாக விளங்கிய 2000, பிரபு, மீனா ஆகியோருக்கு தங்கள் நட்சத்திர அந்தஸ்தை இழந்த ஆண்டாக ஞாபகத்தில் இருக்கும். மணிரத்னத்தின் கடைசி வியாபார ரீதியிலான வெற்றிப்படம் அலை பாயுதே இந்த ஆண்டில் தான் வெளிவந்தது. ஹேராம், தெனாலி என வானவில்லின் இரண்டு எல்லைகளைப் போன்ற படங்களை கமல் கொடுத்தது இந்த ஆண்டில்தான். &lt;br /&gt;&lt;br /&gt;விஜயகாந்த்&lt;br /&gt;&lt;br /&gt;சரிந்து கிடந்த கேப்டனின் மார்க்கெட் விக்ரமன் இயக்கிய வானத்தைப் போல படம் மூலம் எழுந்து நின்றது. மொக்கை காமெடி, அரதப் பழசான செண்டிமெண்ட் சீன்கள் இருந்தும் இந்தப் படம் வெற்றி பெற்றது. விகரமனுக்கும் இதுதான் கடைசி வணிக வெற்றிப் படம். என் கதையை சுட்டுவிட்டார் என்று பொருமிக் கொண்டே லிங்குசாமி எடுத்து அடுத்த ஆண்டு வந்த ஆனந்தம் படமும் வெற்றி பெற்றது. தற்போதும் மாயாண்டி குடும்பத்தார் போன்ற படங்கள் வெற்றி பெருவதைப் பார்க்கும் போது கூட்டுக் குடும்ப அமைப்புக்கு தமிழக ஆண்கள் ஏங்குகிறார்களோ என்னும் எண்ணம் எழுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து வந்த வல்லரசுவின் வெற்றியே விஜயகாந்தின் வெற்றியாகப் பார்க்கப்பட்டது. ஆக்‌ஷன் படத்தை வெற்றி பெற வைக்க ஹீரோவின் மாஸ் முக்கியம். இப்பட வெற்றியின் மூலம் கேப்டனுக்கு மாஸ் இன்னும் இருக்கிறது என்று வினியோகஸ்தர்கள் முடிவு செய்தார்கள். கமலா தியேட்டரில் இதற்காக அவருக்கு விழா நடத்தி வீர வாளும் கொடுத்தார்கள். இதன்பின் இப்பட இயக்குநர் மகராஜன் இயக்கிய எந்தப் படமும் வெற்றியடைய வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;விவேக்&lt;br /&gt;&lt;br /&gt;கிக்கிரி பிக்கிரி காமெடிகளைப் பண்ணிக் கொண்டிருந்த விவேக்குக்கு இது திருப்புமுனை ஆண்டு. திருநெல்வேலி படத்தில் தன் காமெடி டிராக்கில் எம் ஆர் ராதா எலிமெண்ட்ஸை கொண்டு வந்தார். அது சின்ன கலைவாணர் பட்டம் வரை அவரை கொண்டு சென்றது. தை பொறந்தாச்சு, பட்ஜெட் பத்மனாபன், ஏழையின் சிரிப்பில், சந்தித்த வேளையில், டபுள்ஸ், சுதந்திரம், குஷி ஆகிய படங்களில் திரையரங்கை அதிர வைத்தார். பாளையத்து அம்மனில் மூட நம்பிக்கைகளை சாடி செய்த காமெடி டிராக்கும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. வின்னர் கைப்புள்ள 2004ல் வரும் வரையில் நம்பர் 1 அந்தஸ்தை இந்த ஆண்டுப் படங்களின் வாயிலாக பெற்றார். &lt;br /&gt;&lt;br /&gt;ரஹ்மான்&lt;br /&gt;&lt;br /&gt;தால் பட வெற்றிக்குப் பின்னர் இந்தி மற்றும் ஹாலிவுட்டுக்கு ஷிஃப்ட் ஆகும் முன் ரஹ்மான் இசையமைப்பில் இந்த ஆண்டு அலைபாயுதே, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ரிதம் மற்றும் தெனாலி ஆகிய படங்கள் வந்தன. இதில் தெனாலி தவிர அனைத்துப் பாடல்களும் ரஹ்மானின் சிக்னேச்சர் பாடல்களாக அமைந்து விட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;பிரபு &lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் எப்பொழுது ராம நாராயணன் படத்தில் நடிக்கிறாரோ அப்போதே அவர் மார்க்கெட் அவுட் என்பார்கள். ஆனால் பிரபு 99ல் திருப்பதி ஏழுமலை வெங்கடேசாவில் நடித்தும் அவருக்கு அடுத்த ஆண்டு நிறைய படங்கள் வந்தன. பெரும்பாலும் தோல்விப் படங்கள் [மனம் விரும்புதே உன்னை, திருநெல்வேலி, வண்ணத் தமிழ் பாட்டு], . வெற்றி பெற்ற படங்களும் அவரால் வெற்றியடைய வில்லை [தை பொறந்தாச்சு, பட்ஜெட் பத்மனாபன்]. இதனால் அவர் நட்சத்திரத்தில் இருந்து நடிகராக மாறிப் போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;கமல்ஹாசன்&lt;br /&gt;&lt;br /&gt;96ல் அவ்வை சண்முகியின் வெற்றிக்குப் பின் கமல் இந்திக்கு அதை ரீமேக்க போனார். பின் திரும்பிவந்து மருதநாயக புதைகுழியில் விழுந்தார். பெப்ஸி பிரச்சினைக்காக காதலா காதலா என்று சறுக்கினார். எனவே ஹே ராமுக்காக ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. எல்லோரையும் திருப்திப் படுத்தாவிட்டாலும் சிலருக்கு நல்ல திருப்தி அளித்த படம். ஏகப்பட்ட சிம்பாலிக் ஷாட்கள். ஆனந்த விகடன், நாயகனுக்கு பின்னர் இந்தப் படத்துக்கு 60 மார்க் வழங்கியதாக ஞாபகம். இந்தப் படத்தின் மையக்கதை பட வெளியீட்டுக்கு முன்னர் எல்லாப் பத்திரிக்கைகளுக்கும் வழங்கப் பட்டது. அதைப் படித்து விட்டு வந்தால் ஓரளவு புரிந்திருக்கும். முன் தயாரிப்புகளோடு படத்திற்கு வரச் சொல்வது எவ்வளவு அபத்தம்? படத்தில் கதாபாத்திரங்களின் வழியாக பேசப்பட்ட ஆறு மொழிகள் தான் படத் தோல்விக்கு காரணம் என்போரும் உண்டு. மற்ற நாடுகளில் ஒரு மொழிதான் இருக்கும். கூடுதலாக இன்னொரு மொழி பேசப்படும். எனவே அவர்கள் சப் டைட்டிலோ வாய்ஸ் ஓவரோ இல்லாமல் சமாளிக்கலாம். ஆனால் ஏகப்பட்ட மொழிகள் இருக்கும் ஒரு நாட்டில் இந்த மாதிரிப் படங்கள் எடுக்கும் போது சற்று யோசித்திருக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் தாண்டி, “ஓநாயா இருந்து பார்த்தாத்தான் அதோட நியாயம் புரியும்” போன்ற வசனங்களும், இசையில் தொடங்குதம்மா, நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி போன்ற பாடல்களும் இபடத்தை மறக்க முடியாத அனுபவமாக்குகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;தெனாலி – ஜெயராமுக்கு சில வாய்ப்புகளையும்,  ரவிகுமாருக்கு சில கோடிகளையும் சம்பாதித்து கொடுத்த படம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆண்டு வெளிவந்த காதல் ரோஜாவே பட நாயகி பூஜா தான் கமலின் விஸ்வரூபம் பட கதாநாயகி என்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாரதி&lt;br /&gt;&lt;br /&gt;ஞான ராஜசேகரன் இயக்கத்தில் வெளிவந்த பாரதி வெற்றி பெறாவிட்டாலும் கவனிக்கப் பட்டது. அதன் நாயகன் சாயாஜி ஷிண்டே மூலம் தென்னாட்டுக்கு ஒரு வில்லன்/கேரக்டர் ஆர்டிஸ்ட் கிடைத்தான். இளையராஜாவின் இசையில் நிற்பதுவே நடப்பதுவே போன்ற கிளாசிக் பாடல்களும் கிடைத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;என்னம்மா கண்ணு&lt;br /&gt;&lt;br /&gt;துவண்டு கிடந்த சத்யராஜை எழுப்பி உட்கார வைத்த படம். சக்தி சிதம்பரம் சத்யராஜுக்கே உரிய லொல்லை கேரக்டரில் புகுத்தி படத்தை வெற்றி பெறச் செய்தார். இன்றளவுக்கும் சத்யராஜ் நடித்துக் கொண்டிருக்க இந்தப் படம் ஒரு காரணம். இப்பட வெற்றிக்குப் பின் கூடிய பிரஸ்மீட்டில் சத்யராஜ் சொன்னது இது “ இந்தப் பட ரிலீஸுக்கு அப்புறம் தான் நாலஞ்சு புரட்யூசர் வந்திருக்காங்க, வீட்டுக்கு போனெல்லாம் வருது” என்றார். வடிவேலுவும் இரட்டை வேடத்தில் காமெடியில் கலக்கியிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;விஜய்&lt;br /&gt;&lt;br /&gt;பாசில் இயக்கத்தில் ஷாலினி ஜோடியுடன் இளையராஜா இசையில், சார்லி தாமு நட்பில், ஸ்ரீவித்யா அம்மாவாக  இன்னொரு காதலுக்கு மரியாதையாக வரும் என்ற எதிர்பார்ப்பில் சென்றவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஆனால் குஷியின் மூலம் கலக்கலாக திரும்பிவந்தார் விஜய். பிரியமானவளேவும் விஜய்யை காப்பாற்றியது &lt;br /&gt;&lt;br /&gt;அஜீத்&lt;br /&gt;&lt;br /&gt;அறிமுக இயக்குநர் துரை இயக்கிய முகவரி ஓரளவு வெற்றி பெற்றிருந்தாலும், இன்னொரு அறிமுக இயக்குநர் கவி காளிதாஸ் இயக்கிய உன்னை கொடு என்னை தருவேன் படு தோல்வி அடைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றி கொடி கட்டு&lt;br /&gt;&lt;br /&gt;வெளிநாடுகளுக்குப் போகாமல் உள்ளூரிலேயே தொழில் செய்து முன்னேறுங்கள் என்று பார்த்திபன், முரளியை வைத்து  சேரன் மெசேஜ் சொன்ன படம். பாரதி கண்ணம்மாவில் தொடங்கிய பார்த்திபன் - வடிவேலு காம்பினேஷனுக்கு இது உச்சக்கட்ட படம்.  ஏஜெண்டிடம் பனம் கொடுத்து ஏமாந்து கலங்குபவராக சார்லி அசத்தியிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆண்டு தொடக்கத்துக்கு சற்று முன் டிசம்பரில் வெளியான சேது படம் பல இணை,உதவி இயக்குநர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அது இந்த ஆண்டில் தெரியாவிட்டாலும் தற்போது வரை பிரதிபலித்துக் கொண்டுதான் இருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1470968473851359111-5421955037670823834?l=muralikkannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muralikkannan.blogspot.com/feeds/5421955037670823834/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1470968473851359111&amp;postID=5421955037670823834' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/5421955037670823834'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/5421955037670823834'/><link rel='alternate' type='text/html' href='http://muralikkannan.blogspot.com/2011/12/2000.html' title='2000ஆவது  ஆண்டின் திரைப்படங்கள் – ஒரு பார்வை'/><author><name>முரளிகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15503809310005245433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/-9LwjCz9jyaw/Tv1YpBSgLkI/AAAAAAAAAbM/cbkhikExF40/s220/DSC00675.JPG'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-8366499802728388475</id><published>2011-12-20T17:16:00.002+05:30</published><updated>2011-12-20T17:16:30.658+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>தம்பையா</title><content type='html'>ஞாயிறு காலையில் பேப்பரைப் புரட்டிக் கொண்டே குடிக்கும்  இரண்டு டம்ளர் டீ தான் அடுத்த ஆறு நாட்களுக்கான பெட்ரோல் எனக்கு. இன்றும் காலை எழுந்து பார்த்தபோது மனைவியும் குழந்தைகளும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். சென்னையின் வேகத்துக்கு ஈடு கொடுத்து ஓடிய களைப்பு. எழுப்ப மனமில்லாமல் நானே  தயாரிக்கத் தொடங்கினேன். சென்னைக்கு பிழைக்க வருபவன் பிரம்மச்சாரியாய் வந்து பல முன் தயாரிப்புகளுக்கு பின்னரே திருமணம் செய்தால்தான் இந்த ஊருக்கு ஈடு கொடுக்க முடியும். குறைந்தபட்சம் குழந்தைகளாவது சென்னையில் தான் பிறக்க வேண்டும். சிறு நகர/கிராம சூழலில் வாழப்  பழகிய நாற்றுகளை பிடுங்கி வந்து சென்னையில் நட்டுப் பராமரிப்பது சிரமமே. &lt;br /&gt;&lt;br /&gt;மணி எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது. இன்னும் யாரும் எழ எத்தனிக்கவில்லை. ஆறு மாதமாய் துடைக்காமல் இருந்த பைக் ஞாபகம் வர, நைந்து போயிருந்த கைலியில் ஏ4 அளவுக்கு துணியைக் கிழித்துக் கொண்டு கீழிறங்கினேன். வீட்டின் உரிமையாளர் பகுதியில்  இருந்து எப்போதும் கேட்கும் இசையருவி கேட்கவில்லை. பதிலாய் சன்னமான குரலில் புதிய தலைமுறையினர் ஆட்டையாம்பட்டியில் நடைபெற்ற நிகழ்வை அகில உலகுக்கும் அறிவித்துக் கொண்டிருந்தார்கள். உரிமையாளர் மகன் என்றும் இல்லா அதிசயமாய் வேட்டியும் டி சர்ட்டும் அணிந்து கொண்டு செல்லில் பேசியபடியே நடந்து கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதுதான் கவனிக்கிறேன். உரிமையாளர் உயிரை விட்டிருந்தார். துணியை பெட்ரோல் டேங்க் பையில் சொருகிவிட்டு, செல்லில் இருந்து காதை விடுவித்திருந்தவனிடம் போய் சன்னமான குரலில் எப்போ? என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;”ராத்திரி 10 மணிக்கு டிவி பார்த்துக்கிட்டுருக்கும் போது நெஞ்சு வலிக்கிறமாதிரி இருக்குன்னார். கால் டாக்ஸி கூப்புடுறதுக்குள்ள உயிர் போயிடுச்சு” என்றான். &lt;br /&gt;&lt;br /&gt;சுற்றும் முற்றும் பார்த்தேன். அவர் குடும்பத்து ஆட்களைத் தவிர யாரும் இல்லை. என் முகக் குறிப்பை கவனித்தவன், சொந்தக் காரங்களுக்கு எல்லாம் தகவல் சொல்லிட்டேன். மயானத்துக்கு தம்பி போயிருக்கிறான். 11 மணிக்கு எடுக்கப் போறோம். எல்லாரும் பத்து பத்தரைக்குள்ள வந்துடுவாங்க என்றான். &lt;br /&gt;&lt;br /&gt;அடப்பாவி பத்து மணிக்கு நடந்திருக்கு. வீட்டுல குடியிருக்குறவங்களுக்கு கூட சொல்லலை. சொந்தத்துக்கு கூட காலையில தான் சொல்லி இருப்பான் போல. சொல்லாத இடத்துல நமக்கு என்ன வேலை என அப்படியே மெதுவாக நகர்ந்து தெரு முனை டீக்கடையை நோக்கிச் சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மாஸ்டர் டீ கிளாஸில் அரை கொள்ளளவுக்கும் குறைவாக ஊற்றிக் கொண்டிருந்தார். அடப்பாவி, இதைக் குடிச்சா நாக்கு கூட நனையாதேடா என்று நினைக்கும் போது மின்னலாக தம்பையாவின் நினைவு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வெண்கலச் செம்பு நிறைய சின்னம்மாவிடம் காப்பி வாங்கிக் குடித்துவிட்டு தம்பையா சொன்னதுதான் இது. &lt;br /&gt;&lt;br /&gt;தம்பையா ஞாபகம் வந்ததைத் தொடர்ந்து ஊரும், ஊரில் சாவு விழுந்தால் நடக்கும் சம்பிரதாயங்களும் என் மனதை ஆக்ரமித்தன. &lt;br /&gt;&lt;br /&gt;முதலில் அந்த வீட்டுப் பெண்டிரிடம் இருந்து கேவலும், பின் விசும்பலும் கிளம்பும். அக்கம் பக்கத்துக்காரர்கள் சம்மனில்லாமல் ஆஜராவார்கள். கால் கட்டைவிரலை சேர்த்துக்கட்டு, மண்ணெண்ணெய் வாய்ல ஊத்து, சாணி, நெல்லு வச்சு விளக்குப் பொருத்து என தடாலடியாய் வேலை நடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்து வீடுகளில் இருந்து மர பெஞ்ச், சேர் வகையறாக்கள் அணிவகுக்கும். வந்தவர்கள் அவற்றில் உட்காந்து கொண்டு வியூகங்களை வகுத்து கொண்டு இருப்பார்கள். வாடிப்பட்டு தப்பு செட்டுக்கு ஒரு ஆள், சங்குக்கு ஒரு ஆள், தேர் கட்ட மூங்கிலுக்கு ஒரு ஆள், தந்தி ஆபிசுக்கு ஒரு படிச்ச பையன் என திசைக்கொருவராக அம்புகளைச் செலுத்திக் கொண்டு இருப்பார்கள். இதற்கிடையே காப்பி ஒரு ரவுண்டு  வந்திருக்கும். இந்த அம்புகளுக்கு முன்னால் ஒரு பிரம்மாஸ்திரம் ஏவப்பட்டிருக்கும். அதுதான் தம்பையா. அவனுக்குத்தான் அந்த ஊரோடு தொடர்புடைய அனைவரின் உறவுக்காரர்களும் அவர்களின் தற்போதைய வசிப்பிடங்களும் அத்துப்படி. செல் வராத காலத்தில், என்னைக்குச் செத்தாலும் தம்பையா இல்லாத நாளிலே சாகக்கூடாது   என்று கூட பேசிக் கொள்வார்கள். சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினான் என்றால் நான்கு மணி நேரத்தில் ஒரு சுற்று சுற்றி வந்து விடுவான். &lt;br /&gt;&lt;br /&gt;தந்தை சிறு வயதில் இறந்த காரணத்தினால் பொருளாதாரத்தில் வலுவிலந்த அவன் குடும்பத்தை அவனது காக்கா வலிப்பு நோயும்  தன் பங்குக்கு சோதித்தது. 10 வயதில் எழவு சொல்ல ஆரம்பித்தவன் அம்பானி செல் வந்த போது ஆயிரத்தை தொட்டிருந்தான். சிறு  வயதில் அவன் தான் எங்களுக்கு கிசு கிசுக்கள் சப்ளை செய்தவன். கோடி வீட்டு குத்தாலம்மா இறந்த செய்தியை சொன்ன உடன் அவள் மருமகள் 100 ரூபாய் சுருக்குப் பையில் இருந்து எடுத்துக் கொடுத்தாள் என்ற செய்தியின் பின்னர்தான் நான் மன்னர்கள் வாரிசு பிறந்த தகவலைச் சொன்ன தாதிக்கு முத்து மாலை பரிசளிப்பார்கள் என்பதையே நம்பத் தொடங்கினேன். &lt;br /&gt;&lt;br /&gt;சில பெண்கள் இறந்த போது மௌனமாய் அழுத சம்பந்தமில்லாத ஆண்கள், சில முதல் மரியாதைகள் என எங்கள் பதின்மத்தை தம்பையா சுவராசியப் படுத்தியிருந்தான்.                                      &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஆறேழு வருடங்களில் பலரும் பிழைப்புக்காக சென்னை, கோவை என புலம் பெயர்ந்திருந்தனர். ஊரில் யாராவது இறந்தால் தம்பையாதான் வழியனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறான். &lt;br /&gt;&lt;br /&gt;சென்ற ஆண்டு ஊர் திருவிழாவிற்கு சென்றிருந்த போது, பெரியப்பா, பாட்டி காரியத்துக்கு வராமல் டிமிக்கி கொடுத்திருந்த  தன் மச்சினனிடம் சொன்னதும் உடன் ஞாபகம் வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;”நல்ல காரியத்துக்கு தான் வெத்தலை பாக்கு வச்சு அழைப்பாங்க, கெட்ட காரியம்னா கேட்ட உடனே கெளம்பி வந்துடணும், இல்லைன்னா உன் வீட்டுக் காரியத்தை நீயே செய்யுற மாதிரி ஆயிடும்” &lt;br /&gt; &lt;br /&gt;ஒரு கணம் யோசித்துப் பார்த்தேன். செல்லில் இருந்து மனைவியை அழைத்து விஷயத்தைத் சொல்லி உடனே கீழே வா என்றேன். கைலியை மடித்து கட்டிக் கொண்டு அவர்கள் பகுதிக்குள் நுழைந்து நான்கு பிளாஸ்டிக் சேரை வெளியில் எடுத்துப் போட்டு சுவாதீனமாக உட்கார்ந்து கொண்டேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1470968473851359111-8366499802728388475?l=muralikkannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muralikkannan.blogspot.com/feeds/8366499802728388475/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1470968473851359111&amp;postID=8366499802728388475' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/8366499802728388475'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/8366499802728388475'/><link rel='alternate' type='text/html' href='http://muralikkannan.blogspot.com/2011/12/blog-post_8459.html' title='தம்பையா'/><author><name>முரளிகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15503809310005245433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/-9LwjCz9jyaw/Tv1YpBSgLkI/AAAAAAAAAbM/cbkhikExF40/s220/DSC00675.JPG'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-4657642332310413411</id><published>2011-12-20T11:34:00.002+05:30</published><updated>2011-12-20T11:34:47.685+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><title type='text'>விஸ்வரூபத்தை எதிர்நோக்கி</title><content type='html'>மோசர்பியர் ஷோ ரூமில் கிட்டத்தட்ட எல்லா தமிழ்படங்களின் சி டி யும் கிடைக்கிறது என்ற தகவல் கிடைத்தவுடன் அங்கு சென்ற நான் நீண்ட நேரமாக துழாவிக் கொண்டேயிருந்ததைப் பார்த்த விற்பனை உதவியாளர் அருகில் வந்து ”என்ன படம் சார் வேண்டும்?” எனக் கேட்டார்.  “மங்கம்மா சபதம்” என்ற பதிலைக் கேட்ட அடுத்த நொடியிலேயே அதை எடுத்துக் கொடுத்தார். &lt;br /&gt;&lt;br /&gt;சிரித்தபடியே, இந்த பழைய சபதம் இல்லைங்க, கமல்ஹாசன் நடித்த படம் வேண்டும் என்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;“இங்க வேலைக்கு வர்றதுக்கு முன்னாடி பஜார்ல வேலை பார்த்தேன். 15 வருஷத்துல யாருமே இந்தப்  படத்தை எங்கிட்ட கேட்டதில்லை” என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி கமலின் மசாலா படங்களிலேயே மட்டமான மசாலாவைகூட நான்கைந்து முறை பார்த்த ரசிகன் நான். பார்த்தாலே பரவசம் படத்தை பிறழ் மனநிலை உள்ளவர்களால் மட்டுமே இரண்டாவது முறை பார்க்க முடியும். அதைக்கூட கமலின் சிறப்புத் தோற்றத்துக்காக மூன்று முறை பார்த்தவன் நான். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் என்ன சொல்லுங்கள், இந்த விஷயத்தில் ரஜினி ரசிகர்களை மட்டும் அடித்துக் கொள்ளவே முடியாது. நாட்டுக் கொரு நல்லவன் படத்தை நான்கு முறை தொடர்ந்து பார்த்தவர்கள், ரா ஒன்னில் ரஜினி இருக்கிறார் என்றதுமே முதல் காட்சிக்கே ஓடிப் போய் நரகாசுரனின் ஆதரவாளராக மாறியவர்கள் என அவர்களின் டிராக் ரெக்கார்ட் அமோகம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது கூட பாருங்கள், கோச்சடையான் என்ற பெயரை அதிகார பூர்வமாக ரஜினி ஓகே செய்தாரா என்பது கூட தெரியாது. ஆனால் மதுரை கோச்சடைப் பகுதியில் வாழும் ரஜினி ரசிகர்கள் ஆடித் தீர்த்து விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;விருமாண்டி படம் வெளியான அன்று, வெளி மாநில தலைநகரம் ஒன்றில் இருந்தேன். படம் பார்க்க வழி இல்லாததால் அன்று இரவு இணையத்தில் ஏதாவது விமர்சனம் வந்திருக்கிறதா என தேடிய போது, தமிழில் விமர்சனம் வெளியாயிருந்ததைப் பார்த்தே  இணைய தமிழ் உலகத்துக்கு வந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;முதலில் நான் அறிந்து கொண்டது, ரஜினியின் ஆதரவுப்படை இங்கே மிக அதிகம் என்பது. இரண்டாவது  கமலைப் பற்றி தொடர்ந்து எழுப்பப்பட்ட காப்பியடித்தல், எதார்த்தமின்மை (திரையுலகிலும், பொது வெளியிலும்] சார்ந்த குற்றச்சாட்டுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹேராம், அன்பே சிவம் படங்களைப் பார்த்த பின்னர், முன்னை விட அதிகமாக  என்னுள்  விஸ்வரூபம் எடுத்திருந்த கமலின் பிம்பம் லேசாக கலையத் தொடங்குவதைப் போல எனக்குத் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து அது போலவே கசப்பான உணர்வுகள். தசாவதாரம் படம் வெளியான நேரத்தில் தமிழ்மணம் முழுப்பக்கத்திலும் அந்தப் படத்தைப் பற்றிய செய்திகளே நிறைந்திருந்தன. அதில் பாதிக்கும் மேலே படத்தின் உள்ளடக்கத்தை விமர்சித்தே இருந்தன. உன்னைப் போல் ஒருவனுக்கு வந்த விமர்சனங்களும் அப்படியே. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடைப்பட்ட காலத்தில் பாலா, அமீர், சசிகுமார், வெற்றி மாறன், செல்வராகவன், ஜனநாதன், சீனு ராமசாமி, சற்குணம் என பல புதிய இயக்குநர்களின் படங்கள் வெகுவாக சிலாகிக்கப்பட்டன. என்னடா இது புதிதாக வந்தவர்கள் எல்லாம் சிக்ஸராக அடித்துக் கொண்டிருக்க இவர் ஒன்று, இரண்டுக்கே தடவிக் கொண்டிருக்கிறாரே என்று கோபம் கூட வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆறு ஏழு மாதங்களில் மீண்டும் ஒரு மன மாற்றம். பாலா, செல்வராகவன்,சசிகுமார் மற்றும் சற்குணம் ஆகியோரின் சமீபத்திய படங்கள் ஒரு செய்தியைச் சொன்னது. இரண்டு, மூன்று நல்ல படங்களை மட்டுமே இவர்களால் கொடுக்க முடியும். அதற்கு மேல் எல்லாமே ரீமிக்ஸ் தான் செய்ய முடியும் என்பதுதான் அது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அளவுகோலில் கமலை நிறுத்திப் பார்த்தால் கமலின் மீது வந்த கோபம் குறைந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;கமல் 30 வருடங்களுக்கும் மேலாக துறையின் ரசனை மாற்றங்களை சமாளித்து தன் இருப்பை உணர்த்திக் கொண்டேயிருக்கிறார்.  மாற்று முயற்சிகளை யாருமே யோசிக்காத சூழ்நிலையில் [ 80-99 ஆண்டுகளில், முக்கியமாக நடிகர்களில்] அதை முன்னெடுத்துச் சென்றது கமல் தானே.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் உலக தரத்தை நோக்கி தமிழ் சினிமாவை கொண்டு செல்லும் ராஜபாட்டையை போடாமல் இருந்திருக்கலாம். வழியே புலப்படாத காட்டில் ஒற்றையடிப் பாதையை போட்டவர் அவர்தான். இப்போது கட்டமைக்கப் பட்டுக் கொண்டிருக்கும் பாதைக்கு அவரும் ஒரு முக்கிய காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; தமிழ்சினிமாவில் தரமான ஐந்து படங்களைக் கொடுத்தவர்கள் என்று எண்ணினால் எத்தனை பேர் அந்த பட்டியலில் இடம் பெறுவார்கள் என்று தெரியாது. ஆனால் கமலின் பெயர் நிச்சயம் அந்தப் பட்டியலில் இடம் பிடிக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;கமல் அவர்களே,  உங்களிடம் இருந்து அன்பே சிவத்திற்க்கு பின்னால் எதுவும் தமிழுக்கு கிடைக்கவில்லை. விஸ்வரூபம் பற்றிய செய்திகள் நம்பிக்கை தரும்படி இருந்தன. ஆனால் இப்போதோ, கதக் எல்லாம் நீங்கள் கற்றுக் கொள்வதாக வந்த செய்திகள் கத்தக் என்று நெஞ்சில் குத்தியதைப் போல் இருக்கிறது.  மீண்டும் ஒரு ஆளவந்தானை சந்திக்கும் திறன் எங்களுக்கு இல்லை. எங்களுக்கும் வயதாகி விட்டது. குடும்பம் குட்டி இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நல்ல படம் குடு தலைவா, இப்போது சினிமா பார்க்க ஆரம்பித்து இருக்கும் என் குழந்தைகளிடம் பெருமையாக நான் உன்னை அறிமுகம் செய்து வைக்க.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1470968473851359111-4657642332310413411?l=muralikkannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muralikkannan.blogspot.com/feeds/4657642332310413411/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1470968473851359111&amp;postID=4657642332310413411' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/4657642332310413411'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/4657642332310413411'/><link rel='alternate' type='text/html' href='http://muralikkannan.blogspot.com/2011/12/blog-post_20.html' title='விஸ்வரூபத்தை எதிர்நோக்கி'/><author><name>முரளிகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15503809310005245433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/-9LwjCz9jyaw/Tv1YpBSgLkI/AAAAAAAAAbM/cbkhikExF40/s220/DSC00675.JPG'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-8454481739206711974</id><published>2011-12-19T09:36:00.002+05:30</published><updated>2011-12-19T09:36:20.810+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரிக்கெட்'/><title type='text'>இம்முறையாவது கிடைக்குமா?</title><content type='html'>91ல் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு நீண்ட சுற்றுப்பயனம் கிளம்பிய போது, நிச்சயம் வெல்வோம் என்று அசார் நம்பியிருப்பாரோ இல்லையோ நான் நம்பினேன். மஞ்ச்ரேக்கர், டெண்டுல்கர் ஆகியோரின் மீது அப்படியொரு அபார நம்பிக்கை. ஆனால் ஆஸி அணியினர், சிட்னியைத் தவிர மற்ற இடங்களில் எல்லாம் நம்மை சட்னியாக்கினார்கள். பிரிவுத்துயர் எங்களை வாட்டுகிறது என அசாருதீன் காலம் எழுதும் அளவுக்கு கும்மாங்குத்து குத்தினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் சச்சின் தலைமையில் அணி செல்லும் போது அவர்களே ஐந்து நிச்சயம், நான்கு லட்சியம் என்று தான் கிளம்பினார்கள். பின்னர் கங்குலி தலைமையில் செல்லும் போது சச்சின்,ட்ராவிட், லட்சுமண் மற்றும் சேவாக்கின் பேட்டிங்கால் தொடர் வெற்றிக்கு அருகில் சென்றோம். ஆனால் ஸ்டீவ் வாக்கின் கடைசிப் போட்டி, ஓய்வு என்று செண்டிமெண்ட் அலை அதை நமக்கு மறுதலித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கும்பிளேவின் தலைமையில் செல்லும் போது முந்தைய அனுபவங்களால் எதிர்பார்ப்பு ஏதும் இல்லை. ஆனால் அவர்களின் கோட்டையான பெர்த்தில் வெற்றி பெற்ற போது எனக்குக் கிடைத்த மகிழ்சிக்கு அளவேயில்லை. 20-20 கோப்பையை அணி வென்ற போது கூட அப்படிப்பட்ட மகிழ்ச்சியை நான் அடைந்ததில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது மீண்டும் நாம் அங்கே. இப்போது அணியின் மீது காரண காரியத்தோடு நம்பிக்கை வந்துள்ளது. இதற்கு பல காரணங்கள். அதில் முக்கிய காரணம் துவக்க ஆட்டக்காரர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எந்த அணி உலக டெஸ்ட் அரங்கில் கோலோச்சும் போதும் அந்த அணியில்   வலுவான துவக்க ஆட்டக்காரர்கள் இருப்பார்கள், இருக்க வேண்டும். துவக்க ஆட்டக்காரர்கள் உள்ளே நுழையும் போது பந்து வீச்சாளர்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள். பந்தும் வித்தை காட்ட தயாராக இருக்கும். முதலில் பேட் செய்த அணி மிகப்பெரிய  ஸ்கோரை குவித்திருந்தால் இன்னும் கடினம். பீல்ட் செய்த களைப்போடு உள்ளே வரவேண்டும். எதிர் அணியோ குதூகல மனநிலையில் உள்ளே வருவார்கள். தம் அணியினருக்கும் போதிய ஓய்வு கொடுக்க வேண்டும், எதிர் அணியினரையும் களைப்படைய வைக்க வேண்டும் என துவக்க ஆட்டக்காரர்களின் பொறுப்பு அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கிந்திய தீவு அணியினருக்கு கிரினீட்ஜும், ஹெய்ன்ஸும் இருந்த வரையில் சரிவு ஆரம்பிக்கவில்லை. கிரினீட்ஜுக்குப் பின் பில் சிம்மன்ஸ் உள்ளே வந்தபோதுதான் செங்கல் உருவப்பட்டது. ஏன் நம் அணியினரே சேவாக் காம்பிர் இணை அபாரமாக ஆடிய பின்னர்தானே நம்பர் 1 நிலையை அடைந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;86ல் இருந்தே ஆஸி அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் விஷயத்தில் யோகம்தான். டேவிட் பூன் – ஜெஃப் மார்ஸ்,  மார்க் டெய்லர்-மைக்கேல் ஸ்லாடர், மேத்யூ ஹைடென் – ஜஸ்டின் லாங்கர் என எந்த சூழ்நிலையிலும் சிறப்பாக ஆடுபவர்கள் வாய்த்தார்கள். இவர்களால் தான் ரிக்கி பாண்டிங் போன்றவர்கள் மஞ்சள் குளித்து வந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;தற்போதைய ஆஸி அணி சரியான துவக்க வீரர்கள் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறது. ஷேன் வாட்சன் அவ்வளவு சிறப்பான டெக்னிக் கொண்டவரல்ல மேலும் காயத்தாலும் அவதிப்பட்டு வருகிறார். பிலிப் ஹுயுஸ், நியூஸிக்கு எதிரே ஆடிய ஆட்டத்தைப் பார்த்த பின்னர் அவர் உள்ளே வர வாய்ப்பே இல்லை எனத் தோன்றுகிறது. வார்னர் மட்டுமே நம்பிக்கை அளிக்கிறார். ஆள் கிடைக்காத காரணத்தால் சிமன் கடிச்சைப் பற்றியெல்லாம் யோசிக்கிறார்கள். நல்ல துவக்க ஜோடி அமையவில்லையென்றால் ஆஸி அணியின் பேட்டிங் ஆர்டரை நம்மாட்கள் கலகலக்க வைத்து விடுவார்கள் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. (ஜாகிர், இஷாந்த புல் பிட்னஸ்ஸில் இருந்தால்). &lt;br /&gt;&lt;br /&gt;நமது துவக்க ஜோடி தற்போது சரியான பார்மில் உள்ளது. சேவக்கை வீழ்த்த மைக் ஆர்தர் பல வியூகங்கள் அமைக்கிறாராம். அவருக்கு தெரியாது சேவாக்குக்கு வியூகங்கள் தேவை இல்லை என்பது. உலக பேட்ஸ்மென்களிலேயே எளிதாக அவுட்டாக்க முடிபவரும் அவர்தான், எளிதாய் அடக்க முடியாதவரும் அவர்தான் என்பது. மூன்றாவது முச்சதம் ஆஸி மண்ணில்தான் என்று முடிவாகிவிட்டது. (ரொம்பத்தான் ஆசைப்படுறமோ?) . கவுதமும் கைகொடுத்தால் இம்முறை ஜெயம் நமக்கே.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1470968473851359111-8454481739206711974?l=muralikkannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muralikkannan.blogspot.com/feeds/8454481739206711974/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1470968473851359111&amp;postID=8454481739206711974' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/8454481739206711974'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/8454481739206711974'/><link rel='alternate' type='text/html' href='http://muralikkannan.blogspot.com/2011/12/blog-post.html' title='இம்முறையாவது கிடைக்குமா?'/><author><name>முரளிகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15503809310005245433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/-9LwjCz9jyaw/Tv1YpBSgLkI/AAAAAAAAAbM/cbkhikExF40/s220/DSC00675.JPG'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-3932920776271670528</id><published>2011-08-19T15:18:00.001+05:30</published><updated>2011-08-19T15:18:04.241+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>ரெ.வெற்றி நிலவன் இளங்கலை (வரலாறு), பொதுக்குழு உறுப்பினர்</title><content type='html'>&lt;br /&gt;துயில் கலைந்த உடன், தெருவில் இருக்கும் சேவல்களை எழுப்பி கூவச் சொல்லிவிட்டு  பத்திரிக்கை முகவரும் நண்பருமான பாலனின் பணியிடத்திற்க்கு சென்று பணிகளை மேற்பார்வையிடுவார் வெற்றி நிலவன். அன்றுவந்த செய்தித்தாள்கள், வார மற்றும் பருவ இதழ்கள் அனைத்தையும் நான்கைந்து கோப்பை தேநீர் துணையுடன் வாசித்து முடிப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் வீட்டில் குளித்து, வெள்ளுடை அணிந்து நகர கழகத்திற்கு வருவார். அங்கு வந்து முரசொலியை சுவாசித்துவிட்டு, அருகிலிருக்கும் பட்டுக்கோட்டை அழகிரி படிப்பகத்து சுவற்றில் எழுத வேண்டிய செய்திகளை எழுதிக் கொடுப்பார். &lt;br /&gt;பின்னர் ஒப்பந்தப்புள்ளி கோராமல் மரம் வெட்டும் விவகாரம், கண்மாய்க்கு நீர் வரவேண்டிய ஓடைகளில் ஆக்ரமிப்பு போன்ற பிரச்சினகளை அலசிவிட்டு நன்பகல் 12 மணி அளவில் நண்பரது அசைவ உணவகத்துக்கு வந்து காசாளர் இருக்கையில் அமர்வார். &lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது ஓரளவுக்கு அவரது பின்புலம்  புலப்பட்டிருக்கும். ஆம் அவர் ரெ.வெற்றிநிலவன், இளங்கலை (வரலாறு), பொதுக்குழு உறுப்பினர், திராவிட முன்னேற்றக் கழகம். &lt;br /&gt;&lt;br /&gt;அண்ணாவின் பேச்சாலும், எழுத்தாலும், கொள்கைகளாலும் கவரப்பட்டு தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டவர். ஜெயச்சந்திரன் என்ற பெயரை வெற்றிநிலவன் என மாற்றிக் கொண்டவர். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முக்கிய தளகர்த்தராக விளங்கியவர். தொடர் வாசிப்புகளால் பகுத்தறிவாளராகவும் விளங்கியவர். &lt;br /&gt;&lt;br /&gt;தன் தாயார் இறந்தபோது, அந்தக் காலத்தில் தீப்பெட்டி என்று ஒன்று இல்லாததால்தான் கொள்ளிப்பானை என்ற வழக்கம் வந்தது. இப்போது அது எதற்கு என பெரியாரின் வார்த்தைகளை பேசி கொள்ளிப்பானை தூக்க மறுத்தவர். ஆனால் தன் ஒரே மகனுக்கு பெயர் சூட்டும் வைபவத்தில்தான் வீட்டில் முதன் முதலாக தன் கொள்கைத் தோல்வியைச் சந்தித்தார்.&lt;br /&gt;இந்தி எதிர்ப்பு போரில் உயிர்விட்ட தாளமுத்து, நடராஜன், அசுரன் என்று வர்ணிக்கப்பட்ட ராவணன், என இவற்றில் ஏதேனும் ஒன்றில்தான் தன் மகன் பெயர் வரவேண்டும் என்று விரும்பினார். ஆனால் மனைவியின் எதிர்ப்பால் பின் வாங்கினார். எண்ணியலின்படி, பிறந்த நட்சத்திரத்திற்க்கு ஏற்ப  ச,சு,செ வில் பெயர் அமையலாம் என்றதும், “செல்ல உதய சூரியன்” என்றார். மனைவி ”சுரேஷ்” என்றார். பின் மிதிவண்டியில் செல்ல உதய சூரியன் என எழுதி திருப்திப் பட்டுக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ச்சியான கழகப் பணிகளால் தலைமையின் கவனத்தை ஈர்த்தார். நகரச் செயலாளர் பதவி கிடைக்க வேண்டிய சூழ்நிலையில், மாவட்ட அரசியல் நிர்ப்பந்தங்களால் வேறொருவருக்கு அது தாரை வார்க்கப்பட்டது. அறிவாலயத்தில் நடந்த ஆலோசனையின் பேரில், ஆறுதல் பரிசாக பொதுக்குழு உறுப்பினர் பதவி வரப் பெற்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் நண்பர் சிறிது முன்கோபப் பேர்வழி. உணவகத் தொழிலுக்கு பொறுமை அவசியம். அதுவும் அவ்வூரில் கூடுதலாகவே தேவைப்படும். நன்றாகவேயிருந்தாலும், ”இவ்வளவு மட்டமான குழம்பை வைத்து வியாபாரம் செய்துதான் இவர்கள் தங்கள் மனைவியருக்கு பூ வாங்கித்தர வேண்டுமா?” என அர்ச்சனை செய்பவர்கள் அங்கே அதிகம். அப்படிப் பட்டவர்களை சமாளிப்பது நண்பருக்கு கடினமான ஒன்று. மேலும், வழக்கமான வாடிக்கையாளர்களின் மனதறிந்து பரிமாறுபவர்களை வேலை வாங்குவதிலும் வெற்றிநிலவன் கைதேர்ந்தவர். &lt;br /&gt;&lt;br /&gt;மூன்று மணி அளவில் கணக்கை ஒப்படைத்துவிட்டு வீட்டிற்கு சென்று ஓய்வெடுத்து விட்டு மாலை கழக அலுவலகத்திற்கு திரும்புவார். இரவானதும் மீண்டும் காசாளர் பணி. கழகம் அறிவிக்கும் அறப் போராட்டம், பொதுக்கூட்டம், தேர்தல் காலங்களுக்கு இந்த நேர அட்டவணை பொருந்தாது. &lt;br /&gt;இதனால் நண்பர் அளிக்கும் மதிப்பூதியமே குடும்பத்தின் வருமானமாக இருந்து வந்தது. 89ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கழகம் வெற்றி பெற்றதும் அவர் மனைவி விடிவுகாலம் வந்ததென அகமகிழ்ந்தார். ஆனால் வெற்றிநிலவனோ தனக்கென சில கொள்கைகளை வைத்திருந்தார். வருடத்துக்கு இரண்டு வேலை வாய்ப்புகள், மாறுதல் உத்திரவுகளுக்கு மேல் அமைச்சர்களை தொந்திரவு செய்யக்கூடாது, அதுவும் அத்தியாவசியமாக தேவைப்படுபவர்களுக்கே என்பது போல. ”ஊதியக்குறைவு மணாளனுக்கு வாழ்க்கைப்பட்ட மங்கையருக்கு மாவரைத்து விற்பதுதான் மாவட்ட ஆட்சியர் உத்தியோகம்” என்னும் புதுமொழிக்கு ஏற்ப அவர் மனைவி அத்தொழில் புரிய தலைப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;96ல் மீண்டும் கழகம் ஆட்சிக்கு வந்தது. வெற்றிநிலவனின் போக்கில் எந்த் மாறுதலும் இல்லை. இப்பொழுது வீட்டில் அவர் மனைவியின் கை கொஞ்சம் ஓங்கத் தொடங்கியிருந்தது. அவருக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக செவ்வாடை அணிந்து ஓம் சக்தி வார வழிபாட்டு மன்றத்தில் இணைந்தார். மகனும் பொறியியலில் பட்டயப் படிப்பு முடித்து ஒரு வேலையில் அமர்ந்தான். கழகத்தில் புதுப்புது முகங்கள் தென்பட்டன. வைகோவின் நண்பராக இருந்தும் அவர் வெளியேறிய போது கழகத்திலேயே இருந்ததால் அவரின் பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு மட்டும் பங்கம் வரவில்லை. ஆனால் எந்தவித ஏற்றமும் கிடைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டிலும், கட்சியிலும் செல்லாக்காசாக அவர் மாறியிருந்த நேரத்தில் தான் அவர் மகனுக்குத் திருமணம் நடைபெற்றது. அப்போது சங்கராச்சாரியார் கைதாகி இருந்தார். வந்த மருமகளோ ரிக், யஜூர் வேதத்தைப் படித்தவளைப் போல ஆச்சாரங்களைக் கடைபிடிக்கத் தொடங்கினார். பிராமணர்களைப் போல ஆக முயற்சிப்பவர்களை “நியோ பிராமணர்கள்” என்று குறிப்பிடும் சமூகம், பிராமணர்களை விட அதிக ஆச்சாரம் கடை பிடிப்பவர்களுக்கான குறியீட்டை கண்டுபிடிக்காதது ஆச்சரியமான ஒன்று.&lt;br /&gt; &lt;br /&gt;2006ல் மீண்டும் கழக ஆட்சி. அவருக்குத்தான் அது பெருஞ்சோதனையாக அமைந்தது. நண்பரின் உணவகத்தின் பொறுப்பை அவரது மகன் ஏற்றிருந்தார். வெற்றிநிலவன் உதாசீனப் படுத்தப்பட்டார். மதிப்பூதியமும் இல்லாது மதிப்பிழந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;மனைவியோ இப்போது வார வழிபாட்டு மன்றத் தலைமைப் பொறுப்புக்கு வந்துவிட்டார். மகனுக்கோ தன் மனைவி கடைபிடிக்கும் ஆச்சாரங்களால் தான் தன் வாழ்வு உயர்ந்ததென்று எண்ணம். வீட்டிலும் மிகவும் அன்னியப்பட்டார். பட்டுக்கோட்டை அழகிரி படிப்பகம் மட்டுமே இப்போது அவரது ஒரே ஆறுதல்.&lt;br /&gt;&lt;br /&gt;பெயரன்கள் இருவர். காலை வேளைகளில் அவர்களை குளிப்பாட்டி, பள்ளிக்கு அனுப்பும் பொறுப்பு இப்போது அவருக்கு. அதனால் காலை உணவுக்கு கவலையில்லை. இரவும் அவர்களுக்கு கதை சொல்லி, சாப்பாடு ஊட்டி, உறங்க வைப்பதால் உணவு கொடுத்து விடுகிறார்கள். ஆனால் மதியம் தான் இறைஞ்ச வேண்டியிருக்கிறது. அண்ணா காலத்து ஆளாயிற்றே. சுயமரியாதை சிறிதாவது இருக்காதா? என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் கழக பொருளாளர் கைதை ஒட்டி நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். கைதாகி, திருமண மண்டபத்தில் இருந்த போது மூன்று மணி அளவில் காவலர்களால் வழங்கப்பட்ட எலுமிச்சை சாதம் தான் இந்த ஆண்டில் அவர் சாப்பிட்ட முதல் மதிய உணவு.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1470968473851359111-3932920776271670528?l=muralikkannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muralikkannan.blogspot.com/feeds/3932920776271670528/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1470968473851359111&amp;postID=3932920776271670528' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/3932920776271670528'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/3932920776271670528'/><link rel='alternate' type='text/html' href='http://muralikkannan.blogspot.com/2011/08/blog-post_19.html' title='ரெ.வெற்றி நிலவன் இளங்கலை (வரலாறு), பொதுக்குழு உறுப்பினர்'/><author><name>முரளிகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15503809310005245433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/-9LwjCz9jyaw/Tv1YpBSgLkI/AAAAAAAAAbM/cbkhikExF40/s220/DSC00675.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-503371763716689095</id><published>2011-08-18T12:26:00.000+05:30</published><updated>2011-08-18T12:26:01.586+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>தற்போது மதுரையை கலக்கும் ஜாதித் தலைவர்கள்</title><content type='html'>மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை பொதுவாக ஜாதிக் கட்சித் தலைவர்கள் என்றாலே அது முக்குலத்தோர் அல்லது தலித்களை முன்னிறுத்தியே இருக்கும். ஒவ்வொரு தேவர் ஜெயந்தியின் போதும் சுவர்கள் மற்றும் பிளக்ஸ் மூலம் முக்குலத்தோரில் யார் லைம் லைட்டில் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம். சேதுராமன் (மீனாட்சி மிஷன்), சேதுராமத் தேவர், வாண்டையார், முருகன்ஜி, பி டி அரச குமார் என தலைவர்கள்  மாறிக் கொண்டேயிருப்பார்கள். தலித்களில் ஜான் பாண்டியன், பசுபதி பாண்டியன், சாத்தை பாக்யராஜ், கிருஷ்ணசாமி, முருக வேல் ராஜன், திருமா வளவன் என தலைவர்கள் மாறிக் கொண்டேயிருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பொதுவாக மற்ற சமுதாயங்களில் இருந்து குறிப்பிட்ட நபரை முன்னிறுத்தி ஆராதிப்பது குறைவாகவே இருக்கும். கரிக்கோல் ராஜ், சவுந்திர பாண்டியன், பாபு நாயுடு என பெயர்கள் அடிபடுமே தவிர தொடர் பிரச்சாரம் குறைவாகவே இருக்கும்.&lt;br /&gt;ஆனால் இப்போது இருவர் அடிக்கடி போஸ்டர்களிலும், பேனர்களிலும் தொடர்ந்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் தனியரசு (கொங்கு வேளாள இளைஞர் பேரவை, மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்), மற்றொருவர்  பெரிஸ் மகேந்திரவேல் (நாடார் மஹாஜன சங்கம்).&lt;br /&gt;&lt;br /&gt;மதுரை மாவட்டத்தில் இதுவரை கொங்கு வேளாளர்கள் மிக ஆக்டிவ்வாக அரசியலில் தங்களை அடையாளப் படுத்திக் கொண்டதில்லை. இப்போது தனியரசின் மூலம் ஒருங்கிணைக்கப் படுகிறார்கள். “எங்களின் தனி அரசே” போன்ற பஞ்ச் வசனங்களுடன் திருமணங்களுக்கும், கோயில் விழாக்களுக்கும் பிளக்ஸ், போஸ்டர்கள் அடிக்கப்படுகின்றன. அவர் மாநிலம் தழுவிய அரசியல் சக்தியாக மாற நினைக்கிறாரோ என்னவோ?&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொருவரான பெரிஸ் மகேந்திரவேல், தொழிலதிபர். உசிலம்பட்டியில் இருக்கும் பெரிஸ் பிஸ்கட் தொழிற்சாலை இவருடைய குடும்பத்தைச் சார்ந்த்துதான். முதன் முதலில் மடிட்சியாவின் (மதுரை மாவட்ட குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு) உசிலை வட்டார இணைச் செயலாளராக இருந்தார். மெதுவாக வளர்ச்சி பெற்று அதில் முக்கியப் பொறுப்புக்கு வந்தார். பின்னர் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி நிர்வாகக்குழு பொறுப்பு, பின்னர் செயலாளர் என அதிலும் முக்கியப் பொறுப்பு. எனவே ஓரளவுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்ய வாய்ப்புள்ள பதவிகளில் இவர் இருக்கிறார்.&lt;br /&gt;தற்போது இவரை வாழ்த்தியும் மதுரையில் பல போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. அரசியல் ஆசை இவருக்கும் துளிர் விடுவதையே இது காட்டுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;எதிர்காலத்தில் இவர்கள் நல்ல முறையில் சமுதாயப் பணி ஆற்ற வாழ்த்துக்கள்&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1470968473851359111-503371763716689095?l=muralikkannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muralikkannan.blogspot.com/feeds/503371763716689095/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1470968473851359111&amp;postID=503371763716689095' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/503371763716689095'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/503371763716689095'/><link rel='alternate' type='text/html' href='http://muralikkannan.blogspot.com/2011/08/blog-post_18.html' title='தற்போது மதுரையை கலக்கும் ஜாதித் தலைவர்கள்'/><author><name>முரளிகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15503809310005245433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/-9LwjCz9jyaw/Tv1YpBSgLkI/AAAAAAAAAbM/cbkhikExF40/s220/DSC00675.JPG'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-2889437408236047654</id><published>2011-08-17T13:47:00.002+05:30</published><updated>2011-08-18T11:12:28.715+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர் விளையாட்டு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>மூன்று முடிச்சு - ரஜினி படமல்ல - தொடர் பதிவு</title><content type='html'>மூன்று முடிச்சு" தொடர்பதிவுக்கு அழைத்த நண்பர் 'பாலகுமார்' அவர்களுக்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விரும்பும் விஷயம்&lt;br /&gt;&lt;br /&gt;1.	திரைப்படங்கள்&lt;br /&gt;2.	புத்தகங்கள்&lt;br /&gt;3.	சாப்பாடு&lt;br /&gt;&lt;br /&gt;விரும்பாத விஷயம்&lt;br /&gt;&lt;br /&gt;1.	அசுத்தம்&lt;br /&gt;2.	நய வஞ்சகம்&lt;br /&gt;3.	சோம்பல்&lt;br /&gt;&lt;br /&gt;பயப்படும் விஷயம்&lt;br /&gt;&lt;br /&gt;1.	உறவுகளுக்குள்ளான பஞ்சாயத்து&lt;br /&gt;2.	வேலையின் நிரந்தரமில்லாத்தன்மை&lt;br /&gt;3.	பிள்ளைகளின் எதிர்காலம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புரியாத விஷயம்&lt;br /&gt;&lt;br /&gt;1.	மகளுக்கு ஒரு நீதி மருமகளுக்கு ஒரு நீதி என்னும் மாமியார்த்தனம்&lt;br /&gt;2.	தன் வீட்டுக்கு ஒரு நீதி புகுந்த வீட்டுக்கு ஒரு நீதி என்னும் மருமகள்தனம்&lt;br /&gt;3.	மிகப் பெரிய அளவில் சாதித்தவர்கள் கூட செண்டிமெண்ட்டை பாலோ பண்ணுவது&lt;br /&gt;&lt;br /&gt;மேஜையில் உள்ள பொருள்&lt;br /&gt;&lt;br /&gt;1.	கணிப்பொறி&lt;br /&gt;2.	தேனீர்க் கோப்பை&lt;br /&gt;3.	குறிப்பு நோட்டு&lt;br /&gt;&lt;br /&gt;சிரிக்க வைக்கும் விஷயம்/மனிதர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;1.	நகைச்சுவை நடிகர்கள் (எப்போதும் கவுண்டமணி, இப்போது சந்தானம்)&lt;br /&gt;2.	ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவே எழுதும் ஓவர் பில்டப் பேட்டிகள்&lt;br /&gt;3.	சில பதிவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது செய்து கொண்டு இருக்கும் காரியம்&lt;br /&gt;&lt;br /&gt;1.	மத்திய அரசு நிறுவனங்களிடம் இருந்து நிதி உதவி பெற திட்ட அறிக்கை              தயாரித்தல்&lt;br /&gt;2.	நண்பர் ஒருவரின் ஆய்வுப் பணி அறிக்கையை திருத்துதல்&lt;br /&gt;3.	சுய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளை ஆராய்தல்&lt;br /&gt;&lt;br /&gt;வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் காரியம்&lt;br /&gt;&lt;br /&gt;1.குறைந்தது  பத்து அறிவு சார் சொத்துரிமை  (பேடண்ட்) வாங்க வேண்டும் (வியாபார ரீதியில் பயன்தரக்கூடிய)&lt;br /&gt;2.ஆடி அல்லது பென்ஸ் கார் (ஹை எண்ட்) ஒன்று வாங்க வேண்டும்&lt;br /&gt;3. ஒரு நல்ல நாவல் எழுத வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்களால் செய்து முடிக்கக் கூடிய விஷயம்&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கூறிய மூன்றும்&lt;br /&gt;&lt;br /&gt;கேட்க விரும்பாத விஷயம்&lt;br /&gt;&lt;br /&gt;1.சாவு/உடல் நலம் குன்றிய செய்திகள்&lt;br /&gt;2. வறுமைச் செய்திகள்&lt;br /&gt;3. சிறுவர்/சிறுமியர் கொலை, கற்பழிப்பு         &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கற்றுக் கொள்ள விரும்பும் விஷயம்&lt;br /&gt;&lt;br /&gt;1.	சரளமான ஆங்கிலம்&lt;br /&gt;2.	கணிதவியல்&lt;br /&gt;3.	இயற்பியல்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிடிச்ச உணவு வகை?&lt;br /&gt;&lt;br /&gt;1.	புரோட்டா, மட்டன் சாப்ஸ், ஆம்லேட்&lt;br /&gt;2.	இட்லி, ஈரல் குழம்பு&lt;br /&gt;3.	தேனீர்&lt;br /&gt;&lt;br /&gt;அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்&lt;br /&gt;&lt;br /&gt;மாறிக் கொண்டேயிருக்கும். இப்போது&lt;br /&gt;&lt;br /&gt;1.விளையாடு மங்காத்தா&lt;br /&gt;2. முத்தமிழே (ராமன் அப்துல்லா)&lt;br /&gt;3. எவண்டி உன்னைப் பெத்தான் (வானம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிடித்த படம்&lt;br /&gt;&lt;br /&gt;இதுவும் மாறிக் கொண்டேயிருக்கும். இப்போது&lt;br /&gt;&lt;br /&gt;1.	இன்செப்சன்&lt;br /&gt;2.	ஆடுகளம்&lt;br /&gt;3.	தென்மேற்கு பருவக்காற்று&lt;br /&gt;&lt;br /&gt;இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான விஷயம்&lt;br /&gt;&lt;br /&gt;1.	காற்று&lt;br /&gt;2.	நீர்&lt;br /&gt;3.	உணவு&lt;br /&gt;&lt;br /&gt;இதை எழுத அழைக்கப்போகும் நபர்&lt;br /&gt;&lt;br /&gt;யார் எல்லாம் இந்த சங்கிலியில எழுதுனாங்கண்ணு தெரியலை. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆண்டு பதிவுலகில் இணைந்து, இன்னும் இந்த ஜோதியில் கலக்காத ஒருவர் இதை தொடரட்டும். (&lt;a href="http://"&gt;உடன்பிறப்பு&lt;/a&gt;, &lt;a href="http://balaraman.wordpress.com"&gt;பலராமன்&lt;/a&gt;,  &lt;a href="http://rajeshjothi.wordpress.com"&gt;ராஜேஷ்&lt;/a&gt; மற்றும் &lt;a href="http://ninaivugalodunaan.blogspot.com"&gt;ரியாஸ் அகமது&lt;/a&gt; ) இதுவரை எழுதலைன்னா, இதை அழைப்பாக ஏற்றுத் தொடரவும் &lt;br /&gt;&lt;br /&gt;-- &lt;br /&gt;நட்புடன், &lt;br /&gt;முரளிகண்ணன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1470968473851359111-2889437408236047654?l=muralikkannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muralikkannan.blogspot.com/feeds/2889437408236047654/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1470968473851359111&amp;postID=2889437408236047654' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/2889437408236047654'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/2889437408236047654'/><link rel='alternate' type='text/html' href='http://muralikkannan.blogspot.com/2011/08/blog-post_17.html' title='மூன்று முடிச்சு - ரஜினி படமல்ல - தொடர் பதிவு'/><author><name>முரளிகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15503809310005245433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/-9LwjCz9jyaw/Tv1YpBSgLkI/AAAAAAAAAbM/cbkhikExF40/s220/DSC00675.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-3489103376061917798</id><published>2011-08-16T13:47:00.000+05:30</published><updated>2011-08-16T13:47:26.572+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>வளையல்</title><content type='html'>எனக்கு வரும் கனவுகள் பெரும்பாலும் நேர்கோட்டிலேயே அமைந்திருக்கும். அதில் பிளாஷ் பேக் உத்திகளோ, பின் நவீனத்துவமோ, மாஜிக்கல் ரியலிஸமோ இருந்ததில்லை. பெரும்பாலும் அந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்தவைகளே மனதில் பதிந்து கனவாக வெளிப்பட்டிருக்கின்றன. சிறுவயதில் கிரிக்கெட் வெறியனாக இருந்த போது தொடர்ச்சியாக கனவில் கமெண்டரி சொல்லி வீட்டிலுள்ளோர் துக்கத்தைக் கெடுத்திருக்கிறேன். சென்னை டெஸ்டில் இம்ரான் சதம் அடித்த அன்று, &lt;br /&gt;&lt;br /&gt;“அப்பா, இம்ரான் கான் நம்ம வீட்டுக்கு வர்ராறாம்பா தயிர் சாதம் ரெடி பண்ணி வைங்கப்பா” என்று உளறினேன். கனவை விட அதிலிருந்த பொருட்பிழைக்கே அதிக கேலிக்கு உள்ளானேன். ஏண்டா அவரே பதான். பிரியாணி ரெடி பண்ணச் சொன்னா பரவாயில்லை, போயும் போயும் தயிர்சாதமா ரெடி பண்ணச் சொல்றே என்று வெறுப்பேறும் அளவுக்கு கிண்டல் பண்ணி விட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நேற்று வந்த கனவு, ஏராளமான மாண்டேஜ் ஷாட்டுகளுடன் கூடிய பாடலைப் போல் வந்தது. முதல் ஷாட்டில் எம்ஜியார் “வளையல் நல்ல வளையல், முத்து முத்தான வளையலுங்க” என்று பாடிக் கொண்டே போனார். பின்னர் ஒரு பெண் உயரமாக வளையலை அடுக்கி “ நான் ஜெயிச்சுட்டேன், எனக்கே முதல் பரிசு” என்று கிறீச்சிட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் ஊரின் முதல் மற்றும் பிரபல வளையல் வியாபாரியான நாராயணன் மாமா, “ம்ம் இந்த மாசம் ஒரு வளகாப்பும் இல்லையே” என்று சலித்துக் கொள்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt; மதுரைக்குச் சென்று ஒரு மார்வாரியிடம் கடைப் பையனாக இருந்து தொழில் கற்று வந்தவர் அவர். கடையில் எம்ஜியார் படத்தை மட்டுமே வைத்திருப்பார். ”படகோட்டி, ரிக்‌ஷாக்காரன்னு எல்லாம் நடிச்சார், ஆனா வளையல் காரரா ஒரு படத்துல கூட தலைவர் நடிக்கலையே என்று அங்கலாய்ப்பார்” &lt;br /&gt;&lt;br /&gt;அதான் படகோட்டியில நடிச்சாரே மாமா என்று கேட்டால், மெயினாவே வளையல்காரரா நடிக்கணும்டா என்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த ஷாட், என்ன புரபோஸ் பண்ணனும்னா, பிளாட்டின வளையல என் கைல மாட்டிச் சொல்லுங்க என்கிறாள் மங்கை ஒருத்தி. உன் இடுப்பே கையளவு தானே இருக்கு, ஒட்டியாணமாவே போட்டு விடுகிறேன் என்கிறான் அம்பானி. &lt;br /&gt;&lt;br /&gt;வரலட்சுமி விரதத்துக்கு வந்தவங்களுக்கு வளையல் குடும்மா என்கிறாள் 100 கிலோ எடையுள்ள மாமியார் ஒருத்தி. ஆகட்டும் அத்தே என்கிறாள் 110 கிலோ எடையுள்ள மருமகள்.&lt;br /&gt;&lt;br /&gt;கார்த்திக்கும் வளையல்காரனாக ஒரு பாட்டுப் பாடுகிறார். மன்சூர் அலிகான் ஹீரோவாக நடிக்கும் ராவணன் என்று தினத்தந்தி செய்தி சொல்லுகிறது. கடைசி வரியில் ஹீரோ வளையல்காரன் என்று முடிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பேப்பரை சுருட்டி எடுத்துக் கொண்டு சொர்க்கத்துக்கு ஓடுகிறேன். நாராயணன் மாமாவை  கண்டுபிடித்து மாமா “மெயின் ஆக்டரே வளையல்காரரா நடிக்கிற படம் வருது” என்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் சிரித்துக் கொண்டே ஒரு வருஷத்துக்கு முன்னாடி எம்ஜியார ஹீரோவா வச்சு வளையல்காரன் அப்படின்னு படமே எடுத்திட்டேன் என்கிறார். அவரது பழைய மார்வாரி முதலாளிதான் பைனான்ஸ் பண்ணினார் என்கிறார். ஏன் இவ்வளோ நாள் ஆச்சு என்கிறேன். நம்பியார் இப்பத்தானே  இங்க வந்தார் என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்க வளையலும், கண்ணாடி வளையலும் தான் பெண்களுக்கு பிடிக்கும். மண் வளையல்ல நிறைய டிசைன் வரும். ரப்பர் வளையல் கைக்கு பாதுகாப்பு என்று அறுக்கிறாள் அவள் விகடன் ரிப்போர்ட்டர். &lt;br /&gt;&lt;br /&gt;பாவம்பா சின்ன நகைக்கடை வச்சான். உள்ள செம்பு, மெழுகு வச்சு தங்க முலாம் பூசி, ஏகப்பட்ட வளையலை கொடுத்து ஏமாத்திட்டாங்க. இப்போ ஊர விட்டே ஓடிட்டான்பா என்று ஒருவனை நினைத்து எல்லோரும் உச்சுக் மொட்டுகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;நான் அவளுக்கு வளையல் போட்டுட்டேன், அதனால அவ எனக்கு தங்கச்சி முறை என்று கனகாவைப் பார்த்துச் சொல்கிறார் சர்க்கரைத்தேவன் விஜயகாந்த். &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு கைல வளையல் போடணும்னு ஆசை. என் வாழ்க்கை பூராம் கை இருந்திச்சு ஆனா வளையல் இல்லை என்று கண்ணீர் விடுகிறாள் விக்ரமன் பட கதாநாயகி. &lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் என்னென்னவோ வளையல் தொடர்பில் கனவாக வந்தது. உணவு இடைவேளையில் நண்பன் சதீஷீடம் இதைப் பகிர்ந்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;”ஆயிலி ஐட்டம் எதுவும் ஹெவியா சாப்பிட்டியா?” என்று ஆரம்பித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ம்கூம் வழக்கம் போல லைட்டத்தான் என்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;”யார் பேரோ சொன்னயே, ஆங் நாராயணன், அவர் இருக்காரா? என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் செத்து பத்து வருஷம் ஆச்சு என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;”மேடம் ஏதும் வளையல் கேட்டு டிமாண்ட் பண்ணினாங்களா?” என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்துல எதுவும் கேட்கலை. இதுக்கு முன்னாடி கூட செயின்,  தோடுன்னு தான் கேட்டிருக்காங்க என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;”ஒரு வேளை நீ படிக்கும் போது, பீஸ் கட்ட உங்கம்மா ஏதும் வளையல் அடகு வச்சு......” என்று இழுத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சேச்சே அப்படியும் எதுவும் நடக்கலை என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;”முறைப் பொண்ணு இல்லேன்னா சின்ன வயசு காதலி வளையல் கேட்டு உன்னால வாங்கிக் கொடுக்க முடியாமப் போயி...” என்றான் சதீஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;அடிக்கடி கே டிவி பார்க்கிறது உன் மனசுக்கு நல்லதில்ல என்றேன் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பிட்டு முடிந்து கேபினுக்கு திரும்பும் போது மனதில் ஒரு எண்ணம் ஓடியது. “ காஞ்சனா படம் போன வாரம் பார்த்தோமே, அது மாதிரி எதுவும் எபக்டோ” என்று. உடனே சிரித்து அதைத் துடைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின் பணியில் மூழ்கி ஒரு கோப்பில் ஆகஸ்டு 16 என்று கையெழுத்திடும் போதுதான் அது ஞாபகத்துக்கு வந்தது. 18 வருடங்களுக்கு முன் ஒரு சுதந்திர தினத்தன்று ஜூனியர் மாணவியை என் நண்பர்கள் வக்கிர பாலியல் கேள்விகளுடன் ராக்கிங் செய்ததை மௌன சாட்சியாய் வேடிக்கைப் பார்த்ததும், அடுத்த நாள் அவள் என்னைத் தேடி வந்து ”பிரின்ஸிபால் கிட்ட கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கேன், நீங்கதான் நடந்ததை அங்க சொல்லணும்” என்று இறைஞ்ச,&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்களுக்காக நான் அதை மறுக்க, அவள் தன் கையில் இருந்த ஒற்றை பிளாஸ்டிக் வளையலை சிம்பாலிக்காக தடவியது மங்கலாக ஞாபகம் வந்தது.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1470968473851359111-3489103376061917798?l=muralikkannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muralikkannan.blogspot.com/feeds/3489103376061917798/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1470968473851359111&amp;postID=3489103376061917798' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/3489103376061917798'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/3489103376061917798'/><link rel='alternate' type='text/html' href='http://muralikkannan.blogspot.com/2011/08/blog-post.html' title='வளையல்'/><author><name>முரளிகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15503809310005245433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/-9LwjCz9jyaw/Tv1YpBSgLkI/AAAAAAAAAbM/cbkhikExF40/s220/DSC00675.JPG'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-5205011333720133128</id><published>2011-07-27T12:40:00.000+05:30</published><updated>2011-07-27T12:40:57.817+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>ஐகாரஸ் அவர்களின் தீர்க்க தரிசனம்</title><content type='html'>2007 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் சென்னை பதிவர் பட்டறை கோலாகலமாக நடந்தது. அதைத் தொடர்ந்து இரு வாரங்களுக்குள் தமிழ்மணம் நிர்வாகம் உட்லண்ட்ஸ் ட்ரைவ் இன்னில் ஒரு பதிவர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது. மா சிவகுமார், பாலபாரதி மற்றும் சென்னைப் பதிவர்கள் அதை ஒருங்கிணைத்திருந்தார்கள். அந்நிகழ்வில் தமிழ்மணம் நிர்வாகம் (சங்கரலிங்கம் அவர்கள் வந்திருந்தார் என நினைக்கிறேன்) பங்கேற்பாளர்களுக்கு ஒரு டி சர்ட் வழங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைய கலந்துரையாடலின் போது ஐகாரஸ் பிரகாஷ் அவர்கள் தமிழ்மணம் தொடர்ந்து நடத்தப் படுவதற்கான பொருளாதார பின்புலங்கள், அதன் சாதக பாதகங்கள் பற்றி கேள்வி எழுப்பினார். பல ஆலோசனைகளையும் வழங்கினார்.&lt;br /&gt;(அச்சமயத்தில் தேன்கூடு திரட்டி வேறு அதன் நிறுவனர் கல்யாண் அவர்களின் திடீர் மறைவால் ஸ்தம்பித்திருந்தது.)&lt;br /&gt;&lt;br /&gt;அதன்பின் ஆழ்வார்பேட்டை கிழக்கு பதிப்பகம் எதிரேயுள்ள மினி ஹாலில் மீண்டும் தமிழ்மண நிர்வாகம் ஒரு சந்திப்பை நடத்தியது. தமிழ்சசி மற்றும் இளா வந்திருந்தனர். அப்போது தசாவதாரம் பட ரிலீஸ். தமிழ்மணமே அப்பட விமர்சனங்களால் தளும்பி வழிந்தது. மேலும் ஆபாச பதிவுகள்/எழுத்துகள் பற்றி மட்டுமே விவாதம் நடந்தது. பொருளாதார சாதக பாதகங்கள் பற்றி எந்த ஆலோசனையையும் நடைபெறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt; கடந்த இரு வருடங்களாக சென்னையில் /பதிவுலகில் இல்லாததால்&lt;br /&gt;அதன்பின் தமிழ்மண சந்திப்புகள் நடைபெற்றதா எனத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilmanam.net/index.html"&gt;தற்போது தமிழ்மணத்தின் அறிவிப்பைப் பார்த்ததும் ஒரு திடுக்கிடல்&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;ஐகாரஸ் அவர்களின் தீர்க்க தரிசனத்திற்கு ஒரு சலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1470968473851359111-5205011333720133128?l=muralikkannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muralikkannan.blogspot.com/feeds/5205011333720133128/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1470968473851359111&amp;postID=5205011333720133128' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/5205011333720133128'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/5205011333720133128'/><link rel='alternate' type='text/html' href='http://muralikkannan.blogspot.com/2011/07/blog-post_27.html' title='ஐகாரஸ் அவர்களின் தீர்க்க தரிசனம்'/><author><name>முரளிகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15503809310005245433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/-9LwjCz9jyaw/Tv1YpBSgLkI/AAAAAAAAAbM/cbkhikExF40/s220/DSC00675.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-1601216773040519529</id><published>2011-07-19T10:34:00.000+05:30</published><updated>2011-07-19T10:34:15.226+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>நெற்றிக்கண் பத்திரிக்கைக்கு கண்டனங்கள்</title><content type='html'>நெற்றிக்கண் பத்திரிக்கையில் கடந்த சில வாரங்களாக ரஜினிகாந்தைப் பற்றி ஒரு தொடர் வந்து கொண்டிருக்கிறது. கிசு கிசு பாணியிலோ அல்லது பதலக்கூர் ஸ்ரீனிவாசலு பாணியிலோ இல்லாமல் நேரடியாக இடம் சுட்டிப் பொருள் விளக்கத்துடன் ரஜினி அவர்களது குடும்ப விஷயங்களை எழுதிக் கொண்டிருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினி லதாவை திருமணம் செய்து கொள்ள என்ன காரணம்?, ரஜினியின் குடும்பத்துக்கு லதா இழைத்த அநீதி, இரண்டு பெண் குழந்தைகளுக்கு அப்புறம் ரஜினி ஆண் குழந்தை வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்கு லதா ஒத்துக் கொள்ளாமல் அவர் வீரியத்தைக் குறைக்க தினமும் உணவில் வேப்பம்பூ ரசம் வைத்துக் கொடுத்தார் என்று அவர்களின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையை குறிவைத்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினியின் சினிமா, அவர் அரசியல் ஆகியவற்றை விமர்சிக்க யாருக்கும் உரிமை உண்டு. ஏனெனில் அவற்றை அவர் பொது வெளியில் வைக்கிறார். ஆனால் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையைப் பந்தி வைக்க இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?&lt;br /&gt;&lt;br /&gt;நெற்றிக்கண்ணுக்கு என்னுடைய வன்மையான கண்டனங்களை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1470968473851359111-1601216773040519529?l=muralikkannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muralikkannan.blogspot.com/feeds/1601216773040519529/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1470968473851359111&amp;postID=1601216773040519529' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/1601216773040519529'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/1601216773040519529'/><link rel='alternate' type='text/html' href='http://muralikkannan.blogspot.com/2011/07/blog-post_19.html' title='நெற்றிக்கண் பத்திரிக்கைக்கு கண்டனங்கள்'/><author><name>முரளிகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15503809310005245433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/-9LwjCz9jyaw/Tv1YpBSgLkI/AAAAAAAAAbM/cbkhikExF40/s220/DSC00675.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-6255173172200269414</id><published>2011-07-18T12:54:00.000+05:30</published><updated>2011-07-18T12:54:09.225+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>கட்ட பொம்மன் வீதியும் கறுப்பு மாருதியும்</title><content type='html'>என்னடா காசை இப்படி இறைக்கிறாய்ங்க? இதுதான் பத்தாம் வகுப்பு முடிந்ததும் ஒரு அரசு பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல் டிப்ளமோ முடித்து, கோவையில் உள்ள ஒரு பம்ப் உற்பத்தி கம்பெனியில் சப் காண்டிராக்டர்களை மேய்க்கும் பணியில் சேர்ந்த செந்திலுக்கு அடிக்கடி மனதில் எழுந்த கேள்வி. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சதுர கிலோமீட்டரில் அதிகப்படியான பேச்சிலர்கள் வாழும் இடம் திருவல்லிக்கேணி என்றால் அதிகப்படியான கஞ்சர்கள் வாழும் இடம் செந்தில் பிறந்த ஊர். அங்கே பிறந்து, வளர்ந்து விட்டு அப்படி கேள்வி எழாவிட்டால் தான் ஆச்சரியம். &lt;br /&gt;&lt;br /&gt;இங்கே ஹோட்டலே இல்லையே! ஆரம்பிச்சா அள்ளிடலாம் என கனவுகளோடு கடை வைத்த பல ராஜகோபால்களை வெறும் கோப்பால் ஆக்கிய ஊர்க்காரனுக்கு ஆரியாஸிலும் அன்னபூர்ணாவிலும் அம்மும் கூட்டம் அதிர்ச்சியளிக்காமல் என்ன செய்யும்?&lt;br /&gt;&lt;br /&gt;வேறு வழியில்லாமல் ஓடிக்கொண்டிருந்த ஒரே தியேட்டரிலும் டைட்டில் போடும் போதுதான் கீழ்வகுப்பு டிக்கட் கொடுக்க ஆரம்பிப்பார்கள். கட்டுக்கோப்பாய் காத்திருந்து அந்த டிக்கெட்டை மட்டுமே வாங்குபவனுக்கு மேல் வகுப்பு டிக்கெட் முதலில் நிறையும் ஊர் ஆச்சரியமளிக்காதா? என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;திருவிழாக்காலங்களில் பிரசாதமாக கிடைக்கும் வாழைப்பழத்தை மட்டுமே பழமாகப் பார்த்த ஒருவனுக்கு, பழமுதிர்ச்சோலையில் குடிக்கப்படும் மாப்பிள்ளை ஜூசைப் பார்த்தால் மயக்கம் வராமல் என்ன செய்யும்?&lt;br /&gt;&lt;br /&gt;காப்பிக்கலர்ல எடுடா அழுக்குத்தெரியாம இருக்கும், பெரிசா தைங்க, வளர்ற பிள்ளை போன்ற உரையாடல்களை மட்டுமே கேட்ட காதுகளுக்கு அலன் சாலியும், லூயி பிலிப்பும் செவ்வாய் கிரக மொழியாய்த்தானே தெரியும்? &lt;br /&gt;&lt;br /&gt;உடன் பணிபுரிவோர், சப் காண்டிராக்டர்கள், தங்கும் இடத்தில் உள்ளோர் என பார்க்கும் நபர்கள் எல்லாம் தாராளவாதிகளாய்த்தான் தெரிந்தார்கள் செந்திலுக்கு எல்லோரும் பெருமைக்கு எருமை மேய்ப்பதாய் தோன்றியது அவனுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அவனின் ஒரே ஆறுதல் புரடக்‌ஷன் யூனிட்டில் இருந்த மணிண்ணா. சுப்பிரமணி என்ற அவர் இயற்பெயர் மணிண்ணா என்றே திரிந்து விட்டிருந்தது. இரண்டு ஏக்கர் நிலம் கோவை புற நகரில். அதில் விவசாயம். இங்கே சி என் சி ஆப்பரேட்டர், வருவது போவது எல்லாம் சைக்கிளில்தான். 15 வருட அனுபவம். வாய்ப்புகள் பல கிடைத்தும் வெளியில் செல்லாமல் கிடைத்ததை வைத்து திருப்திப் பட்டுக் கொண்டிருப்பவர். &lt;br /&gt;&lt;br /&gt;அவரிடம் தான் தன் ஆதங்கத்தை அவன் கொட்டிக்கொள்வான். அவரும் தன் பங்கிற்க்கு ஆறுதல் படுத்துவார். &lt;br /&gt;“நீ இப்போ அடிக்கடி போவயேப்பா, கட்ட பொம்மன் தெரு, சப் காண்டிராக்டரா இருப்பாங்களே, அங்க ரெண்டு ஆர்டர் அதிகமா வந்தாப் போதும் ஒரு வெள்ளை மாருதி வாங்குவாங்க.ஆறே மாசம் தான் கடன் கட்ட முடியாம சாணிப் பவுடரை குடிச்சிட்டு கறுப்பு மாருதியில போவாங்க” &lt;br /&gt;இங்க எல்லாம் ஆடம்பரம் தாம்ப்பா என்று முடிப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவனும் தன் பங்கிற்க்கு ஆசுவாசப் பட்டுக்கொண்டு, ஆமா தொண்ணூறு நாள் கிரடிட்ல ஆர்டர் கொடுக்கிறாங்க. ஆனா ஜவ்வா இழுத்து பேமெண்ட் செட்டில் செய்யுறாங்க. இதை நம்பி வட்டிக்கு கடன் வாங்கி தொழில் வேணா செய்யலாம், வண்டி வாங்கலாமா? என்று நினைத்துக் கொள்வான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஆயுத பூஜை அன்று பொரி சாப்பிட்டுக் கொண்டு ரிலாக்ஸாக அமர்ந்திருந்தார்கள் ட்ரைனிகள் எல்லோரும். அப்போது அங்கே வந்தார் பர்சேஸ் டிபார்ட்மெண்ட் திவாகர். அங்கே அவர் கிட்டத்தட்ட ஒரு ஹீரோ. ஆட்டைத் தூக்கி மாட்டில் போடும் தடலாடி பேர்வழி.  அவர் செந்திலிடம், என்னப்பா இப்படியே இருக்கப் போறியா? என்று கேட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;செந்தில் விழித்தான். தொடர்ந்த அவர், லோன் போட்டு ஒரு டூ வீலர் வாங்கு.  பார்ட் டைம் பிஇ எக்ஸாம் எழுத கோச்சிங் கிளாஸ் போ. இப்படியே இருக்காதப்பா என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;சைக்கிள் செயினுக்கு கவர் போட்டாலே கதறி விடும் வீட்டைச் சேர்ந்தவன், லோன் போட்டு டூ வீலரா என்று அதிசயித்தான். அவன் முகக்குறிப்பை வைத்து எண்ணத்தை கணித்த திவாகர் தொடர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாருதி இருக்கு பாரு, ஆள் போகுறதுக்காக தயாரானது. இப்போ ஸ்கூல் பிள்ளைங்களை கூப்பிட, லாட்டரி விக்க, விளம்பரம் பண்ண, ஆம்புலன்ஸ் ஏன் மார்ச்சுவரி வண்டியாக்கூட உருவம் எடுத்து களத்துலயே இருக்கு. மாறிக்கிட்டே இருக்கணும். மேல எப்படிப் போறதுன்னு யோசிச்சுக்கிட்டே இருக்கணும். இப்படியே இருக்காதய்யா என்று அறிவுறுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;செந்திலால் அப்படியே இருக்கவும் முடியவில்லை,  துணிந்து இறங்கவும் முடியவில்லை. கோவையுடனும் அவனால் ஒட்ட முடியவில்லை. 98 குண்டு வெடிப்புக்கான மந்த நிலைக்குப் பின் சென்னைக்கு இடம்பெயர்ந்து விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது ஏ டி எம் களில் ஐந்து ட்ரான்சாக்‌ஷன்களுக்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற விதி வந்திருக்கிறதே. அதற்கு காரணம் யார் என்று நினைக்கிறீர்கள்?. செந்திலின் ஊர்க்காரர்கள் தான்.  அட்டையை நுழைப்பார்கள். பேலன்ஸ் பார்ப்பார்கள். நோட்டில் குறித்து வைத்திருக்கும் அமவுண்ட் உடன் சரி பார்ப்பார்கள். பின்னர் ஒரு நூறு ரூபாய் எடுப்பார்கள். அதன்பின்னர் ஒரு முறை பேலன்ஸ் சரி பார்ப்பார்கள். இதனால் ரேஷன் கடை மண்ணெண்ணெய் க்யூ போல எப்போதும் ஏ டி எம் நிரம்பி வழியும். ட்ரான்சாக்‌ஷனை மட்டும் கணக்கில் எடுத்து அடிசனல் ஏ டி எம்மை நிறுவி பேங்க்காரர்கள் மூக்கறு பட்டுக்கொண்டார்கள். இது அவர்கள் தேசிய மாநாட்டில் விவாதிக்கப்பட்டே மேற்கூரிய விதி அமலுக்கு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது சென்னையில் செந்தில் ஓரளவுக்கு காலூன்றி விட்டான். அலுவலக விஷயமாக நீண்ட இடைவேளைக்குப் பின் கோவை வந்தான். ஓய்வு நேரம் கிடைக்க, தன் முந்தைய பம்ப் கம்பெனிக்கு ஒரு விசிட் அடித்தான். பெரும்பாலும் புதிய முகங்கள். திவாகர் இப்போது தனியாக ஒரு இண்ட்ஸ்ட்ரி வைத்து பெரிய ஆளாகி விட்டதாக கேள்விப்பட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அவன் தேடி வந்த்து மணிண்ணாவைப் பற்றி கேட்கத்தான். அக்கவுண்ட்ஸில் இருந்த பழைய ஆள் ஒருவரை பிடித்து விசாரித்தான். &lt;br /&gt;“அவருக்கென்னப்பா! சாதாரணமாத்தான் இருந்தாரு. திடீர்னு ரியல் எஸ்டேட்டெல்லாம் எகிறுச்சுல்ல, அப்ப அவர் பூமியும் தங்கமாயிடுச்சு. ரெண்டு ஏக்கரும் கிட்டத்தட்ட நாப்பது, அம்பது கோடிகிட்ட போச்சுன்னு பேசிக்கிட்டாங்க. இப்போ ரொம்ப நல்லா இருக்கார்”&lt;br /&gt;என்று பதில் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் ஆம்னி பஸ்ஸிலோ, ரயிலில் இரண்டாம் வகுப்பிலோ பயணம் செய்யும் போது “ஒண்ணு அப்படியே இருங்க, இல்லையின்னா கண்ண மூடிக்கிட்டு எதிலயாச்சும் முழுசா இறங்குங்க, இடையில நிக்காதீங்க”  என்பது போன்ற தத்துவ முத்துக்களை கேட்க நேர்ந்தால் சொல்பவர் பெயர் செந்திலாகவும் இருக்கக்கூடும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1470968473851359111-6255173172200269414?l=muralikkannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muralikkannan.blogspot.com/feeds/6255173172200269414/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1470968473851359111&amp;postID=6255173172200269414' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/6255173172200269414'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/6255173172200269414'/><link rel='alternate' type='text/html' href='http://muralikkannan.blogspot.com/2011/07/blog-post_18.html' title='கட்ட பொம்மன் வீதியும் கறுப்பு மாருதியும்'/><author><name>முரளிகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15503809310005245433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/-9LwjCz9jyaw/Tv1YpBSgLkI/AAAAAAAAAbM/cbkhikExF40/s220/DSC00675.JPG'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-1458451531839353467</id><published>2011-07-11T12:24:00.000+05:30</published><updated>2011-07-11T12:24:42.781+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>காசி விநாயகாவும்  நாற்பது வயது பேச்சிலரும்</title><content type='html'>ஆடி, மார்கழி போன்ற சாமிக்கு உகந்த, விசேஷங்களுக்கு தகாத மாதங்கள் சென்ற பின் ஒரு வல்லிய முகூர்த்த நாள் ஞாயிற்றுக்கிழமையில் வரும். அந்த நாளில் நடக்கும் ஏராளமான விசேஷங்களில் ஒன்றுக்குகூட பத்திரிக்கை கூட வராவிட்டால் அவன் வாழ்ந்தது வேஸ்ட் என்றான் சங்கர். அவன் எப்போதுமே இப்படித்தான். வாயைத் திறந்தாலே சுவீப்பிங் ஸ்டேட்மெண்ட் தான். &lt;br /&gt;&lt;br /&gt;அது கூடப் பரவாயில்லை, பொங்கலுக்கு நாலு நாள் லீவு வரும். அதற்குக் கூட குடும்பத்தோடு இருக்க முடியாமல் மேன்ஷனிலேயே தங்கி சாப்பிட மெஸ் மெஸ்ஸாய் அலைபவன்தான் மிகப் பாவம் என்று ஆதரவாயும் இல்லாமல்  எதிர்ப்பாயும் இல்லாமல் ஒரு கருத்தை உதிர்த்தான் கணேஷ். &lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து அரட்டையைத் தொடராமல் அந்தக் கருத்துக்களில் இருந்த உண்மை சதிவிகிதத்தை  எடை போட மனம் முயன்றது. உடனே ஞாபகம் வந்த உருவம் காசி விநாயகா மெஸ்ஸில் அடிக்கடி பார்க்கும் நாற்பதுகளில் இருக்கும் பக்கத்து மேன்ஷன்வாசி. &lt;br /&gt;&lt;br /&gt;கடையில் துணியெடுத்து உள் பாக்கெட் வைத்து தைக்கப்பட்ட அரைக்கை சட்டை, டார்க்கான கலரில் பாட்டத்தில் ஜிப் வைத்து தைக்கப்பட்ட பேண்ட், பிரவுன் கலர் லெதர் ஸ்ட்ராப் வைத்த டைட்டன் வாட்ச், பாட்டா செருப்பு, பேஸிக் மாடல் நோகியா இதனுடன் கையில் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் அந்த வார ஜூவியோ, ரிப்போர்ட்டரோ. &lt;br /&gt;&lt;br /&gt;தான் இளைஞன்தான் என்று கடைசியாய் நம்பும் காலத்தில் நடைமுறையில் இருக்கும் பேஷனையே, தங்களின் மிச்ச காலத்துக்கும் ஆண்கள் தொடருவார்கள் என்ற சங்கரின் இன்னொரு சுவீப்பிங் ஸ்டேட்மெண்டுக்கு வலுச் சேர்க்கும் அவர் எந்த பொங்கலுக்கும் ஊருக்குச் சென்றதில்லை என்பது செவி வழிச் செய்தி. &lt;br /&gt;&lt;br /&gt;வரிசையில் நிற்கும் போது யாருடனும் பேசாமல், சர்வரிடம் கூட எதுவும் கேட்காமல் கர்மவீரராய் நடந்து கொள்ளும் அவர் இப்போது மனதில் வந்து உட்கார்ந்து கொண்டார்.&lt;br /&gt;மனதில் பயம் வர ஆரம்பித்தது. இந்த ஆண்டுக்குள்ளாவது திருமணம் முடிய வேண்டும் என்று மனம் இறைஞ்சத் தொடங்கியது. இரண்டரை வருடம் ஆகிவிட்டது பேச்சுத் தொடங்கி. &lt;br /&gt;&lt;br /&gt;பிரச்சனையே உங்க ஜாதிதான் சார் என்றார் ஒரு தரகர். உங்களோட உட்பிரிவுல பத்தாயிரம் பேர்கூட இருக்க மாட்டாங்க போலிருக்கே என்றார். சரி, வேற உட்பிரிவு? என்று இழுத்ததற்க்கு &lt;br /&gt;&lt;br /&gt;நீங்க வேற முன்னவிட இப்பத்தாங்க அதிகம் ஜாதி, உட்பிரிவுன்னு பாக்குறாங்க, வாய்ப்பேயில்லை என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;என் உட்பிரிவில், பங்காளி முறை போக வயது, வேலை, வசதி, ஜாதகம் என பல பில்டர்களுக்குப் பின் பத்துப் பெண் தேறுவது கூட கடினம் எனப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பத்தில் ஒன்றை செலக்ட் செய்வது பிரச்சினையில்லை. ஒன்றுக்காவது நம்மைப் பிடித்திருக்க வேண்டும் அதுதான் பிரச்சினை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மார்க்கட்டிங் வேலை என்பதால் சில தட்டிப்போயின. சாயங்காலம் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கணும், காலையில ஸ்கூலுக்கு அனுப்பணும். ஊர் ஊரா சுத்துறவங்க சரிப்படமாட்டாங்க என்ற பேச்சையையும் கேட்க நேரிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு அம்மா இல்லாததால் ஒரு வீட்டில் யோசித்தனர். பிரசவம், பிள்ளை குட்டின்னு நின்னு செய்ய மாமியா இல்லையே என்று ஒருவீட்டில் சொன்னார்களாம். மாமியார் இருந்தாலும் தொல்லைங்கிறாங்க இல்லேன்னாலும் இப்படியா என்று புலம்பி அதை கடக்க வேண்டியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதைக் கேட்ட சங்கர்தான் சொன்னான், மூல நட்சத்திர பெண்ணா பார்க்க வேண்டியதுதானே என்று? மருமக மூலம் மாமனார்க்குத்தான் என்று தரகர் அதற்கும் பதில் வைத்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மாப்பிள்ளையோட அப்பா கூடவே இருப்பாராமா? என்று சில விசாரணைகள். &lt;br /&gt;&lt;br /&gt;இதை விடக் கொடுமை, மாப்பிள்ளையோட அப்பாவுக்கு தலையில முடியே இல்லையே, இவரும் அப்படி ஆயிடுவாரேன்னு ஒரு பெண் சொன்னதுதான். &lt;br /&gt;&lt;br /&gt;உங்க அம்மாகூட தான் சிண்டெக்ஸ் டேங்க் மாதிரி இருக்கா, நீயும் அப்படித்தான் ஆயிருவ, ஆனாலும் நான் மனசைத் தேத்திக்கிட்டு உட்கார்ந்திருக்கலையா என்று நாக்கு வரை வந்த வார்த்தையை கஷ்டப்பட்டு அடக்கிவிட்டு வந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;அவங்கம்மா சைஸ் மட்டுமில்ல கலரும் கூட சிண்டெக்ஸ் டேங்க் மாதிரித்தாண்டா, யானைச் சிவப்பா இருக்குறவல்லாம் கூட ரிஜெக்ட் பண்றாளுகடா என்று டாஸ்மாக்கில் நண்பர்களோடு  புலம்பியதுதான் மிச்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாங்க கிளம்புறோம்டா என்ற சங்கரின் வார்த்தையொலியில், ஓடிய எண்ணங்களை கலைத்து விட்டு நிகழுக்கு வந்தேன். அவர்கள் வந்திருந்தது கணேஷின் திருமண அழைப்பிதழை கொடுப்பதற்காக. பேச்சு எங்கெங்கோ ஓடி அந்தப் புள்ளியில் நின்றிருந்தது. கடைசியாக இப்படி நண்பர்களோடு அரட்டை அடித்து பல மாதங்கள் ஆகியிருந்ததும் அது கூட சங்கரின் கல்யாண பார்ட்டிதான் என்பதும் ஞாபகத்துக்கு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மேன்ஷனின் கீழே வந்து அவர்களை வழியனுப்பி வைத்த போது, கையில் ஜூவியை சுருட்டியபடியே அவர் எதிர்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நட்புப் புன்னகையை அவரை நோக்கி படரவிட்டேன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1470968473851359111-1458451531839353467?l=muralikkannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muralikkannan.blogspot.com/feeds/1458451531839353467/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1470968473851359111&amp;postID=1458451531839353467' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/1458451531839353467'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/1458451531839353467'/><link rel='alternate' type='text/html' href='http://muralikkannan.blogspot.com/2011/07/blog-post_11.html' title='காசி விநாயகாவும்  நாற்பது வயது பேச்சிலரும்'/><author><name>முரளிகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15503809310005245433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/-9LwjCz9jyaw/Tv1YpBSgLkI/AAAAAAAAAbM/cbkhikExF40/s220/DSC00675.JPG'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-7768331180624050787</id><published>2011-07-08T11:24:00.000+05:30</published><updated>2011-07-08T11:26:58.269+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>அலாக்ரிட்டி – ஏறக்குறைய ஒரு நேர்மையின் முடிவு</title><content type='html'>ஈ மெயில் என்ற வார்த்தை, மனிதன் விந்துவாக இருக்கும்போதே தெரிந்திருக்க வேண்டிய ஒரு வார்த்தை என்னும் நிலை இன்று. ஆனால் 95-96 ஆம் ஆண்டுகளில் ஈ மெயில் என்ற ஒன்றைப் பார்ப்பது என்பது அரிவாள் நடிக்காத ஹரி படம் போல அரிதானது. ஆனால் அதை பலருக்கு சாத்தியப்படுத்தியது அலாக்ரிட்டி. அது அடிப்படையில் ஒரு கட்டுமான நிறுவனம். தி நகர் திருமலைப் பிள்ளை ரோட்டில் இயங்கிவந்த அலாக்ரிட்டி தன் நிறுவன புரமோஷனுக்காக இந்த உத்தியை கையாண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;90களின் ஆரம்பத்தில் ஏற்பட்ட மென்பொருள் வேலை வாய்ப்பு புரட்சியின் காரணமாக ஏராளமான பணம் சென்னையின் தெருக்களில் பாய்ந்தோடியது. அதை அள்ளிக்கொள்ள அனுபவ் போன்ற ஆடு,மாடு மற்றும் தேக்கு வளர்ப்பவர்கள், சீட்டுக் கம்பெனிகள், ஓரளவு நியாயமான பெனிஃபிட் பண்டுகள் ஆகியோர் போட்டி போட்டனர்.  ஏராளமான கட்டுமான நிறுவனங்கள் தோன்றியதும் அந்தக்காலத்தில்தான்.&lt;br /&gt;அதில் ஸ்டேண்ட் அவுட் பெர்பார்மராக இருந்த்து அலாக்ரிட்டி நிறுவனம்தான். தி ஹிந்து செய்தித்தாளில் சாப்ட்வேர் நிறுவனங்கள் தங்கள் ஆளெடுப்புக்கு அரைப் பக்க விளம்பரம் தரும். அவைகளுக்கு சமமாக அலாக்ரிட்டியின் விளம்பரமும் வெளிவரும். என் ஆர் ஐ களை கவருவதற்காக அவர்கள் கையாண்ட உத்திதான் ப்ரிண்ட் அவுட் ஈ மெயில் முறை. &lt;br /&gt;&lt;br /&gt;வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தங்கள் உறவினர்களுக்கு போனில் பேசுவதும், போஸ்ட் அனுப்புவதும் சிரமமாக/செலவாக இருந்த காலம். எனவே அவர்கள் அப்போது இணையம் மூலம் அலாக்ரிட்டியின் மெயில் ஐடிக்கு மெயில் அனுப்ப வேண்டியது. அதில் உறவினர்களின் விலாசமும் இருக்க வேண்டும். மெயில் கிடைத்த உடன் அவர்கள் அதை பிரிண்ட் அவுட் எடுத்து விலாசத்தில் சேர்ப்பித்து விடுவார்கள். இதற்கு சர்வீஸ் சார்ஜ் எதுவும் கிடையாது. இதன்மூலம் ஜெனரேட் ஆகும் குட்வில்லுக்காக இதை செய்தார்கள் அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களின் பலமே நியாயமான அணுகுமுறைதான். பணத்தை வெள்ளையிலேயே வாங்கினார்கள். நில உரிமையாளர்களுக்கும் வெள்ளையில் தான் செட்டில்மெண்ட். ஆர்க்கிடெக்ட் முதல் அடித்தட்டு தொழிலாளர் வரை நல்ல நேர்காணல் மூலம் தேர்ந்தெடுத்தார்கள். சம்பளமும் நியாயமாக வழங்கினார்கள். மாநகராட்சி விதிகளுக்கு உட்பட்டு தேவையான அளவு இடம்விட்டு அடுக்குமாடிகள் கட்டினார்கள். நல்ல மூலப் பொருட்களை உபயோகித்தார்கள். &lt;br /&gt;இதனால் அந்த நேரத்தில் மற்ற போட்டியாளர்களை விட சதுர அடிக்கு அதிகமான தொகையை நிர்ணயித்து இருந்தார்கள். மூலப் பொருட்கள் எதிர்பாராமல் விலையேறினாலும் சொன்ன தரம் சொன்ன விலை என்பதில் உறுதியாய் இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த அரசுத்துறைக்கும் லஞ்சம் கொடுப்பதில்லை என்ற முடிவிலும் உறுதியாய் இருந்தார்கள். இதனால் அவர்கள் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சம் கிடையாது. மின் இணைப்பு வாங்குவதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, அப்பிரச்சினை சரியாகும் வரையில் ஒரு வீட்டிற்கு டீசல் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் கொடுத்தார்கள் சில மாதம் வரை.&lt;br /&gt;&lt;br /&gt;வீடு விற்று விடுவதோடு நின்று விடாமல் வாரண்டி பீரியட் போல பராமரிப்பையும் அவர்கள் தொடர்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் தவறாக உபயோகப் படுத்தியதால் கதவின் தாழ்ப்பாள் பழுதானது. அதை சரி செய்ய வந்தவர், வேலையை முடித்து விட்டு ரூபாய் பதினான்கிற்கு பில் கொடுத்து பணத்தை வாங்கிச் சென்றது போன்ற பல ட்ராக் ரெக்கார்டுகளையும் கொண்டது அலாக்ரிட்டி.  &lt;br /&gt;பத்து ஆண்டுகளுக்குப் பின் சென்னைக்கு மீண்டும் வந்தபோது அலாக்ரிட்டி என்ற பெயரே எங்கும் காணப்படவில்லை. என்ன ஆனது என்றும் தெரியவில்லை. பணிச்சூழலில் அதைப் பற்றிய நினைவும் இல்லை. சென்னையில் இருந்த நான்கரை ஆண்டுகளில் ஒரு முறை கூட அப்பெயர் காதில் விழவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற வாரம் சென்னைக்கு மீண்டும் வந்திருந்தேன். தி நகர் இந்திப் பிரச்சார சபா தெருவில் சிம்பு வீட்டிற்க்கு எதிரே ஒரு அப்பார்ட்மெண்ட். அதில்தான் நான் வந்த உத்தியோக விஷயமான அதிகாரி இருந்தார். அந்த கேட்டிற்கு சென்ற உடனேயே ஒரு வித்தியாசத்தை உணர்ந்தேன். விசால கார் பார்க்கிங், உறுதியான சுவர்கள், நல்ல லிஃப்ட் என. வீட்டின் உள்ளேயும் அப்படியே. வேலை முடிந்ததும் அவரிடம் கேட்டேன். எந்த பில்டர் சார் என்று? அலாக்ரிட்டி என்று பதில் வந்தது.&lt;br /&gt;சந்தோஷத்துடன், இப்போ என்ன பெயரில் சார் இருக்காங்க என்றேன்?. இல்லை இது கட்டி 15 வருஷம் ஆச்சு. அவங்க இப்போ பீல்டில இல்லை. நேர்மையானவங்க சென்னையில தொழில் பண்ண முடியுமா என்று என்னைத் திருப்பிக் கேட்டார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1470968473851359111-7768331180624050787?l=muralikkannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muralikkannan.blogspot.com/feeds/7768331180624050787/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1470968473851359111&amp;postID=7768331180624050787' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/7768331180624050787'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/7768331180624050787'/><link rel='alternate' type='text/html' href='http://muralikkannan.blogspot.com/2011/07/blog-post_08.html' title='அலாக்ரிட்டி – ஏறக்குறைய ஒரு நேர்மையின் முடிவு'/><author><name>முரளிகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15503809310005245433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/-9LwjCz9jyaw/Tv1YpBSgLkI/AAAAAAAAAbM/cbkhikExF40/s220/DSC00675.JPG'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-147576831381510114</id><published>2011-07-05T13:30:00.000+05:30</published><updated>2011-07-05T13:33:19.282+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><title type='text'>தமிழ்சினிமாவில் கம்யூனிஸ்டுகள்</title><content type='html'>94ஆம் ஆண்டுவாக்கில் ஏதாவது திரைப்படத்திற்க்கு சென்றுவிட்டு வரும் வழியில் அம்மாவின் அறுபதடி கட் அவுட் சரிந்து விழுந்து கோமா நிலைக்கு போன திரைப்பட ஆர்வலன் ஒருவனுக்கு, திடீரென இப்பொழுது நினைவு வந்தான் அவன் எதைப் பார்த்து அதிர்ச்சியடைவான்? &lt;br /&gt;&lt;br /&gt;அருகருகே அமர்ந்திருந்தாலும் செல்போனிலேயே பேசிக்கொள்ளும் அளவுக்கு பெருகிவிட்ட செல்போன்களைப் பார்த்தா?, கோ ஆப் டெக்ஸில் வாங்கிய பழைய பச்சை போர்வையை வைத்தே அரசு விழாவை முடிக்கும் எளிமையையா? தாலி பெருக்கி போடும் நிகழ்ச்சி முதல் தாலி அறுக்கும் நிகழ்ச்சி வரை வைக்கப்படும் பிளக்ஸ் போர்டுகளைப் பார்த்தா?&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் விட அவனுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுப்பது தமிழ்சினிமாவின் தற்போதைய கதாநாயகர்களின் கேரக்டரைசேஷன்கள்தான்.&lt;br /&gt;முன்னெல்லாம் கதாநாயகன் காதலனாக இருப்பான் இல்லை கம்யூனிஸ்டாக இருப்பான். கதாநாயகன் என்றாலே அவன் அமைப்பை,ஆட்சியை, பண்ணையாரை, பணக்காரரை எதிர்க்க வேண்டும் ஏழைகளுக்கு உதவவேண்டும் என்பதை சாம்பாரில்லிட்ட பருப்பாக வைத்திருந்தார்கள். &lt;br /&gt;இப்போது வரும் படங்களில் நாயகன் நல்ல குணங்களுடன் இருப்பதே அரிதாகி விட்டது. களவாணி, எத்தன் என கல்யாண குணங்களுடனே நாயகர்கள் வலம் வருகிறார்கள்.&lt;br /&gt;எங்கள் தெருவில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர் ஒருவருக்கு எம்ஜியாரை மிகவும் பிடிக்கும். கம்யூனிஸ தத்துவங்களை திரையில் கொண்டுவந்தவர் அவர்தான் என்பார். மலைக்கள்ளன், நாடோடி மன்னன் என உதாரணங்களை அடுக்குவார் அவர். பிற்காலத்தில் சிவப்பு மல்லி படம் கம்யூனிஸ இயக்கத்தில் ஈடுபட்டவர்களை மையமாக வைத்து வந்தது.&lt;br /&gt;வசந்த பாலன் இயக்கி ஆர்யன் நடித்த ஆல்பம், சுந்தர் சி இயக்கி கமல்ஹாசன் நடித்த அன்பே சிவம், ஜனநாதன் இயக்கிய ஈ (பசுபதி) போன்ற படங்களில் நாயகர்கள் கம்யூனிஸ்டுகளாக வலம் வந்தார்கள். ஜனநாதனின் பேராண்மையில் கம்யூனிஸத்தை விளக்கும் சில காட்சிகள் இருந்தன.&lt;br /&gt;சுரேஷ் கிருஷ்ணா இயக்கி கருணாநிதி வசனம் எழுதிய இளைஞன் படத்தையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். கைவல்யம் போன்ற பெயர்களை எல்லாம் உபயாகப்படுத்தி இருந்தார்கள்.&lt;br /&gt; பல படங்களில் ஹீரோக்கள் மில் அதிபரை எதிர்ப்பார்கள் சம்பள உயர்வு போன்ற காரணங்களுக்காக.   அவர்களை நாம் கம்யூனிஸ்டுகள் என்று எடுத்துக் கொள்ளலாமா என்று தெரியவில்லை. தனிக்காட்டு ராஜா படத்தில் கூட ரஜினி ஜெயப்பிரகாஷ் என்று பெயர் வைத்துக் கொண்டு  கம்யூனிசம் போன்ற ஒன்றைப் பேசுவார். அதுகூட காதல் தோல்வியினால் அந்தப் பாதைக்கு அவர் திரும்பியிருப்பார். &lt;br /&gt;&lt;br /&gt;கேரளாவில் “நீங்கள் என்னை கம்யூனிஸ்ட் ஆக்கி” போன்று கம்யூனிஸக் கொள்கைகளின் நிறை குறைகளை அலசிய படங்கள் பல வந்துள்ளன. முரளி போன்ற நடிகர்கள் கம்யூனிஸ்டாக வாழ்ந்தும் உள்ளனர். ஆந்திராவில் கம்யூனிஸ, மாவோயிஸ கருத்துக்களின் அடிப்படையில் பல படங்கள் வந்துள்ளன. அப்படங்களின் ஹீரோயின்கள் கவர்ச்சியாய் இல்லாததால் இங்கே டப் ஆகாமல் அவற்றை நாம் பார்க்க முடியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அய்யா தமிழ் சினிமா உலகினரே, கம்யூனிஸ கொள்கைகளை அடிப்படையாக கொண்ட படங்கள் கூட வேண்டாம். நாயகன் கம்யூனிஸ சிந்தனை சற்றேனும் உள்ளவனாக சித்தரித்தும் சில படங்கள் எடுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;தாதாக்கள், அடியாட்கள், ஏமாற்றுபவர்கள் பற்றிய படங்களை கூட இவர்கள் கெட்டவர்கள் என்று சொல்லி வளரும் தலைமுறையினர் அந்தக் கருத்துக்களால் ஈர்க்கப்படாமல் பார்த்துக்கொள்ளலாம். ஆனால் சுயநலம் மிக்கவனாகவே பல ஹீரோக்களின் படங்கள் வருகின்றன. இவர்கள் தவறானவர்கள் என அவர்களிடம் நம்மால் நிறுவ முடியாது. பொது உடமை மனநிலை மிகக் குறைந்து வரும் சமுதாயத்தில் ஹீரோக்களும் அவ்வாறே ஆகிவருவது வருத்தத்துக்குரியது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1470968473851359111-147576831381510114?l=muralikkannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muralikkannan.blogspot.com/feeds/147576831381510114/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1470968473851359111&amp;postID=147576831381510114' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/147576831381510114'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/147576831381510114'/><link rel='alternate' type='text/html' href='http://muralikkannan.blogspot.com/2011/07/blog-post.html' title='தமிழ்சினிமாவில் கம்யூனிஸ்டுகள்'/><author><name>முரளிகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15503809310005245433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/-9LwjCz9jyaw/Tv1YpBSgLkI/AAAAAAAAAbM/cbkhikExF40/s220/DSC00675.JPG'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-5673756453592675845</id><published>2011-06-10T11:24:00.001+05:30</published><updated>2011-06-10T11:27:31.692+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><title type='text'>வேற்று மொழி நடிகர்கள்</title><content type='html'>திடீரென ஒர் படத்திற்க்கு அறிவிப்பு வரும். இந்தப் படத்தில் வேற்று மொழி படங்களில் புகழ்பெற்ற ஒரு நடிகர் ஒருவர் நடிக்கிறார் என்று. இது ஜஸ்டிஸ் பார்ட்டி காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. அந்த கதாபாத்திரம் சிலசமயம் ஹீரோவிற்க்கு இணையாகவும் அல்லது கதை திருப்பத்திற்க்கு முக்கியமானதாகவும் கூட இருக்கும்.&lt;br /&gt;  &lt;br /&gt;சத்யம் – உபேந்திரா&lt;br /&gt;மலைக்கோட்டை – தேவராஜ்&lt;br /&gt;சர்வம், கச்சேரி ஆரம்பம்   - சக்கரவர்த்தி&lt;br /&gt;வேட்டைக்காரன் – ஸ்ரீஹரி&lt;br /&gt;ராஜ்ஜியம் – திலீப்&lt;br /&gt;12 பி – சுனில் ஷெட்டி&lt;br /&gt;தீனா - சுரேஷ்கோபி&lt;br /&gt;என பல படங்களைச் சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் இந்த கேரக்டர்களுக்கு இவர்கள் இவ்வளவு முக்கியமா? என்று பார்த்தால் அப்படி ஒன்றும் அது பெரிய அப்பாடக்கர் கேரக்டராய் இருக்காது.  வேட்டைக்காரனில் ஸ்ரீஹரி நடித்த போலிஸ் கேரக்டரோ அல்லது மலைக்கோட்டையில் தேவராஜ் நடித்த கேரக்டரோ நாசர், பிரகாஷ்ராஜ் வகையறாக்கள் போகிற போக்கில் ஊதி விட்டு போய்விடுகிற கேரக்டர்கள் தான். அப்புறம் ஏன் இவர்களைப் பிடித்து தொங்க வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;என் நண்பர் ஒருவர் சொல்லுவார், ஒரே பழிவாங்குற கதைதான். ஆனா அதையே ரஜினிய வச்சு, விஜய்காந்த வச்சு, விக்ரம வச்சு, விஜய்ய வச்சு, சூர்யாவ வச்சுன்னு ஆளை மட்டும் மாத்தினாலே போதும். மக்கள் ஏத்துப்பாங்க என்பார். இது காதல் கதை படங்களுக்கும் பொருந்தும்.&lt;br /&gt;அப்படி மக்களுக்கு பழகின கதையா இருந்தாலும் புது முகமா இருந்தா ஆர்வமா பார்ப்பாங்க என்பது அவர் தியரி. யோசித்துப் பார்த்தால் அது சரிதான் என்று படும்.&lt;br /&gt;&lt;br /&gt;ராம நாராயனன் அவர்களிடம்  இருப்பது ஒரே ஒரு அம்மன் கதைதான். ஆனால் அவர் ஒவ்வொரு முறை எடுக்கும் போது அம்மனாக நடிக்கும் நடிகையை மாற்றிவிடுவார். (பாளையத்தம்மன் – மீனா, ராஜகாளியம்மன் – ரம்யா கிருஷ்ணன்). இது கவர்ச்சி நடிகைகள் விஷயத்தில் கட்டாயமான ஒன்று. படம் என்று ஒன்று எடுத்தால், டைட்டில் என்று ஒன்று இருக்குமோ இருக்காதோ ஆனால் ஒரு ஐட்டம் சாங் இருக்க வேண்டும் என்ற ரூல் இருந்த காலத்தில் இருந்தவர் சில்க் ஸ்மிதா. அவரை மிஞ்சிய பேரழகி உண்டா? ஆனால் அவர்   உச்சத்தில் இருக்கும்போதே அனுராதா, டிஸ்கோ சாந்தி, பபிதா என பல கவர்ச்சி நாயகிகளை களத்தில் இறக்கியவர்கள் நம் ஆட்கள். அவர்களுக்கு எதுவும் புதிதாக இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் பி வாசு ஒரு பேட்டியில் சொல்லியிருப்பார்.  மசாலா படங்களிலேயே அதிகபட்சம் 10 கதைகள் தான் இருக்கும். 0 வில் இருந்து 9 வரை. அடுத்து 11ஆவது கதையென்று போனால் அதில் 0வும் 1 ம் கலந்திருக்கும் என்று. வேட்டைக்காரன் படத்தையே எடுத்துக் கொள்வோம். சென்னையில் இருக்கும் ஒரு தாதாவை தமிழ்நாட்டின் மற்றொரு பகுதியில் இருந்து வந்து வெல்லும் வீரனின் கதை.  இது மாதிரி விஷாலே நான்கு படம் நடித்து விட்டார். ஆனால் வெரைட்டி காண்பிக்க வேண்டுமே? ஹிரோயின், ஹீரோவோட அப்பா அம்மா, ஃப்ரண்ட்ஸ், வில்லன் மட்டும் மாத்தினா போதுமா? கதைக்கு திருப்பம் கொடுக்க ஒரு இணை பாத்திரம் வேணுமே என்கிற போதுதான் இம்மாதிரி பிரெஷ்ஷான பேஸ் பிடிப்போம் என்று வேற்று மொழிகளில் இருந்து ஆட்களை பிடித்து வருகிறார்கள். இதில் வணிக லாபமும் ஒளிந்திருக்கிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் போர்ஸாக இருக்க வேண்டும், அந்த பாத்திரம் வரும்போதே ஒரு கெத்தான பீல் கிடைக்க வேண்டும் எனும் போது இம்மாதிரி வேற்று மொழி பிரபலங்களை உபயோகப் படுத்துகிறார்கள். நினைத்துப் பாருங்கள்  சத்யத்தில் உபேந்திரா கேரக்டருக்குப் பதில் நாசரோ, பிரகாஷ் ராஜோ நடித்திருந்தால் அந்தப் படத்தின் ஒரே ஆறுதலும் இல்லாமல் போயிருக்கும். 12 பி யில் முறைமாமன் கேரக்டர் தான் ஆனால் அதற்கு ஜீவா தன் செல்வாக்கைப் பயன்படுத்தி சுனில் ஷெட்டியை கூட்டி வந்திருப்பார். ஏன் எத்தனை அமெரிக்க ரிட்டர்ன் கேரக்டர் நடிகர்கள் இருக்கிறார்களே? அவர்களை உபயோகப் படுத்தியிருக்கலாமே? &lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு முக்கிய காரணம், அந்த சப்போர்டிங் கேரக்டர்களுக்கு என்று தனிப்பட்ட குணாதிசயங்கள் அல்லது அது தனித்து தெரிவதற்கான சீன்களை உருவாக்கும்  திறமை குறைவு அல்லது சோம்பேறித்தனம். கதாநாயகிகளுக்கே கேரக்டரைசேஷன் சரியாக செய்வதில்லை. இதில் இவர்களுக்கு வேறு கேரக்டரை சேஷனா என்று பெரும்பாலோனோர் விட்டுவிடுகிறார்கள். ஒவ்வொரு பாத்திரத்தையும் வித்தியாசமாக படைத்தால் இருக்கிற நடிகர்களே போதுமே?&lt;br /&gt;&lt;br /&gt;நேர்மையான போலிஸ், கெட்ட அரசியல்வாதி, நல்ல அண்ணன்   என்று ஒரே ஒரு பரிமாணம் கொண்ட  கேரக்டர்களை உருவாக்குவதால் தான் வெரைட்டி காண்பிக்க புது ஆட்களை தேட வேண்டியிருக்கிறது. பேட் மென் வில்லன் போல வித்தியாச பரிமாணங்களில் இந்த இணை கேரக்டர்களை உருவாக்கும் போது தமிழ்சினிமா இன்னும் சுவராசியப்படும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1470968473851359111-5673756453592675845?l=muralikkannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muralikkannan.blogspot.com/feeds/5673756453592675845/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1470968473851359111&amp;postID=5673756453592675845' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/5673756453592675845'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/5673756453592675845'/><link rel='alternate' type='text/html' href='http://muralikkannan.blogspot.com/2011/06/blog-post_10.html' title='வேற்று மொழி நடிகர்கள்'/><author><name>முரளிகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15503809310005245433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/-9LwjCz9jyaw/Tv1YpBSgLkI/AAAAAAAAAbM/cbkhikExF40/s220/DSC00675.JPG'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-250160849930108367</id><published>2011-06-09T11:20:00.001+05:30</published><updated>2011-06-09T11:23:34.300+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரிக்கெட்'/><title type='text'>ஹீலே – கில்லியும் ஹர்பஜன் அஷ்வினும்</title><content type='html'>இயான் ஹீலே -  பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆஸி அணியில் இருந்தும் ஒரு உலகக்கோப்பை வெற்றி அணியிலும் இடம்பெறாதவர். அதே போல் எந்த ஆஷஸ் தோல்வி அணியிலும் இடம் பிடிக்காதவர். நூறு டெஸ்டுகளை கடந்தும் நல்ல பார்மிலேயே இருந்தவர். எந்த ஒரு வீரரையும் புள்ளி விபரத்தால் அளவிடக்கூடாது என்பார்கள். 96ல் உலக்கோப்பையை கலக்கிய ஜெயசூர்யா எடுத்தது 300க்கும் குறைவான ரன்களே. ஆனால் 96 உலக்கோப்பையைப் பற்றி பேசினாலே அவரைத் தவிர்க்க முடியாது. ஏனென்றால் அவர் ஏற்படுத்திய தாக்கம் அப்படி. &lt;br /&gt;&lt;br /&gt;அதுபோலவே 88 முதல் 99 வரை ஹீலே ஆடிய டெஸ்டுகளில் பல ஆட்டங்களில் அணியை தோல்வி அடையாமல் காப்பாற்றியுள்ளார்/ வெற்றிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;கடைநிலை ஆட்டக்காரர்களுடன் பலமுறை இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் அடித்த 4 சதம், 22 அரை சதத்தில் பெரும்பாலானவை அணிக்குத் தேவையான போது அடிக்கப்பட்டவையே.&lt;br /&gt;&lt;br /&gt;இதைவிட அவர் கீப்பிங் திறமைதான் பெரிதும் பேசப்பட்ட ஒன்று. வார்னேவின் பந்துவீச்சுக்கு அவ்வப்போது வந்து ஆலோசனை சொல்லுவார். உண்மையிலேயே ஏதாவது சொல்வாரா அல்லது சும்மா வந்து காதைக் கடிப்பாரா என்று தெரியாது. ஆனால் பேட்ஸ்மென்னுக்கு கிலி ஏற்பட்டு விடும். சும்மாவே வார்னே பாலை விளையாட முடியாது, இதில் நம்ம வீக்னெஸ்ஸை வேற கண்டுபிடுச்சு சொல்லிட்டானோ என்று இரண்டு மனநிலையில் ஆடி அவுட்டாகிவிடுவார்கள். (நல்ல உதாரணம் பாகிஸ்தானின் பசத் அலி).&lt;br /&gt;இந்த சமயத்தில்தான் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் அடி வெளுத்துக் கொண்டும், நன்கு கீப்பிங் செய்துகொண்டும் இருந்த கில்கிறிஸ்ட் தேர்வாளர்களின் கண்ணில் பட்டார். அவ்வப்போது ஒருநாள் போட்டிக்கான வாய்ப்புகளும் வழங்கப்பட்டன. ஆஸ்திரேலியாவின் தென்னாப்பிரிக்க தொடரில் (1997) அவர் ஒரு ஆட்டத்தில் அடித்த 77 ரன்கள், பின் தொடர்ந்த ஆட்டங்களில் அவரது வேகமான ஆட்டம் ஆகியவை ஹீலேயின் ஒருநாள் அணி இடத்தை ஆட்டம் காணச் செய்தது.  அந்த காலக் கட்டத்தில் ஆஸி பல ஒரு நாள் போட்டிகளில் தோற்றுக் கொண்டிருந்தது, அதிரடி ஆட்டக்காரர்கள் குறைவினால்.  எனவே ஹீலேயின் ஒருநாள் போட்டி இடத்தை கில்லி பிடித்துக்கொண்டார். ஆனாலும் டெஸ்ட் போட்டிகளில் ஹீலேயே முதல் சாய்ஸாக இருந்தார். நன்றாகவும் விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால் தொடர்ந்து கில்கிறிஸ்ட் ஒருநாள் போட்டிகளில் கலக்க, தேர்வாளர்கள் ஹீலேயே கழட்டிவிடத் தீர்மானித்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஹீலே ஆஸியில் ஆடிய கடைசி டெஸ்டில், ஒளிபரப்பில் ஆட்டத்தை விட அதிகம் ஒளிபரப்பப் பட்டவை ஹீலி ஆதரவாளர்களின் ஆதரவு அட்டை வாசகங்கள்தான். தேர்வாளர்களின் பிறப்பை சந்தேகப்படும் வாசகங்கள் உட்பட ஆஸ்திரேலிய போர்டை கேவலப்படுத்தும் பல வாசகங்கள் அதில் இடம்பிடித்திருந்தன. ஆனாலும் அசராமல் அவரைக் கழட்டி விட்டது ஆஸி போர்டு.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் கில்லியின் அசகாய ஆட்டத்தால் அவை எல்லாம் அடங்கிப் போயின.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அணியில் ஓர்  இடத்திற்கு தற்போதுள்ளவரை விட திறமையானவர் தென்பட்டால் பழைய வரலாறைப் பார்க்கக் கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணம். இதேபோல் பலமுறை ஆஸி முடிவெடுத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது இந்திய அணியிலும் இதேபோல் ஆப் ஸ்பின்னருக்கான ஓரிடத்துக்கு சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஹர்பஜனின் விக்கெட் எடுக்கும் திறமை கேள்விக்குறியாய் உள்ளது (முக்கியமாய் டெஸ்ட் போட்டிகளில்).&lt;br /&gt;&lt;br /&gt;அஷ்வின், கெய்லின் விக்கெட்டை ஐபிஎல் 4 குவாலிபையரிலும், இறுதிப் போட்டியிலும் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு காரணமானார். ஐபிஎல் 3 பைனலிலும் சச்சின் விக்கெட்டை இக்கட்டான நேரத்தில் கைப்பற்றி வெற்றிக்கு உதவினார். சாம்பியன் கோப்பையிலும் தரமான பந்துவீச்சு.  &lt;br /&gt;சென்ற தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரிலும் நல்ல பந்துவீச்சை வெளிப்படுத்தினார். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தேர்வாளர்கள் குழு மற்றும் போர்டு ஹர்பஜனையே முதல் சாய்ஸாக வைத்துள்ளது. அஷ்வின்னுக்கு வாய்ப்பை சரியாக தர இன்னும் யோசித்துக் கொண்டே இருக்கிறது. எப்போது ஆஸியைப் போல் நாமும் முடிவெடுப்பது?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1470968473851359111-250160849930108367?l=muralikkannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muralikkannan.blogspot.com/feeds/250160849930108367/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1470968473851359111&amp;postID=250160849930108367' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/250160849930108367'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/250160849930108367'/><link rel='alternate' type='text/html' href='http://muralikkannan.blogspot.com/2011/06/blog-post.html' title='ஹீலே – கில்லியும் ஹர்பஜன் அஷ்வினும்'/><author><name>முரளிகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15503809310005245433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/-9LwjCz9jyaw/Tv1YpBSgLkI/AAAAAAAAAbM/cbkhikExF40/s220/DSC00675.JPG'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-8128203122021125475</id><published>2011-05-18T10:59:00.002+05:30</published><updated>2011-05-18T11:37:29.409+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><title type='text'>மன்மதன் அம்பு</title><content type='html'>ஆண்கள் முப்பத்தி ஐந்தை தாண்டியபின் அனுபவிக்க நேரும் சங்கடங்களை ஒவ்வொன்றாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அதில் தலையாயது தனியாக சினிமாவுக்குப் போக முடியாதது. அலுவலகம், வீட்டு வேலைகள் போக மிகக் குறைவான நேரமே கிடைக்கிறது. குடும்பத்தோடு போகலாம் என்று பார்த்தால் யாரும் அதற்கு ஒத்துக் கொள்வதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆளவந்தான் படம் வெளியான அன்று எனக்கு தலை தீபாவளி. அப்படத்திற்க்கு ஏற்பட்டிருந்த ஹைப் காரணமாக காலை ஒன்பது மணிக்கே யாரிடமும் சொல்லாமல் சென்றுவிட்டேன். படப் பெட்டி வர தாமதமானதால் படம் மதியம் இரண்டுக்கு திரையிடப்பட்டு மாலை ஐந்தரைக்கு தண்டனை முடிந்தது. வீட்டிற்க்கு வந்தால் விழுந்த திட்டுக்கள் கூட உறைக்கவேயில்லை. அப்படி ஒரு சோகம், படம் நன்றாக இல்லாமல் போனதால்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி வெறித்தனம் கொண்டிருந்த நான், மன்மதன் அம்பு வெளியாகி நான்கைந்து மாதமாகியும் பார்க்காத சோகம் மனதை அரித்துக் கொண்டேயிருந்தது. டிவிடியில் பார்ப்பதில்லை என்ற தேவையில்லாத கொள்கை வேறு.  &lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் உறவினர் திருமணம் ஒன்று அருகில் இருந்த சிற்றூரில் ஞாயிறன்று நடந்தது. வேண்டா வெறுப்பாக காலையில் கிளம்பி பேருந்தில் சென்று இறங்கிய போது ஒரு ஆனந்த அதிர்ச்சி. அவ்வூரில் உள்ள திரையரங்கில் மன்மதன் அம்பு.&lt;br /&gt;&lt;br /&gt;திருமண சடங்கு ஆரம்பித்த உடனேயே நைஸாக கிளம்பி திரையரங்கிற்க்கு போய்விட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;கமல்,  நீங்கள்  ஹீரோயிஸ படங்களில் நடிக்க வேண்டாம். கதையின் நாயகனாக நடிங்கள். அந்த வேடம் உங்கள் திறமைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். ஒரு சராசரி திறமையும், அனுபவமும் கொண்ட நடிகரே அதை சிறப்பாக செய்து விட முடியும் என்ற நிலையில் நீங்கள் எதற்கு?&lt;br /&gt;&lt;br /&gt;நீலவானம் போன்ற ஜிம்மிக்ஸ் எல்லாம் எதற்கு?&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவேளை படம் லாபகரமாக அமைந்து விட்டால் நிதி குடும்பத்தார் அனைவரும் மீண்டும் படம் செய்ய கேட்பார்கள் என்று, தெனாலிராமன் பூனைக்கு வைத்த சுடுபாலாக இந்த அம்பை விட்டீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;இடைவேளையில் என்னை விட பாவமாக இருந்தவர் கேண்டின்காரர். வட்டிக்கு வாங்கி கடை வச்சிருக்கேன்யா, பாத்து செய்யுங்கயா என்று பட போஸ்டரைப் பார்த்து அவர் கதறுவது போல் ஒரு பிரமை.&lt;br /&gt;&lt;br /&gt;வடை, டீ என எதுவும் இல்லை. கேட்டதற்க்கு, என்னிடம் இருப்பதிலேயே சின்ன கேன் இதுதான். இதில் பத்து டீயாச்சும் வாங்கி வச்சாத்தான் சூடு ஆறாம இருக்கும். அதுகூட ரெண்டு நாளா ஓடலை என்று புலம்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;வேறுவழியில்லாமல்  நமத்துப்போன உள்ளூர் தயாரிப்பு பிஸ்கட் ஒன்றை வாங்கிக் கொண்டு மீதி படத்தைப் பார்த்தேன். பிஸ்கட் பரவாயில்லை என்னும்படி இருந்தது படம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவழியாய் வீடு வந்து சேர்ந்த பின் தான் தெரிந்தது, மொய் எழுதாமல் வந்தது. இம்முறையும் மனைவியின் திட்டுக்கள் உறைக்கவில்லை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1470968473851359111-8128203122021125475?l=muralikkannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muralikkannan.blogspot.com/feeds/8128203122021125475/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1470968473851359111&amp;postID=8128203122021125475' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/8128203122021125475'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/8128203122021125475'/><link rel='alternate' type='text/html' href='http://muralikkannan.blogspot.com/2011/05/blog-post.html' title='மன்மதன் அம்பு'/><author><name>முரளிகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15503809310005245433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/-9LwjCz9jyaw/Tv1YpBSgLkI/AAAAAAAAAbM/cbkhikExF40/s220/DSC00675.JPG'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-2139838443196046654</id><published>2010-10-23T11:16:00.001+05:30</published><updated>2010-10-23T11:16:35.932+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><title type='text'>நேர்காணல் – தென் மாவட்ட தியேட்டர் ஆப்பரேட்டர்</title><content type='html'>என் சிறுவயது கனவு வேலைகளில் ஒன்று – தியேட்டர் ஆப்பரேட்டர் ஆவது. அந்த வேலையைச் செய்பவர்களிடம் எனக்கு ஒரு கவர்ச்சி இருந்தது. பின்னாட்களில் அது மறைந்து போனது. என் நண்பர் ஒருவரின் உதவியுடன் நேற்று ஒரு தியேட்டர் ஆப்பரேட்டரை சந்தித்து உரையாடினேன். தன் பெயர், விபரம் வெளியிடவேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார். எனவே உரையாடல் மட்டும்&lt;br /&gt;                         &lt;br /&gt;கே : முன் இருந்த வேலைப்பளு மற்றும் திறன் தேவைக்கும் தற்போது உள்ள நிலைமைக்கும் என்ன வித்தியாசம்?&lt;br /&gt;&lt;br /&gt;ப: முன்னர் நிறைய திறமை தேவைப்பட்டது. முக்கால் மணிநேரத்தில் புரஜெக்டர் சூடாகி விடும், கார்பன் ராடுகள் மாற்ற வேண்டும், பிலிம் குவாலிட்டியும் மட்டமாக இருக்கும். அதுபோக சவுண்டு ரீபுரடக்‌ஷனிலும் அடிக்கடி பிரச்சினை வரும். இப்போது அப்படியில்லை. நல்ல குவாலிட்டி புரஜக்டர்,சவுண்டு சிஸ்டம் இருப்பதால் வேலைப் பளு குறைவு. யாரும் இந்த வேலையை இரண்டு மூன்று நாட்களில் கற்றுக் கொண்டு விடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கே : ஆப்பரேட்டர்கள் சில காட்சிகளை வெட்டி விட்டார்கள் என்ற முணுமுணுப்பை பல ஆண்டுகளாக கேட்டு வந்துள்ளேன். ஏன் அப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;ப : பெரும்பாலும் பெரிய நடிகர்கள் படங்களுக்கு அப்படிச் செய்வதில்லை. சில படங்களில் தேவையில்லாத பாடல்காட்சிகள் இருக்கும். அது ரசிப்புக்கு உரியதாகவும் இல்லாத நிலையில் வெட்டி விடுவோம். படம் நீளமாக இருந்தால் நான்கு காட்சிகளிலேயே தேவையில்லாத காட்சிகளை கணித்து வெட்டி விடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கே : அதை எப்படி முடிவு செய்வீர்கள்?&lt;br /&gt;ப : தேவையில்லாத பாடல் காட்சி வரும் போது ரசிகர்களிடம் இருந்து ஒருவித அசூசை ஒலி கிளம்பும். கேண்டீனுக்கு சிகரெட் குடிக்க பலர் வெளிவருவார்கள். சக ஆப்பரேட்டர், என் உதவியாளர்கள், தியேட்டர் பணியாளர்கள் போன்றோருடன் ஷோ முடிந்தவுடன் பேசும் போது அது இழுவை, இது இழுவை என்று பேச்சு வரும். அந்த காட்சிகளை வெட்டி விடுவோம். இது பெரும்பாலும் அனுமானத்தில் செய்வதுதான். குறிப்பிட்ட விதிகள் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கே : காட்சி திடீரென தடைப்பட்டாலோ அல்லது மின்சாரம் நின்று போனாலோ ரசிகர்கள் ஆபாசமாக திட்டுவதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். அப்போது உங்கள் மனநிலை?&lt;br /&gt;&lt;br /&gt;ப : ஆரம்பத்தில் கோபம் வரும். நான் பதிலுக்கு திட்டிக்கொண்டே இருப்பேன். நாளாக நாளாக அது எரிச்சலோடு நின்று போனது. இப்போது அதுமாதிரி நடைபெறுவது அரிதாகவே இருக்கிறது. முன்னர் கார்பன் ராடு தீர்ந்து போனால் காட்சி மங்கலாகும், சில சமயம் பிலிம் ரோல் அந்து விடும், ஓவர்லேப் ஆகும், வசனம் கட்டாகிவிடும். இந்த சூழ்நிலைகளில் சத்தம் அதிகமாக இருக்கும். இன்றைய சூழல் அப்படியில்லை. பத்தாண்டுகளுக்கு முன்னால் வரையில் மின்சாரம் தடைப்பட்டால் டீசல் ஜெனெரேட்டரை இயக்கி படம் ஓட்ட வேண்டிய சூழல் இருந்தது. அதற்கு குறிப்பிட்ட நேரமாகும். தற்போது தொழில்நுட்பம் வளர்ந்த நிலையில் ஒரு சுவிட்சிலேயே மாற்றிவிடுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கே : உங்கள் வருமானம் எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;ப : சம்பளம் என்று பெரியதாக வராது. தியேட்டருக்கு உள்ளே சிறு கடைகள் வைத்துக் கொள்ள முன்னர் முதலாளிகள் அனுமதித்தார்கள். எனவே சிகரெட், முறுக்கு,கடலை மிட்டாய் குளிர்பானங்கள் கொண்ட கடை ஒன்றையும் நடத்தினேன். இப்போது மொத்த குத்தகையாக கடைகளை விட்டு விடுகிறார்கள். ஸ்லைடு மற்றும் விளம்பரப்படம் போடும் கம்பெனியினர் அவ்வப்போது கவனிப்பதுண்டு. இழுத்துப் பிடித்து ஓட்டும் நிலைமைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;கே : ரசிகர்களின் மனோபாவம் எப்படியிருக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;ப : முன்னெல்லாம் 2.30 மணி ஷோ என்றால் 1.30 மணிக்கே மக்கள் வந்துவிடுவார்கள். 2.00 மணிக்கு கவுண்டர் திறந்துவிடும்போது 75 சதவிகித கூட்டம் கூடியிருக்கும். இப்போது 2.15 மணி அளவில் கூட 10, 15 பேர்தான் வருகிறார்கள். சரியான நேரத்துக்குத் தான் எல்லோரும் வருகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;கே : உங்கள் தியேட்டரில் ஆபாச காட்சிகள் பிரத்யேகமாக இணைக்கப்பட்ட  திரைப்படம் வெளியிடும் போது உங்கள் மனநிலை எப்படியிருக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;ப : மனது சங்கடமாகத்தான் இருக்கும். என் மகனின் நண்பர்கள், மற்றும் மகளின் தோழிகள் ஆகியோர் இதைக் கவனித்து ஏதும் அவர்களிடம் கேட்டுவிடுவார்களோ என பயமாக இருக்கும். என்ன செய்வது?.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முன்னர் ஒவ்வொரு தியேட்டரையும் குறிப்பிட்ட வினியோகஸ்தர்கள் பிடித்து வைத்திருப்பார்கள். அந்த தியேட்டருக்கு படம் தரும் வினியோகஸ்தர்கள் வினியோகிக்கும் படங்கள் சரியில்லாமல் போனாலோ அல்லது அவர்கள் நொடித்தாலோ  படவரவு நின்றுவிடும். அப்போது பழைய ஹிட் படங்களைப் போட்டு ஒப்பேற்றுவோம். அது சரிவராத பட்சத்தில் காலைக் காட்சியாக அம்மாதிரிப் படங்களை திரையிட ஆரம்பித்து இப்போது எல்லாக் காட்சியும் அம்மாதிரிப் படங்கள் வெளியிடும் அளவுக்கு பல தியேட்டர்கள் மாறிவிட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு தியேட்டர்காரர்களைச் சொல்லியும் குற்றமில்லை.&lt;br /&gt;தியேட்டர் காம்பவுண்ட் வரி, மின்சாரக் கட்டணம், ஆட்கள் சம்பளம், பராமரிப்பு என அவர்களுக்கும் நிறைய செலவு இருக்கிறதே?.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது இங்கே மூன்று தியேட்டர்கள் இருக்கின்றன. ஒன்றை சன் பிக்சர்ஸ் மற்றும் முண்ணனி நிறுவனங்கள்  பிடித்து வைத்துள்ளன. எங்கள் தியேட்டரை பழைய வினியோகஸ்தர்கள் மற்றும் தற்போது ஓரளவு நல்ல படம் கொடுக்கும் சிலர் பிடித்து வைத்துள்ளார்கள். இன்னொன்றுக்கு யாரும் படம் தருவதில்லை. ஏனென்றால் தரம் குறைந்த வசதிகள். அவர்கள் இப்போது வேறு வழியில்லாமல் அந்தப் படங்களைப் போட வேண்டிய நிலை. &lt;br /&gt;&lt;br /&gt;கே : உங்கள் பார்வையில் எந்தப் படத்துக்கு அதிக கூட்டம் வந்துள்ளது?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த 25 வருடங்களை எடுத்துக் கொண்டால் ரஜினி,கமல் படங்களுக்கு நல்ல கூட்டம் வரும். இதில் ரஜினிக்குத்தான் அதிகம். அடுத்த தலைமுறையில் விஜய்,அஜீத்துக்கு கூட்டம் முதல் இரண்டுநாள் வருகிறது. பின் படத்தைப் பொறுத்தே கூட்டம். சூர்யா, விக்ரம் படத்துக்கும் முதல் நாள் கூட்டம் வருகிறது. படம் நல்லாயிருக்குன்னு கேள்விப்பட்டு கூட்டம் கூடின படம் நிறைய இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;கே : எந்திரன் வரை  வந்துள்ள ரஜினி படங்களில் எந்தப் படத்துக்கு கூட்டம் அதிகம் வந்ததுன்னு நினைக்கிறீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;ப : அண்ணாமலை, பாட்ஷா மற்றும் படையப்பாவுக்குத்தான் அதிக கூட்டம். குறிப்பாச் சொல்லணும்னா படையப்பா படம். 25 நாள் ஓடியும் எந்த ஷோவுக்கும் கூட்டம் குறையவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;கே : எந்திரன் அதிக தியேட்டர் ரிலீஸ், மற்றும் அதிக கட்டணம் அதனால் கூட்டம் தெரியாம இருக்கலாம் இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;ப : இங்கே, இரண்டு தியேட்டரில் வெளியிட்டுள்ளார்கள். இரண்டு தியேட்டர் சேர்த்தும் எப்பவும் வருகிற கூட்டம் தான். இந்த கூட்டத்தைக் கணக்கிட்டாலும் படையப்பாவுக்கு வந்தது நல்ல கூட்டம். &lt;br /&gt;&lt;br /&gt;கே : இந்த தொழிலில் எதிர்காலம் எப்படி இருக்கும்னு கணிக்கிறீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;ப : தியேட்டர் வசதியாக இருந்தால்தான் மக்கள் படம் பார்க்க வருவார்கள். பெரிய கம்பெனிகளும் படம் கொடுக்கும். வசதிப்படுத்த முடியவில்லை என்றால் இடிப்பதே நல்லது.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உரையாடி முடித்தவுடன் அருகில் இருந்த கடையில் தேனீர் அருந்திவிட்டு விடைபெற்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சந்திப்புக்கு ஏற்பாடு செய்த நண்பர் செந்தில் வேலுக்கு இங்கும் நன்றியைப் பதிவு செய்துகொள்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1470968473851359111-2139838443196046654?l=muralikkannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muralikkannan.blogspot.com/feeds/2139838443196046654/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1470968473851359111&amp;postID=2139838443196046654' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/2139838443196046654'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/2139838443196046654'/><link rel='alternate' type='text/html' href='http://muralikkannan.blogspot.com/2010/10/blog-post_23.html' title='நேர்காணல் – தென் மாவட்ட தியேட்டர் ஆப்பரேட்டர்'/><author><name>முரளிகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15503809310005245433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/-9LwjCz9jyaw/Tv1YpBSgLkI/AAAAAAAAAbM/cbkhikExF40/s220/DSC00675.JPG'/></author><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-496440173347844194</id><published>2010-10-20T10:40:00.001+05:30</published><updated>2010-10-20T10:42:21.905+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><title type='text'>கமலின் அடுத்த மூவ்</title><content type='html'>கமல்ஹாசன் கலந்து கொள்ளும் விழாக்களைக் கவனித்தாலே அவரின் அடுத்த மூவ் புலப்பட்டுவிடும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவர் கலந்து கொள்ளும், அவர் சம்பந்தப்படாத படங்களின் விழாக்களை இப்படி தரம் பிரிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;1. கருணாநிதி/ஜெயலலிதா ஆகியோர் ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் போது அவர்களுக்காக அல்லது அவர்களால் நடத்தப்படும் விழாக்கள். இதில் வேறு வழியில்லாமல் கலந்து கொள்ள வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;2. நடிகர் சங்கம், பெப்ஸியின் கீழ் வரும் அமைப்புகள் போன்றவற்றால் நடத்தப்படும் கலை/காசு தேற்றும் விழாக்கள். இதுவும் கட்டாயமே.&lt;br /&gt;&lt;br /&gt;3. குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்திய ஏவிஎம், இளம்வயதில் தொடர் வாய்ப்புக் கொடுத்த பாலசந்தர் மற்றும் பெரிதும் மதிக்கும் சிவாஜி குடும்பம் ஆகியவை தொடர்பாக நடக்கும் விழாக்கள். இதில் கலந்து கொள்ளாவிட்டால் தர்மசங்கடம் நேரும்.&lt;br /&gt;&lt;br /&gt;4. கமலுக்கு ஒவ்வொரு சீசனிலும் சில கொள்கை பரப்பு செயலாளார்கள் இருப்பார்கள். அவர்கள் தொடர்பான விழாக்களிலும் கமல் கலந்து கொள்வார். உதாரணத்துக்கு கரணைச் சொல்லலாம். கரணின் கொக்கி, கனகவேல் காக்க ஆகிய படங்களில் விழாக்களில் கலந்து கொண்டதைச் சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவை தவிர அவர் மேலும் சில விழாக்களில் கலந்து கொள்வார். அவைகளை நன்கு கவனித்தோமானால் அந்த விழாக்கள் எல்லாம் அவர் அப்போது நடிக்கும் படத்தின் அல்லது நடிக்கப்போகும் படத்தின் தயாரிப்பாளர்/இயக்குநர்/முண்ணனி தொழில்நுட்பக்கலைஞர் ஆகியோர் தொடர்புடைய விழாவாக இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;ஷங்கர் இயக்கி, தயாரித்த முதல்வன் படத்தின் வெற்றி விழாவில் அவர் கலந்து கொண்டார். காரணம் அப்போது ஷங்கர், ரோபோ படத்தை கமலின் நடிப்பில் இயக்குவதாக இருந்தது. பின்னர் அது கைவிடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;படையப்பா பட வெற்றி விழாவில் அவர் கலந்து கொண்டார். காரணம் அதன் இயக்குநர் கே எஸ் ரவிகுமார் அடுத்து கமலின் தெனாலி படத்தை எடுப்பதாக இருந்தது. அதை மேடையிலும் கமல் வெளிப்படுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;“ரஜினிக்கு யாரை வைத்து வேலை வாங்க வேண்டும் என்ற புத்திசாலித்தனம் இருக்கிறது. எனக்கும் அந்த புத்திசாலித்தனம் இருக்கிறது. என் அடுத்த படம் இந்த இயக்குநருடன் தான்”&lt;br /&gt;&lt;br /&gt;என்று மேடையில் பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் தாணு தயாரிப்பில் வெளியான கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் என்ற படத்தின் ஆடியோ வெளியீடு தேவி தியேட்டரில் பிரம்மாண்டமாக நடந்தது. கலந்து கொண்ட எல்லோருக்கும் பட்டாடை கொடுத்திருந்தார்கள். கமல் அதில் சிறப்பு விருந்தினர். காரணம் அப்போது ஆளவந்தான் தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது கூட மைனா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். காரணம் உதயநிதி ஸ்டாலின் அந்தப் படத்தை வெளியிடுவது. உதயநிதி, கமலின் தற்போதைய ப்ரொட்யூசர்.&lt;br /&gt;&lt;br /&gt;இது மாதிரி கமல் கலந்து கொள்ளும் விழாக்களில் கூட ஒரு காரணம் இருக்கும். காரணம் அவர் நேர மேலாண்மையையும், ஆற்றல் மேலாண்மையையும் இரு கண்களைப் போல கருதுபவர்.&lt;br /&gt;&lt;br /&gt;காதலா காதலா பட ஷீட்டிங் சமயத்தில் அவர் குங்குமம் பத்திரிக்கைக்கு ஒரு பேட்டியளித்தார். அதில்&lt;br /&gt;&lt;br /&gt;“எனக்கு கார் ஓட்டத் தெரியும். அதற்காக நானே கார் ஒட்டிக் கொண்டு போனால் என்னுடைய நேரம் எவ்வளவு வீணாகும். அந்த நேரத்தில் நான் அடுத்து செய்யப் போவதை சிந்தித்தால் எனது ப்ரொடக்டிவிட்டி கூடும். அதனால் தான் நான் ஓட்டுநர் வைத்துக் கொள்கிறேன்”&lt;br /&gt;&lt;br /&gt;என்று சொல்லியிருந்தார். அவர் தேவையில்லாமல் நேரத்தை வீணாக்குவதேயில்லை. அவர் சம்பந்தமில்லாமல் ஒரு விழாவில் கலந்து கொண்டால் அதில் ஒரு உள்ளர்த்தம் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் பரபரப்பாக திரையுலக வட்டாரங்களில் அடிபடும் செய்தி &lt;br /&gt;“ தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிசந்திரனுக்கு இரண்டாவது  குழந்தை பிறந்துள்ளது. கமல் முதல் ஆளாக சென்று வாழ்த்தியுள்ளார்” என்பது.&lt;br /&gt;&lt;br /&gt;காரணமில்லாமல் கமல் அங்கு செல்ல எந்த முகாந்திரமும் இல்லை. தற்போது மன்மதன் அம்பு படம் ஷீட்டிங் முடிந்து அதன் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.  அடுத்த படத்துக்கு அவர் தயாராகி விட்டது போலவே தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஸ்கார் ரவிசந்திரனும் தசாவதாரத்தில் ரவிவர்மனின் உழைப்பைப் பார்த்து மாஸ்கோவின் காவிரி என்னும் படத்தை இயக்கக் கொடுத்து, அவுட்புட்டை பார்த்து நொந்து போய், அந்தப் படம் தன் பேனரில் வெளியானால் ஆஸ்கார் பிலிம்ஸின் குட்வில் போய்விடும் என்று ஒரு டம்மி கம்பெனியைத் தொடங்கி, அதன் மூலம் வெளியிட்டு தோள் பட்டை வரை சுட்டுக்கொண்டார். &lt;br /&gt;&lt;br /&gt; மேலும் அவர் கட்டுப்பாட்டில் இருக்கும் தியேட்டர்களுக்கு படங்களை தொடர்ந்து பீட் பண்ண வேண்டிய கட்டாயத்தில்  இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே ஆஸ்கார் தயாரிப்பில் கமல் படம் என்னும் அமைப்பு ஒன்று தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அது மருதநாயகமாய் இருக்குமோ என்னும் வதந்தியும் மீடியாவில் உலவுகிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;கமல் தேவர் மகன் படம் தொடர்பான ஒரு பத்திரிக்கைப் பேட்டியில் &lt;br /&gt;&lt;br /&gt;“இந்தப் படத்தில் வரும் சிலம்ப சண்டைக்காட்சி (சுண்ணாம்பு மூலம் பொட்டு வைப்பது) மருதநாயகத்துக்காக நான் கன்ஸீவ் பண்ணியது” &lt;br /&gt;&lt;br /&gt;என்று சொல்லியிருந்தார். எனவே கிட்டத்தட்ட 20 ஆண்டு காலமாக கமலுக்கு கனவாக இருப்பது மருதநாயகம். &lt;br /&gt;&lt;br /&gt;மதராச பட்டிணம் படத்துக்கு கிடைத்து இருக்கும் வரவேற்பும் ஆஸ்கார் பிலிம்ஸையும், கமலையும் மருதநாயகத்தை நோக்கி மனம் திருப்ப வைத்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியோ இம்முறையாவது அவர் கனவு நிறைவேறட்டும். இல்லையெனில் ஒரு நல்ல பொழுது போக்குப் படம் இவர்கள் கூட்டணியில் உருவாகட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிறைவேறாத காதல் தான் காவியமாகிறது. சாத்தியப்பட்ட காதல் சடங்காகி விடுகிறது. அதுபோலவே கமலுக்கு மருதநாயகம் நிறைவேறாத காதலாகவே இருக்கட்டும் என்பதே என் ஆசை. இவ்வளவு நாள் எதிர்பார்த்து விட்டு கடைசியில் இதைத்தானா? என்று மனம் வெதும்பும் படி ஆகிவிடக் கூடாது என்பதே என் எண்ணம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1470968473851359111-496440173347844194?l=muralikkannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muralikkannan.blogspot.com/feeds/496440173347844194/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1470968473851359111&amp;postID=496440173347844194' title='34 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/496440173347844194'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/496440173347844194'/><link rel='alternate' type='text/html' href='http://muralikkannan.blogspot.com/2010/10/blog-post_20.html' title='கமலின் அடுத்த மூவ்'/><author><name>முரளிகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15503809310005245433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/-9LwjCz9jyaw/Tv1YpBSgLkI/AAAAAAAAAbM/cbkhikExF40/s220/DSC00675.JPG'/></author><thr:total>34</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-3112294224140980847</id><published>2010-10-19T11:57:00.000+05:30</published><updated>2010-10-19T11:58:05.126+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>ஜெயலலிதா மதுரை கூட்டம் – நேரடி கவரேஜ்</title><content type='html'>காலை ஐந்து ஆறு மணி அளவில் இருந்தே திருமங்கலம் ஏரியா டீக்கடைகளில் திருவிழா கூட்டம். டீயும் சிகரெட் விற்பனையும் கொடிகட்டிப் பறந்தது. கன்னியாகுமரி,திருநெல்வேலி உட்பட பல ஊர்களில் இருந்தும் கட்சியினர் வேன்களில் வந்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மகிந்திரா போன்ற வேன்களே அதிகம் இருந்தன. சொகுசு வாகனங்கள் குறைவு. ஸ்கார்பியோக்களும் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு சென்றது கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் சார்பாக வந்த வேனில்( லிஃப்ட் கேட்டு). அந்த வேன் பொறுப்பாளரிடம் பேசியபோது கிடைத்த தகவல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் நாள் இரவு புரோட்டா ஆம்லேட், காலை டீ, சிகரெட் பின்னர் டிபன், மதியம் மற்றும் இரவு சாப்பாடு வரை அவர் பொறுப்பு. ஆனால் ஒரு ஆளுக்கு என்று தனியாக பணமோ, மதுபானமோ தர தேவையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மாவட்டத்துக்கு இத்தனை வேன்கள் என்று டார்கெட். அதை ஒன்றியம் வாரியாக பிரித்து, பின் கிளைகழகம் வரை பிரித்து டார்கெட் அச்சீவ் பண்ணியுள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வந்தவர்கள் அனைவருமே கட்சிக்காரர்கள் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது மாணவரணி செயலாளராக இருக்கும் ஆர் பி உதயகுமாருக்கு நல்ல மவுசு என்று பேசிக் கொண்டார்கள். ஆனால் எததனை நாளைக்கு அது இருக்கும் என்ற கேள்வியும் அவர்களிடம் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டம் நடந்த இடத்துக்குச் சென்ற போது பெண்களையே காண முடியவில்லை. தீப்பொறி ஆறுமுகம் மீட்டிங்கிலும், சபரி மலையிலும் தான் திரும்பிய பக்கமெல்லாம் ஆண்கள் இருப்பார்கள். நேற்றும் அதுபோலத்தான் கூட்டம் இருந்தது.&lt;br /&gt;83,84 ஆம் ஆண்டு வாக்கில் ஜெயலலிதா எங்கள் ஊருக்கு வரும்போதெல்லாம் சரி பாதி பெண்கள் கூட்டம் இருக்கும். இப்போது அது மிஸ்ஸிங். ஒருவேளை கூட்டம் நடைபெற்ற நேரம், இடம் ஆகியவை காரணியா இல்லை டிவியில் மூழ்கி விட்டார்களா இல்லை போயி என்ன ஆகப் போகுது என்ற மனநிலையா இல்லை அரசியல் ஆர்வம் குறைந்து விட்டதா என பல கேள்விகள்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் பொது மக்கள் என்ற ஜாதியினரையும் அங்கே நான் பார்க்கவில்லை. பார்த்த எல்லோருமே கட்சியினர் தான். இதில் பெண்களை எதிர்பார்ப்பது என்பது ப்ளெக்ஸ் இல்லாத மதுரை வீதிகளை எதிர்பார்ப்பதற்குச் சமம்.&lt;br /&gt;&lt;br /&gt;சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை தற்போது பிளக்ஸ் வைத்துத் தானே தமிழை வளர்க்கிறது. இந்தக் கூட்டத்திலும் பல அட்டகாச பிளக்ஸ் வசனங்கள். அன்னை மீனாட்சியே தொடங்கி அம்மா வந்தாச்சு பூமி குளிர்ந்தாச்சு வரை வித வித வசனங்கள். ஆனால் மேன் ஆப் தி மேட்ச் கிரம்மர் சுரேஷ் என்பவர்தான். (முன்னர் பி டி ஆர் பழனிவேல்ராஜனின் தொண்டராக இருந்து அழகிரியால் அதிமுகவிற்க்கு வந்தவர்). இவர் வைத்த உலக செயலாளர்களுக்கெல்லாம் செயலாளரே மிகப்பெரிய ஹிட்.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டத்தில் பெரும்பாலோனோர்கள் ஜெயலலிதா பேசியதை கவனித்ததாகவே தெரியவில்லை. காலையில் இருந்தே வெயிலிலும், புழுக்கத்திலும் இருந்ததால் உண்டான களைப்பு மற்றும் பேசுபொருள் தெரிந்திருந்ததால் ஏற்பட்ட அசுவராசியம் போன்ற காரணங்கள் என்று நினைக்கிறேன். கேமரா திரும்பும்போது மட்டும் உற்சாகமாக கையாட்டினார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலும் குழு குழுவாகவே அமர்ந்திருந்தார்கள் அல்லது நின்றிருந்தார்கள். உட்கட்சிப் பேச்சுக்கள் அவர்களிடையே பிரதானப் பங்கு வகித்தன. இளைஞர் பாசறை செயலாளர், தொகுதி செயலாளார் ஆகியோர் உற்சாகமாக இருப்பதாக அவர்கள் பேச்சில் இருந்து தெரியவந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டம் முடிந்து வீட்டிற்க்கு கோவை மாவட்டம் வேலுமணி எம் எல் ஏ அவர்கள் ஏற்பாட்டில் வந்திருந்த வேனில் லிஃப்ட் கேட்டு திரும்பினேன். அந்த வேனின் பொறுப்பாளர் வட மாவட்டங்களில் இருந்து குறைவான வாகனங்களே வந்திருந்ததாகவும், மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் இருந்துதான் அதிக வாகனங்கள் வந்திருந்ததாகவும் தெரிவித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;ரிங் ரோடில் இருந்த பல கல்லூரிகளில் விடுமுறை அறிவித்திருந்தார்கள். பல பள்ளிகளிலும்,கல்லூரிகளிலும் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே வகுப்புகளை முடித்து விட்டிருந்தார்கள். சில தனியார் அலுவலகங்களும் வேலை நேரத்தை மாற்றி அமைத்திருந்தன. பொதுமக்களும் தங்கள் நடமாட்டத்தை குறைத்திருந்தனர்/மாற்றியமைத்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பாபர் மசூதி/ராம ஜென்ம பூமி தீர்ப்பின் போதும் மக்களிடம் இதே அணுகுமுறை இருந்தது. மக்கள் புரோ ஆக்டிவ்வாக மாறத் தொடங்கியுள்ளதையே இது காட்டுகிறது. மேலும் பல கல்வி/வியாபார நிறுவனங்கள் அரசியல்வாதிகளுடையதாக இருப்பதும் இதற்கு காரணாமாய் இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் கூட்டம் நடைபெறும்போது அந்தப் பகுதி தவிர மதுரை மிக இயல்பாகவே இருந்தது. கூட்டம் முடிந்த பின்னர் எல்லா வாகனங்களும் ஒரு சேர கிளம்பியதால் மட்டுமே டிராஃபிக் ஜாம் ஆனது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் கவனித்த வரையில் கூடிய கூட்டத்தை பார்த்தால் இது ஒரு கட்சி மாநாடு போலவே நடந்தது. வந்த கூட்டததை  ஆட்சிக்கு எதிரான மக்களின் எழுச்சி என்று சொல்ல வாய்ப்பே இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அதிமுக விற்கு இவ்வளவு நிர்வாகிகள் இருக்கிறார்கள் என்பது திமுகவிற்கு கவலை அளிக்கக்கூடிய விஷயம் தான். ஒவ்வொருவரும் ஐம்பது ஓட்டைக் கொண்டு வந்தாலே அதிமுகவிற்கு பெரிய பலமாகிவிடும். மேலும் இவர்களுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுகவிற்கு தலைவலிதான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1470968473851359111-3112294224140980847?l=muralikkannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muralikkannan.blogspot.com/feeds/3112294224140980847/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1470968473851359111&amp;postID=3112294224140980847' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/3112294224140980847'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/3112294224140980847'/><link rel='alternate' type='text/html' href='http://muralikkannan.blogspot.com/2010/10/blog-post_19.html' title='ஜெயலலிதா மதுரை கூட்டம் – நேரடி கவரேஜ்'/><author><name>முரளிகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15503809310005245433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/-9LwjCz9jyaw/Tv1YpBSgLkI/AAAAAAAAAbM/cbkhikExF40/s220/DSC00675.JPG'/></author><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-9156597212256070553</id><published>2010-10-15T10:30:00.000+05:30</published><updated>2010-10-15T12:10:28.346+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><title type='text'>கம்பெனி நடிகர்கள்</title><content type='html'>கம்பெனி நடிகர்கள் என்றவுடன் நமக்கு உடனடியாக நினைவுக்கு வருவது பாய்ஸ் கம்பெனி முதலான நாடகக் கம்பெனி நடிகர்கள் தான். எம்ஜியார், சிவாஜி கணேசன் போன்றவர்கள் கூட இம்மாதிரி கம்பெனி நடிகர்களாக இருந்து வந்தவர்கள் தான். நடிப்பில் அசத்தி மக்கள் மனதை வசீகரித்துவிட்டால் கம்பெனி நடிகர் என்னும் வட்டத்தில் இருந்து தப்பித்து ஸ்பெஷல் நாடக நடிகர், சினிமா நட்சத்திரம் என முன்னேறிவிடலாம். &lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின்னர் தமிழ்சினிமாவில் மார்டன் தியேட்டர்ஸ், ஜெமினி போன்ற நிறுவனங்கள் ஆண்டுக்கணக்கில் நடிகர் நடிகைகளை ஒப்பந்தம் செய்து மாத சம்பளம் கொடுத்து வேலை வாங்கினார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;சில இயக்குநர்கள் தாங்கள் அறிமுகப்படுத்தும் நாயக/நாயகியரை சில படங்கள் வரை தொடர்ந்து பணிபுரிய வேண்டும் என கேட்டுக் கொள்வதும்/நிர்பந்திப்பதும் உண்டு. பாலசந்தர் நடிகர்களிடத்திலும், பாரதிராஜா நடிகைகள் இடத்திலும் இது போல ஒப்பந்தம் போட்டுக் கொள்வதுண்டு. எனவேதான் பாலசந்தர் கமல்ஹாசன், ரஜினிகாந்த், பிரகாஷ்ராஜ், விவேக் என பலரிடம் தொடர்ந்து வேலை வாங்க முடிந்தது (விதிவிலக்காக இதில் சரிதாவையும் சேர்த்துக் கொள்ளலாம்) . பாரதிராஜாவோ ரேவதி,ராதிகா,ராதா போன்றோரை தொடர்ந்து உபயோகப் படுத்த முடிந்தது. (விதிவிலக்காக ராஜா வை சேர்த்துக் கொள்ளலாம்).&lt;br /&gt;&lt;br /&gt;மணிரத்னம், பாலா ஆகியோரிடத்திலும் இந்தத் தொடர்ச்சியைப் பார்க்கலாம். மணிரத்னம் அரவிந்த்சாமி மற்றும் மாதவனை தொடர்ந்து பயன்படுத்தினார். பாலாவும் விக்ரம்,சூர்யா மற்றும் ஆர்யாவிடம் உரிமை எடுத்துக் கொண்டது உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் எல்லாம் நட்சத்திரங்கள். ஆனால் நடிகர்கள் என்னும் நிலையில் இருந்து தொடர்ந்து ஒரு கம்பெனியின் எல்லாப் படங்களிலும் தலை காட்டுபவர்களை கம்பெனி நடிகர்கள் என்று செல்லமாகக் குறிப்பிடுவார்கள். அப்படி அழைக்கப் படும் கம்பெனி நடிகர்களைப் பற்றி பார்ப்பதே இந்தப் பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் கவிதாலயா நிறுவனத்தை எடுத்துக் கொள்வோம். இந்நிறுவனத்திற்க்கென்றே பிரத்யேக நடிகர்கள் உண்டு. அவர்களில் முக்கியமானவர் கவிதாலயா கிருஷ்ணன். எம் டெக் பட்டதாரியான (அந்தக் காலத்திலேயே!) இவர் கவிதாலயாவின் எல்லாப் படங்களிலும்  இருப்பார், அது யார் நடித்ததாக இருந்தாலும் சரி, யார் இயக்கியதாக இருந்தாலும் சரி. மற்ற கம்பெனிப் படங்களில் இவர் அரிதாகவே தலை காட்டுவார். இதற்கெல்லாம் உச்சமாக இவர் கவிதாலயாவின் துணை நிறுவனமான மின்பிம்பங்களின் அனைத்து சீரியல்களிலும் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். ராஜாவை விட ராஜாவின் மேல் விசுவாசம் என்பதற்கு இவர்தான் உதாரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாசர், சார்லி போன்றவர்களும் கவிதாலயாவின் கம்பெனி நடிகர்களாக இருந்தாலும் அதை விட்டு நாசர் முழு அளவிலும், சார்லி பகுதியாகவும் தங்கள் திறமையினால் தனித்து நின்றுவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக சூப்பர் குட் பிலிம்ஸ். இவர்கள் குறுகிய காலத்தில் ஐம்பது படங்களை தயாரித்தவர்கள். பெரும்பாலும் லோ பட்ஜெட் படங்கள். அதனால் தான் அலுவலக நிர்வாகிகள், உதவி இயக்குநர்கள் ஆகியோரை தொடர்ந்து தங்கள் படங்களில் பயன்படுத்திக் கொள்வார்கள். சிங்கமுத்து, லட்சுமணன்  போன்ற நடிகர்கள் இவர்களின் எல்லாப் படத்திலும் சிறு சிறு கேரக்டர்களின் வருவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;விசுவின் படங்களில் மறைந்த கிஷ்மு (வேறு வழியில்லை, தம்பி), திலீப் போன்றோரை தொடர்ந்து பார்க்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;ராஜ்கமல் பிலிம்ஸ்ஸை பொறுத்தவரை சந்தான பாரதி,அஜய் ரத்னம் பல படங்களில் தலை காட்டினார்கள்.  அதுபோல் பி வாசுவின் படங்களில் பாண்டு, மார்க்கண்டேயன் போன்றோரும், தற்போது கே எஸ் ரவிக்குமாரின் படங்களில் அனுமோகன், மனோபாலா போன்றோரையும் தொடர்ந்து பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இம்மாதிரியான கம்பெனி நடிகர்களின் தொடர் வாய்ப்புக்கு காரணம் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;1. முதல் காரணம் செண்டிமெண்ட். ஒரு வெற்றிப்படத்தில் ஒருவர் தலை காட்டிவிட்டால் அவர் இதிலும் இருக்கட்டுமே என்று கம்பெனி ஆட்கள் அனைவருமே நினைப்பார்கள். எடுத்துக்காட்டாக நாகராஜ சோழன் என்னும் நடிகர் ஒரு கால கட்டத்தில் நடித்த படங்கள் எல்லாமே நூறு நாட்கள். அவரை ஒரு காட்சியிலாவது நடிக்க வைக்க பல இயக்குநர்கள் விரும்பினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;2. ஒரு நிறுவனத்தில் இருக்கும் வேலைகளை இழுத்துப் போட்டு செய்பவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புக் கொடுக்கவே தலைமை விரும்பும். அதுபோல் படப்பிடிப்பில், வணிகத்தில் என ஆர்வம் காட்டும் நபர்களை தொடர்ந்து சினிமாவில் உபயோகப்படுத்த நினைப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;3. சில இயக்குநர்களுக்கு தங்களுக்கு கதை விவாதத்தில் உதவுபவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகிவிடும். அதனாலேயே சில இயக்குநர்களின் படங்களில் சிலர் தொடர்ந்து தலை காட்டுவது உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;4. சில நடிகர்கள் வலுக்கட்டாயமாக சென்று தொடர்ந்து வாய்ப்புக் கேட்பதும் உண்டு. நாமளே இவனுக்கு வாய்ப்புத் தராட்டி யார் தரப்போறா? என்ற அனுதாபத்தில் அவர்களும் வாய்ப்பளிப்பதுண்டு. எங்கள் ஊரில் இருந்த துணை நடிகர் ஒருவர் தொடர்ந்து சங்கிலி முருகன் படங்களில் ஒரு சீனிலாவது நடித்து விடுவார். அதற்குக் காரணம் பட பூஜையன்றே அட்டெண்டென்ஸ் கொடுத்து விடுவதுதான். &lt;br /&gt;&lt;br /&gt;5. சில இயக்குநர்களுக்கு ஒன் டேக் ஆர்டிஸ்ட் எனப்படும் தப்புச் செய்யாமல் நடிக்கும் நடிகர்களைப் பிடிக்கும் நேர/பண விரயத்தைத் தடுக்க அவர்களை அழைத்து இந்த கேரக்டரைச் செய் என்று சொல்லி விடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இப்படி கம்பெனி ஆர்டிஸ்ட் என அழைக்கப் படுவதில் அவர்களுக்கு உண்மையிலே உவப்பாக இருக்குமா என்றால் நிச்சயம் இல்லை என்றே சொல்லிவிடலாம். ஒவ்வொருவரும் திரை உலகத்தில் நட்சத்திரமாக மின்ன வேண்டும் என்ற பெருங்கனவுடனே வந்தவர்களாய்த்தான் இருப்பார்கள். ஒரு கட்டத்தில் கனவு கலைந்து கிடைத்த இடத்தில் அதிருப்தியுடந்தான் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1470968473851359111-9156597212256070553?l=muralikkannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muralikkannan.blogspot.com/feeds/9156597212256070553/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1470968473851359111&amp;postID=9156597212256070553' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/9156597212256070553'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/9156597212256070553'/><link rel='alternate' type='text/html' href='http://muralikkannan.blogspot.com/2010/10/blog-post.html' title='கம்பெனி நடிகர்கள்'/><author><name>முரளிகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15503809310005245433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/-9LwjCz9jyaw/Tv1YpBSgLkI/AAAAAAAAAbM/cbkhikExF40/s220/DSC00675.JPG'/></author><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-5195144467337107014</id><published>2010-07-02T11:50:00.010+05:30</published><updated>2010-07-02T15:34:00.334+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><title type='text'>சூர்யா-கார்த்தி இதில் யார் அம்பிகா? யார் ராதா?</title><content type='html'>தமிழ்சினிமாவில் நடிப்புத் துறையிலும் தொழில்நுட்பத் துறையிலும்  பல சகோதர, சகோதரிகள் திறம்பட பணியாற்றியுள்ளார்கள். நடிப்புத்துறையில் உள்ளவர்கள் தொழில்நுட்பத் துறையில் உள்ளவர்களைக் காட்டிலும் மக்களிடம் எளிதில் சென்று சேர்ந்துள்ளார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;நடிகர்களை எடுத்துக் கொண்டால்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எம்.ஜி.சக்கரபாணி – எம்.ஜி.ராமச்சந்திரன்&lt;br /&gt;&lt;br /&gt;மு.க.முத்து-மு.க ஸ்டாலின் (திரைப்படம் : ஒரே ரத்தம்)&lt;br /&gt;&lt;br /&gt;எம் ஆர் ஆர் வாசு – எம் ஆர் ராதாரவி&lt;br /&gt;&lt;br /&gt;சந்தான பாரதி – ஆர் எஸ் சிவாஜி&lt;br /&gt;&lt;br /&gt;சாருஹாசன் - சந்திரஹாசன் - கமல்ஹாசன்&lt;br /&gt;&lt;br /&gt;ராம்குமார் (அறுவடை நாள்) – பிரபு&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் ராஜசேகர் – செல்வா&lt;br /&gt;&lt;br /&gt;பிரபுதேவா-ராஜு சுந்தரம்-நாகேந்திர பிரசாத்&lt;br /&gt;&lt;br /&gt;சூர்யா – கார்த்தி&lt;br /&gt;&lt;br /&gt;அஜய் கிருஷ்ணா - விஷால்&lt;br /&gt;&lt;br /&gt;ஜித்தன் ரமேஷ் – ஜீவா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;நடிகைகளை எடுத்துக் கொண்டால்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வரலட்சுமி-மாதுரி&lt;br /&gt;&lt;br /&gt;பண்டரிபாய் - மைனாவதி&lt;br /&gt;&lt;br /&gt;சௌகார் ஜானகி - கிருஷ்ணகுமாரி&lt;br /&gt;&lt;br /&gt;சந்தியா - வித்யாவதி&lt;br /&gt;&lt;br /&gt;லலிதா-பத்மினி-ராகினி&lt;br /&gt;&lt;br /&gt;கே ஆர் விஜயா – கே ஆர் வத்சலா - கே ஆர் சாவித்திரி &lt;br /&gt;&lt;br /&gt;ஜெயசுதா-சுபாஷினி&lt;br /&gt;&lt;br /&gt;ராஜ்கோகிலா - ராஜ்மல்லிகா (மீனாவின் தாய்)&lt;br /&gt;&lt;br /&gt;ஜோதிலட்சுமி - ஜெயமாலினி&lt;br /&gt;&lt;br /&gt;ரேகா - ஜிஜி (நினைவெல்லாம் நித்யா)&lt;br /&gt;&lt;br /&gt;ராதிகா-நிரோஷா&lt;br /&gt;&lt;br /&gt;அம்பிகா-ராதா&lt;br /&gt;&lt;br /&gt;இந்திரா - ராசி&lt;br /&gt;&lt;br /&gt;கல்பனா – ஊர்வசி – கலாரஞ்சனி&lt;br /&gt;&lt;br /&gt;அருணா – நந்தினி (ஆவாரம் பூ)&lt;br /&gt;&lt;br /&gt;சரிதா - விஜி&lt;br /&gt;&lt;br /&gt;பானுப்பிரியா-நிஷாந்தி&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கோ சாந்தி – லலிதகுமாரி&lt;br /&gt;&lt;br /&gt;என் உயிர் தோழன் ரமா – லதா&lt;br /&gt;&lt;br /&gt;ஷகிலா - ஷீத்தல் &lt;br /&gt;&lt;br /&gt;அனுஷா - ராகசுதா&lt;br /&gt;&lt;br /&gt;நக்மா-ரோஷினி-ஜோதிகா&lt;br /&gt;&lt;br /&gt;கவிதா - வனிதா - பிரீதா - ஸ்ரீதேவி (விஜயகுமார்) &lt;br /&gt;&lt;br /&gt;சிம்ரன் – மோனல் (இதில் சில குழப்பங்களும் உண்டு,&lt;br /&gt;மோனலை சித்தி பெண் என்றும் கூறுவார்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;மீரா ஜாஸ்மின் - ஜெனி&lt;br /&gt;&lt;br /&gt;ஷாலினி - ஷாமிலி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(சகோதரிகள் பட்டியல் பதிவர்கள் கிருஷ்குமார், உண்மைத்தமிழன்,இந்தியன் ஆகியோர் பின்னூட்டங்கள் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளது. நன்றிகள் பின்னூட்டத்தில் கலக்குவோர் அனைவருக்கும்).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனப் பலர் தமிழ்சினிமாவில் இடம் பிடித்திருக்கிறார்கள். (பலர் விடுபட்டிருக்கலாம்)&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;இந்த வரிசையைப் பார்த்தோமென்றால்&lt;br /&gt;&lt;br /&gt;1. சகோதரர்கள்/சகோதரிகளில் ஒருவர் எட்டிய உச்சத்தை/அடைந்த புகழை இன்னொருவர் அடைந்ததில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;2. அப்படி இருவரும் சமமான இடத்தைப் பிடித்திருந்தார்கள் என்றால் அவர்கள் அத்துறையில் முண்ணனியில் இருந்திருக்க மாட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;3. சமமான புகழைப் பெற்று முண்ணனியில் இருந்திருந்தால் அது வேறு வேறு காலகட்டமாக இருந்திருக்கும். (நக்மா – ஜோதிகா).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விதிக்கு உட்படாமல் ஒரே நேரத்தில் சம புகழை அடைந்தவர்கள் எனில் அது அம்பிகா-ராதா சகோதரிகள்தான். 80களின் துவக்கத்தில் ஸ்ரீதேவி இந்திக்கு சென்று விட, ஸ்ரீபிரியா,ஸ்ரீவித்யா குண்டாகி விட, உருவான வெற்றிடத்தை அம்பிகா,ராதா மற்றும் மாதவி ஆகியோர் நிரப்பினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ராதா பாயும்புலி, தூங்காதே தம்பி தூங்காதே என ரஜினி மற்றும் கமலுடன் ஏ வி எம்மின் அடுத்தடுத்த படங்களில் நடித்தால் அம்பிகா அடுத்த சுற்றில் மிஸ்டர் பாரத், உயர்ந்த உள்ளம் என்று அதே காம்பினேஷனில் கலக்குவார்.&lt;br /&gt;&lt;br /&gt;ராதா நான் மகான் அல்ல, ஒரு கைதியின் டைரி என ஒரே ஆண்டில் ரஜினி,கமலுடன் ஜோடி சேர்ந்தால், நான் சிகப்பு மனிதனில் ரஜினியுடனும், காக்கி சட்டையில் கமலுடனும் அம்பிகா ஜோடி சேர்ந்த படங்கள் ஒரே நாளில் வெளியாகின. &lt;br /&gt;&lt;br /&gt;சிவாஜி கணேசனுடன் அம்பிகா வாழ்க்கையில் (திரைப்படம்) நடித்தால், ராதா முதல் மரியாதையில் ஜோடி சேருவார்.&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினி காந்துடன் எங்கேயோ கேட்ட குரல்,  கமல்ஹாசனுடன் காதல் பரிசு மற்றும் மோகனுடன் இதயகோயில் என இருவரும் ஒரே நாயகனுக்கு ஜோடியாக நடித்ததும் உண்டு. வெள்ளை ரோஜா போன்ற படங்களில் தனித்தனி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்ததும் உண்டு.  &lt;br /&gt;&lt;br /&gt;தற்போது தமிழ்சினிமாவில் அப்படி வணிக மதிப்புடனும், நடிப்பு ரீதியாகவும் புகழ் அடைந்து கொண்டிருப்பவர்கள் சூர்யாவும், கார்த்தியும். சூர்யா அயன்,ஆதவன் மற்றும் சிங்கம் என கலக்க, கார்த்தியும் பருத்திவீரன்,ஆயிரத்தில் ஒருவன்,பையா என தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;இருவரது அடுத்தடுத்த படங்களும் பெரிய நிறுவனங்களால் (தற்போதைய சூழ்நிலையில்) வாங்கப் பட்டிருக்கின்றன. இதற்கெல்லாம் உச்சமாக சன் பிகஸர்ஸ் எந்திரனை அடுத்து தானே தயாரிக்கும் இரண்டாவது படத்தில் இருவரையும் நடிக்க கேட்டிருக்கிறார்கள் என்னும் செய்தி. இது அவர்களின் வணிக மதிப்பை உறுதிப் படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;80களின் ஆரம்பத்தில் வாலிப வயதில் இருந்தவர்களுக்குத் தெரியும் அம்பிகாவை விட, ராதாவுக்கு மவுசு ஒரு படி அதிகம் என்பது. அப்போதைய இளைஞர்களின் கனவுக்கன்னி ராதா தான். &lt;br /&gt;&lt;br /&gt;ராதாவின் அறிமுகப்படமான அலைகள் ஓய்வதில்லையில் ராதாவை வம்புக்கு இழுத்து கார்த்திக் பாடும் பாடல் ”வாடி என் கப்பக் கிழங்கே”. இதை எழுதியவர் கங்கை அமரன். அவரிடம் இந்தப் பாடல் குறித்து ஒருவர் கேட்ட போது அவர் சொன்னது இது.&lt;br /&gt;&lt;br /&gt;”பொதுவா கும்முன்னு இருக்குற பொண்ணுகளை கிழங்கு மாதிரி இருக்கான்னு கிராமப் புறங்கள்ல சொல்லுவாங்க, ராதாவும் அப்படித்தான் இருந்தாங்க. அவங்க நேட்டிவ் கேரளா, கேரளாவுல கப்பக் கிழங்கு தான பேமஸ். அதுதான் வாடி என் கப்பக் கிழங்கேன்னு எழுதுனேன். என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது அப்போது எல்லோருடைய கருத்தும் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்பிகா திருமணத்துக்குப் பின் விவாகரத்து, மறுமணம், கேரக்டர் ரோல், காமெடி ரோல், சின்னத்திரை என தன் கெத்தை விட்டு விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ராதாவோ ராஜசேகரன் நாயரை திருமணம் செய்து கொண்டதோடு சரி, மீடியாவில் இருந்து விலகி விட்டார். தற்போது தன் பெண்ணுடன் திரும்பி வந்திருக்கிறார். வேறு எதிலும் தலைகாட்டி தன் கெத்தை இறங்கிவிடாமல் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார். அக்கால இளைஞர்களின் காணாமல் போய்விட்ட கனவு தேவதையாகவே இன்னும் இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அது போல சூர்யாவா, கார்த்தியா யார் முந்தப் போகிறார் என்பது சில ஆண்டுகளில் தெரிந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்பிகா,ராதாவுக்கு நிழலில் கணவராக நடித்த சிவகுமார் நிஜத்தில் சூர்யா-கார்த்திக்கு தந்தை என்பது இதில் ஒரு சுவராஸ்யமான ஒற்றுமை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1470968473851359111-5195144467337107014?l=muralikkannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muralikkannan.blogspot.com/feeds/5195144467337107014/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1470968473851359111&amp;postID=5195144467337107014' title='57 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/5195144467337107014'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/5195144467337107014'/><link rel='alternate' type='text/html' href='http://muralikkannan.blogspot.com/2010/07/blog-post.html' title='சூர்யா-கார்த்தி இதில் யார் அம்பிகா? யார் ராதா?'/><author><name>முரளிகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15503809310005245433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/-9LwjCz9jyaw/Tv1YpBSgLkI/AAAAAAAAAbM/cbkhikExF40/s220/DSC00675.JPG'/></author><thr:total>57</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-5759697015770547706</id><published>2010-06-29T13:05:00.001+05:30</published><updated>2010-06-29T13:07:12.289+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><title type='text'>1998 ஆம் ஆண்டின் திரைப்படங்கள் – ஒரு பார்வை</title><content type='html'>தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்ற சட்டம் இல்லாமலேயே அழகழகான தமிழ்ப் பெயர்களில் திரைப்படங்களுக்கு பெயர் சூட்டிய ஆண்டு இந்த ஆண்டுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணேதிரே தோன்றினாள், மறுமலர்ச்சி, தினந்தோறும், சொல்லாமலே, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், இனியெல்லாம் சுகமே, துள்ளித் திரிந்த காலம், இனியவளே, கண்களின் வார்த்தைகள், ப்ரியமுடன், நிலாவே வா, என்னுயிர் நீதானே மற்றும் உயிரோடு உயிராக என நல்ல தலைப்புகளுடன்  மென்மையான படங்கள் இந்த ஆண்டில் வெளிவந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல முழுநீள நகைச்சுவைத் திரைப்படங்களும் இந்த ஆண்டில் அதிக அளாவு வெளிவந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;உதவிக்கு வரலாமா, நாம் இருவர் நமக்கு இருவர், காதலா காதலா, அரிச்சந்திரா, கோல்மால், கவலைப்படாதே சகோதரா, கும்பகோணம் கோவாலு மற்றும் கல்யாண கலாட்டா என நகைச்சுவையை மையமாகக் கொண்ட பல படங்கள் இந்த ஆண்டு வெளியாகின.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆண்டு ஆக்‌ஷன் படங்களை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களை ஏமாற்றிய ஆண்டாகும். &lt;br /&gt;&lt;br /&gt;அஜீத்தும் விஜய்யும் ஆக்‌ஷன் ஹீரோக்களாக பரிமளிக்காத நேரம். விக்ரம் அப்போதுதான் மொட்டையடித்துக் கொண்டு சேதுவாகிக் கொண்டிருந்தார் வரப்போகும் வசந்தத்தை எதிர்பார்த்து. சூர்யா சினிமா என்றால் என்ன என்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். சத்யராஜ் பீல்ட் அவுட். கார்த்திக் ரொமாண்டிக்கான காதல் கலந்த லைட்டான கதைகளை மட்டும் பண்ணிக் கொண்டிருந்தார். பிரசாந்த் அன்றைக்கும் இன்றைக்கும் என்ற பேச்சே இல்லாமல் எப்போதும் இப்படித்தான் என்று இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கமல்ஹாசன் அவ்வை சண்முகி, மற்றும் சாக்‌ஷி 420 யின் வெற்றிக்குப் பின் மருதநாயகத்தை தொடங்கி, முடியாமல் பெப்ஸி பிரச்சினையில் நுழைந்து, வேறு வழியில்லாமல் காதலா காதலா படத்தைத் தொடங்கி வெளியிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதைய  நிலைமைக்கு ஆக்‌ஷன் ஹீரொக்கள் என்றால் ரஜினிகாந்த், விஜயகாந்த், சரத்குமார் மற்றும் அர்ஜூன் தான். இதில் ரஜினிகாந்த் படையப்பாவை படைக்கும் ஆயத்தங்களில் இருந்தார். விஜயகாந்தோ தர்மா, உளவுத்துறை, வீரம் விளைஞ்ச மண்ணு என தியேட்டருக்குச் சென்று படம் பார்க்கும் வழக்கத்தையே ஒழிக்கப் பாடுபட்டுக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt; அர்ஜூன் கே எஸ் ரவிகுமாருடன் இணைந்து கொண்டாட்டம் என்ற ஆக்‌ஷனும் இல்லாத காமெடியும் இல்லாத இடைநிலைப் படத்தைக் கொடுத்தார். தாயின் மணிகொடி என்ற வழக்கமான தேச பக்தி படமும் அர்ஜூன் நடிப்பில் வெளியானது. ஆனால் அப்படம், படத்தின் கதாநாயகியான நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவான நிவேதாவுக்காக மட்டுமே ஞாபகத்தில் இருக்கிறது. (படத்தைத் தொடர்ந்து பெங்களூரில் அவர் தற்கொலை செய்து கொண்டார் (பெரிய இடத்து விவகாரம்)).&lt;br /&gt;&lt;br /&gt;ராஜ்கிரண் வீரத்தாலாட்டு, பொன்னு விளையற பூமி என படம் பார்க்க வந்தவர்களை புண்ணாக்கிக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடித்த நட்புக்காக மட்டுமே இந்த ஆண்டில் வெற்றியைப் பெற்ற  ஒரே ஆக்‌ஷன் படம். இதிலும் செண்டிமெண்ட் கொஞ்சம் தூக்கல்தான். வின்செண்ட் செல்வா இயக்கத்தில் விஜய் நடித்த ப்ரியமுடன் ஓரளவு ஆக்‌ஷன் ரசிகர்களைக் கவர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆண்டில் வெளியான சில திரைப்படங்களைப் பற்றிய ஒரு பார்வை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;மறுமலர்ச்சி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மதுரை, நெல்லை,கோவை மற்றும் சென்னை வட்டாரப் படங்களே வந்து கொண்டிருந்த காலத்தில் தென் ஆற்காடு வட ஆற்காடு மாவட்ட கிராமத்தை களமாகக் கொண்டு வந்த படம் இது (முதல் படமென்றும் சொல்லலாம்). முதலில் ராசு படையாச்சி என்னும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் மறுமலர்ச்சி என மாற்றப்பட்டது. அதேபோல் முதலில் விஜயகாந்த் நாயகன் வேடத்துக்குப் பேசப்பட்டு பின்னர் மம்மூட்டி நாயகனாக நடித்தார். பாரதி இயக்கம், எஸ் ஏ ராஜ்குமார் இசை. இப்பட ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சான், அப்போது ராசு படையாச்சி என்னும் பெயருக்காகவே எந்த தமிழ் கதாநாயகனும் நடிக்க மறுக்கிறார்கள் என ஆவேசப்பட்டார். பின்னர் அவர் ஆற்காடு மாவட்ட பின்புலத்தில் பல படங்களை இயக்க இப்படம் ஒரு தூண்டுகோலாக அமைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;கோல்மால்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அருமையான முழுநீள நகைச்சுவைத் திரைப்படம். நாயகன் செல்வா, நாயகி மோனிகா நெருக்கருக்குப் பதில் வேறு நல்ல மார்க்கெட் வேல்யு உள்ளவர்கள் நடித்திருந்தால் உள்ளத்தை அள்ளித் தா அளவுக்கு பேசப்பட்டிருக்கும். ஏராளாமான திருப்பங்களைக் கொண்ட நகைச்சுவைப் படம். ஸ்க்ரிப்ட் பலமாக இருந்தாலும் காஸ்டிங் சரியில்லாவிட்டால் படம் ரீச் ஆகாது என நிரூபித்த படம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;நட்புக்காக&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தின் பிரிவியு பார்த்து விட்டு ரஜினி, கே எஸ் ரவிகுமாரிடம் கேட்டது “ இந்த மாதிரி கதையெல்லாம் ஏன் என்கிட்ட சொல்ல மாட்டேங்கிறங்க?”. படம் தெலுங்கில் சிரஞ்சிவி நடிக்க ”சினேகம் கோசம்” என்ற பெயரில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt; &lt;br /&gt;தினந்தோறும்/துள்ளித்திரிந்த காலம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு படங்களுமே ஒத்த சாயல் கொண்ட படங்கள். வேலை இல்லாத் திண்டாட்டத்தையும், இளைஞர்களின் பொறுப்பின்மையையும் களமாகக் கொண்டு வெளிவந்த படங்கள்.  தினந்தோறும் படம் இயக்குநர் நாகராஜனின் காட்சி அமைப்புகளாலும், வசனத்தாலும் பேசப்பட்டது. பின்னர் இயக்குநர் நாகராஜன் குடிக்கு அடிமையாகி, தற்போது மீண்டு வருவதாகத் தகவல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சொல்லாமலே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாழ்வு மனப்பான்மையை அடிப்படையாக வைத்து வெளிவந்த படம். ஆனால் கிளைமாக்ஸில் நாக்கை அறுப்பதால் அதுவே பல ஊடகங்களால் முன்னிலைப் படுத்தப்பட்டது. இயக்குநர் சசிக்கு து முதல் படம். பின்னர் அவர் ரோஜாக்கூட்டம், டிஷ்யூம், பூ என வெரைட்டியான படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தாலும் தமிழில் அவருக்கு நிலையான இடம் இல்லாமல்  இருப்பது வேதனையான ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;காதல் மன்னன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் சரணின் முதல் படம். இன்னொருவருக்கு நிச்சயித்த பெண்ணை காதலித்து மணக்கும் ரொமாண்டிக் ஹீரோ வேடத்தில் அஜீத். இம்மாதிரி தமிழில் வந்த முதல் படம் என்றும் சொல்லலாம். (தமிழ் – தில்வாலே லே துனியா.......). படத்தின் இணை இயக்குநர் விவேக் (பாலசந்தரின் சிஷ்யர்கள்).  பின்னர் இவருக்கும் சரணுக்கும் முட்டிக் கொண்டது. மெஸ் ஓனராக எம் எஸ் விஸ்வனாதனை முதன் முதலில் நடிக்க வைத்திருந்தார்கள். நாயகி மானு கலாசேத்திரா மாணவி. செக்யூரிட்டி சர்வீஸ், மேன்ஷன் மெஸ், டூ வீலர் சர்வீஸ் ஸ்டேஷன் என நகரத்தின் அடையாளங்களை திரைக்கு தெளிவாக கொண்டு வந்த படம் இது.   &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;அரிச்சந்திரா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கல்யாண வயதில் ஒரே இடத்தில் வேளை பார்க்கும் நண்பர்கள். குடியும் கூத்துமாய் இருப்பவர்கள். அவர்களின் லீடருக்கு குடியை, மாமிசத்தை, சிகரெட்டை வெறுக்கும் பெண்ணின் மேல் காதல். ஏமாற்றி காதலிக்கிறான். பின்னர் மாட்டிக் கொள்கிறான். எப்படி அவள் அன்பை மீண்டும் பெறுகிறான் என்பதே கதை. இந்தக் கேரக்டருக்கு கார்த்திக்கை விட பொருத்தமாய் யார் கிடைப்பார்?. நல்ல எண்டெர்டைனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;நாம் இருவர் நமக்கு ஒருவர்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிரபு தேவா தாடி எடுத்த படம், மீனா நீச்சலுடையில் நடித்த படம். சுந்தர் சி யின் வழக்கமான ஆள் மாறாட்டக் காமெடிப் படம். காதலா காதலா வுக்கும் இதற்கும் சில காட்சிகளில் ஒற்றுமை இருந்தது. கார்த்திக் ராஜா அருமையான மெலடிகளைக் கொடுத்திருந்தார். என்ன வென்று தெரியாமல் ஏதோ குறைந்திருந்ததால் தோல்வியடைந்த படம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கார்த்திக் கடனுக்கு (வாங்கிய) நடித்துக் கொடுத்த படம். ரமேஷ் கண்ணாவுக்கு நகைச்சுவை நடிகன் அந்தஸ்து கொடுத்த படம். தீபாவளிக்கு முன் வெளியாகி தீபாவளிப் படங்கள் பப்படமானதால் பொங்கல் வரைக்கும் ஓடிய படம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கண்ணெதிரே தோன்றினாள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதாவின் வசனத்தில் அறிமுக இயக்குநர் ரவிச்சந்திரன் இயக்கி தேவாவின் கானாப் பாடல்களோடு வெற்றியடைந்த படம்.  பிரசாந்துக்கு சொல்லிக்கொள்ளும் படி அமைந்த மிகச்சில படங்களில் ஒன்று. &lt;br /&gt;&lt;br /&gt;இதே ஆண்டில் தில்சே படம் தமிழில் உயிரே என வெளியாகி இவ்வளவுதான் மணிரத்னம் என்று தமிழ் மக்களை உணர வைத்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1470968473851359111-5759697015770547706?l=muralikkannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muralikkannan.blogspot.com/feeds/5759697015770547706/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1470968473851359111&amp;postID=5759697015770547706' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/5759697015770547706'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/5759697015770547706'/><link rel='alternate' type='text/html' href='http://muralikkannan.blogspot.com/2010/06/1998.html' title='1998 ஆம் ஆண்டின் திரைப்படங்கள் – ஒரு பார்வை'/><author><name>முரளிகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15503809310005245433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/-9LwjCz9jyaw/Tv1YpBSgLkI/AAAAAAAAAbM/cbkhikExF40/s220/DSC00675.JPG'/></author><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-5688755707931947911</id><published>2010-06-28T12:29:00.000+05:30</published><updated>2010-06-28T12:31:07.745+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><title type='text'>தமிழ் சினிமாவில் வீடுகள்</title><content type='html'>தமிழ்சினிமாவில் கதாநாயகன், நாயகி, எதிர்நாயகன், ஆகியோரது குணாதிசயங்கள் பில்ட் அப் காட்சிகளின் மூலமாகவோ அல்லது பிறரை விட்டு பேசச் சொல்லியோ தான் பார்வையாளனுக்கு உணர்த்தப் படுகிறது. அவர்கள் குடியிருக்கும் வீடானது அந்தக் குணாதிசயங்களை பிரதிபலிக்கும் வகையில் காட்டப்படுகிறதா என்று பார்த்தோமானால் பெரும்பாலான திரைப்படங்களில் ஏமாற்றமே மிஞ்சும்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் நாயகர்/நாயகியின் செல்வ நிலையை காட்டும் விதத்தில் &lt;br /&gt;&lt;br /&gt;ஏழை – குடிசை (கிராமம் மற்றும் சேரிப்பகுதி)&lt;br /&gt;&lt;br /&gt;கீழ் நடுத்தரம் - சம்சாரம் அது மின்சாரம் செட் (தனி வீடு)   &lt;br /&gt;&lt;br /&gt;                ஒண்டுக் குடித்தனங்கள் (ஸ்டோர்ஸ்) &lt;br /&gt;&lt;br /&gt;மத்திய நடுத்தரம் – ஹவுசிங் போர்ட் டைப் வீடுகள்&lt;br /&gt;&lt;br /&gt;உயர் நடுத்தரம்- அபார்ட்மெண்ட் டைப், &lt;br /&gt;&lt;br /&gt;பணக்காரர்கள் – கீழ்பாக் குஷால்தாஸ் கார்டன் (தற்போது இடிக்கப்பட்டு விட்டது), ஈ சி ஆர் ரோட் பங்களாக்கள், கல்பனா ஹவுஸ், இரண்டு பக்கம் படிக்கட்டு வைத்து ஹை சீலிங் உள்ள வீடுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும் செல்வந்தர்/ நாட்டாமை டைப் – எம் ஏ எம் ராமசாமி வீடு, செட்டுநாட்டு ஆயிரம் ஜன்னல் வீடு.&lt;br /&gt;&lt;br /&gt;என அவர்களின் இருப்பிடம் சித்தரிக்கப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆச்சாரமானவர்கள் என்பதைக் காட்ட ஒரு பூஜை அறை, துளசி மாடம் ஆகியவற்றைக் காட்டினால் போதும் என்ற கருத்தும் தமிழ்சினிமாவில் தொன்று தொட்டு வழங்கிவருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;வில்லனுக்கும் அவர் வசதிக்கும், தொழிலுக்கும் மற்றும் பதவிக்கும் ஏற்ற வீடு காட்டப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நகைச்சுவை நடிகன் தான் பாவம், அவனுக்கு என்று சொந்தமாக ஒரு இருப்பிடம் மிக அரிதாகவே (சூரிய வம்சம், பெரிய தம்பி) காட்டப்படும். அதுகூட கதைக்கு அவசியமாவதால் வேறு வழியில்லாமல் காட்டப்படும். &lt;br /&gt;&lt;br /&gt;பேய்ப்படங்கள் மற்றும் குற்றம் சார்ந்த திகில் படங்களில் வீடுகள் அமானுஷ்ய தன்மை கொண்டதாக சித்தரிக்கப்படும் (13 ஆம் நம்பர் வீடு, ஆனந்தப்புரத்து வீடு).&lt;br /&gt;&lt;br /&gt;வீடு ஒரு கதாபாத்திரமாக அமைந்த படங்கள் என்றால்&lt;br /&gt;&lt;br /&gt;பாலுமகேந்திராவின் வீடு படம் தான் சட்டென்று எல்லோர் நினைவுக்கும் வரும். ஒரு நடுத்தர குடும்பம் வீடு கட்ட படு கஷ்டத்தை காவியமாக சொன்ன படம் அது. &lt;br /&gt;&lt;br /&gt;டி பி கஜேந்திரன் இயக்கத்தில் உருவான பட்ஜெட் பத்மநாபன், தன் வீட்டை மீட்க போராடுபவனின் கதையை நகைச்சுவை முலாம் பூசி சொன்னது.&lt;br /&gt;&lt;br /&gt;சேரனின் பாண்டவர் பூமி, குடும்பத்திற்க்காக சிறைக்குப் போன தம்பி வெளிவந்து நன்கு வாழ வேண்டுமென அவனது அண்ணன்கள் ஒரு மணப்பெண்ணை வளர்த்து, வீட்டையும் கட்டி வைப்பதை இணை கதையாகச் சொன்னது. &lt;br /&gt;&lt;br /&gt;என சில படங்களைச் சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே எப்படிப் பார்த்தாலும் குணாதிசயங்களைச் சொல்லும் வீடு காட்டப் பட்டிருக்கிறதா என்று பூதக் கண்ணாடி வைத்துத் தான் தேட வேண்டியிருக்கிறது.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டியோக்களில் சினிமா சிறைப்பட்டிருந்த காலத்தில் கார்பெண்டரும், பெயிண்டருமே வீட்டை முடிவு செய்தார்கள், பதினாறு வயதினிலேக்குப் பின் இயல்பு வீடுகள் என்ற போர்வையில் மதுரை, கோபி செட்டிப் பாளையம் மற்றும் காரைக்குடி சுற்று வட்டார வீடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று. சிவாஜி படத்துக்காக ரஜினியின் வீட்டை பிரமாண்டமாய் காட்ட வேண்டுமென்று டெல்லியில் அலைந்து அந்த வீட்டைப் பிடித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகன்/நாயகியின் தனித் தன்மைகளை வீட்டு அலங்காரம், அங்கு உள்ள பொருட்கள், போஸ்டர்கள், பொருள் அடுக்கியிருக்கும் விதம் என  காட்ட கலை இயக்குநர்களுக்கு சுதந்திரத்தையும், ஸ்க்ரிப்டையும் கொடுங்கள் இயக்குநர்களே.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1470968473851359111-5688755707931947911?l=muralikkannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muralikkannan.blogspot.com/feeds/5688755707931947911/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1470968473851359111&amp;postID=5688755707931947911' title='44 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/5688755707931947911'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/5688755707931947911'/><link rel='alternate' type='text/html' href='http://muralikkannan.blogspot.com/2010/06/blog-post.html' title='தமிழ் சினிமாவில் வீடுகள்'/><author><name>முரளிகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15503809310005245433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/-9LwjCz9jyaw/Tv1YpBSgLkI/AAAAAAAAAbM/cbkhikExF40/s220/DSC00675.JPG'/></author><thr:total>44</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-7763004213538730970</id><published>2010-01-22T10:03:00.006+05:30</published><updated>2010-01-22T11:37:32.984+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><title type='text'>டப்பிங் படங்களின் மாற்றம் (2000 - 2009)</title><content type='html'>முன்னாட்களில் தமிழ்நாட்டில் டப்பிங் படங்கள் என்றாலே அது தெலுங்கு தேசத்திலிருந்து வந்ததாகத்தான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt; வடநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உணவு வகைகளும், நாயகிகளும் தமிழ் சாயம் பூசிக்கொண்ட போது அதை ஆதரித்த தமிழன் அவர்களது படங்கள் சாயம் பூசிக் கொண்ட போது அதை  ஆதரிக்கவில்லை. நேரடி இந்திப்படங்கள் இங்கே அபார வெற்றி பெற்றிருக்கின்றன. ஆனால்  இந்தி டப்பிங் இங்கே சகிக்க முடியாததாகவே இருந்திருக்கிறது. &lt;br /&gt;ரஜினியின் முகத்திற்காகக் கூட அதை இங்கே யாரும் பார்க்கத் தயாராயில்லை. லட்சத்தில் ஒருவன், ராஜகுரு போன்ற படங்களை ரஜினியின் ரசிகர்கள் கூட பார்த்திருப்பார்களா? என்பது சந்தேகமே.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து கன்னட படங்கள். அதை பெங்களூர்காரர்களே  பார்க்க மாட்டார்கள். அதையும் மீறி சில பாலியல் சார்புடைய கன்னட படங்கள் டப் ஆகி வந்தன. அது என்னவோ தெரியவில்லை சரோஜாதேவி, சௌந்தர்யா மற்றும் திவ்யா போன்ற ஏராளமான அழகிகளை உற்பத்தி செய்யும் கன்னட தேசம் ஆண்கள் விஷயத்தில்   பாரபட்சமாகவே நடந்து கொள்கிறது. போஸ்டர்களில் ஹீரோக்களின் முகத்தைப் பார்த்தால் கழுதை கூட அதை சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. உபேந்திரா போன்று ஓரளவு வித்தியாசமாக படமெடுப்பவர்களின் படங்கள் கூட இங்கே ஓடமாட்டேன் என்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மலையாள தேசத்திலிருந்து கமர்சியல் வேல்யு உள்ள திரைப்படங்கள் 80களிலும் 90 களிலும் ஓரளவு இங்கே டப் ஆகி வந்துள்ளன. மம்முட்டி, மோகன்லால், சுரேஷ் கோபி ஆகியோரது போலிஸ் மற்றும் கடத்தல் கதைகள் இங்கே வந்து வெற்றி பெற்றுள்ளன. ஆனால் இந்தப் பத்தண்டுகளில்  அப்படி வந்து வெற்றி பெற்ற படங்கள் மிகக் குறைவு.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தது ஆந்திரா. கால காலமாகவே அங்கிருந்து படங்கள் இங்கே டப் ஆகி வந்துள்ளன. முதலில் புராணப் படங்கள் வந்தன. பின்னர்  காந்தாராவ், சோபன் பாபு போன்றோரது அதிரடி ஆக்ஷன் படங்கள் டப் ஆகி வந்தன. பின்னர் விஜய நிர்மலா போன்றவர்கள் டாம் பாய் கேரக்டர்களில் நடித்த  ரிவால்வர் ரீட்டா, கன்பைட் காஞ்சனா, டூபான் குயின் போன்ற படங்கள் வந்தன. விட்டலாச்சார்யா கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இல்லாமலேயே மிரட்டிய மாயாஜாலப் படங்கள் தனி மார்க்கெட்டைக் கொண்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படங்கள் அனைத்தையும் பார்த்தால் அவை உள்ளடக்கம் சார்ந்ததாகவே இருக்கும். கதாநாயகனுக்காக டப்பிங் செய்யப்படாமல் உள்ளடக்கத்திற்க்காக டப்பிங் செய்யப்பட்டிருக்கும். இதை மாற்றியது சிரஞ்சீவி தான். கோதண்டராமி ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி, மாதவி நடித்து வெளியான கைதி திரைப்படம் 100 நாட்களை கடந்து ஓடி சிரஞ்சீவிக்கு இங்கு ஒரு மார்க்கட்டை உருவாக்கியது. அதன்பின் சிரஞ்சீவி நடித்த பல படங்கள் நாயகனுக்காக டப் செய்யப்பட்டன. இதுதாண்டா போலிஸ் வெற்றிக்குப் பின் ராஜ சேகருக்கும், உதயம்,இதயத்தை திருடாதே வெற்றிக்குப் பின் நாகார்ஜுனாவுக்கும் ஒரு மர்க்கெட் உருவானது. &lt;br /&gt;&lt;br /&gt;இதில் ஒரு குறிப்படத்தக்க அம்சம் என்னவென்றால் அப்போது தமிழில் உச்சத்தில் இருக்கும் நாயகியுடன் இவர்கள் நடிக்கும் படங்களுக்கு ஒரு முன்னுரிமை இருக்கும். ஸ்ரீதேவி,ராதா ஆகியோர் உச்சத்திலிருக்கும் போது அவர்கள் படங்கள் அதிகமாக டப் ஆகி வந்தன. &lt;br /&gt;சில்க்ஸ்மிதாவக்காகவும் சில படங்கள் டப் செய்யப்பட்டு வந்தன.இது குஷ்பூ காலத்தில் இன்னும் அதிகமானது. (ஹீரோயின் சென்ட்ரிக்). ரோஜா போதை தமிழ்நாட்டு ரசிகர்களை பீடித்திருந்தபோது அவருக்காக வினோத்குமார், பாலகிருஷ்ணா ஆகியோரையெல்லாம் சகித்துக் கொள்ளும் நிலைக்கு தமிழன் தள்ளப்பட்டான். உள்ளத்தை அள்ளித்தந்த ரம்பா, காதலன்,பாட்ஷாவுக்குப் பின் நக்மா ஆகியோருக்காவும் இங்கே படங்கள் டப் செய்யப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதவிர அம்மன், அருந்ததீ  போல மிஸ்டிக் கதையமைப்பு உள்ள படங்களும், கமல் மற்றும் ரஜினி தெலுங்கில் பிரத்யேகமாக நடித்த படங்களும் இங்கே டப் ஆகி வந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்தப் பத்தாண்டுகளில் தெலுங்கு டப்பிங் படங்கள் பெருமளவு குறைந்து விட்டன. அருந்ததீ போல மிகச் சில படங்கள் மட்டுமே (ஏறக்குறைய இல்லை என்றும் சொல்லலாம்) அந்த அளவுக்கு எந்தப் படமும் இங்கே வெற்றி பெற வில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாற்றத்திற்க்கு காரணம் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;1. தெலுங்கு மசாலா படங்களை ரசிக்கக் கூடியவர்களுக்கு இங்கேயே தீனி கிடைக்கிறது. அதீத உணர்ச்சிகர வசனங்கள், சண்டை, பாடல்கள் என கலந்து கட்டி படமெடுக்கும் ஷங்கர், பேரரசு போன்றோர் இங்கேயே வந்துவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;2. கொஞ்சம் வித்தியாசமான படமாக இருந்தால் அதை கவ்விக் கொண்டு வந்துவிட விஜய், ஜெயம் ரவி ஆகியோரது உளவுப்படைகள் அங்கேயே சுற்றிக் கொண்டு இருக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;3.ஆங்கில டப்பிங் படங்களின் வரவு இந்தப் பத்தாண்டுகளில் முக்கியமான மாற்றம். ஜாக்கிசான் முதல் டேனியல் கிரெக் வரை இங்கே சென்னை தமிழில் பேசுகிறார்கள்.அர்னால்டு சிவனேசன் என்று கூட டைட்டில்  போடுவார்கள் போலிருக்கிறது கலிபோர்னிய கவர்னருக்கு.  2012ன் வசூல் அயன் வசூலை சில தியேட்டர்களில் மிஞ்சி விட்டது என்கிறார்கள். அவதாரை ஹாலிவுட் பாலா பார்ப்பதற்குள் கோலிவுட் சங்கர் பார்த்துவிடுகிறார். இதனால் தெலுங்கு டப்பிங் படங்கள் தங்கள் மார்க்கெட்டை படிப்படியாக இழந்து வருகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;4. முன்னர் ஹீரோயின்களின் ஆயுள் காலம் அதிகமாக இருந்தது. இப்போது இரண்டு ஆண்டுகள் கூட யாரும் தாக்குப் பிடிப்பதில்லை. ஒரு கிரேஸ் ஏற்பட்டு இந்த ஹீரோயினின்  படத்தை டப் செய்யலாம என்று யோசிப்பதற்க்குள் அவரது மார்க்கெட் போய்விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;5. வணிக மதிப்புக் கொண்ட நம் நடிகர்கள் யாரும் இப்போது அங்கே பிரத்யேக தெலுங்குப் படங்களில் நடிப்பதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;மலையாள படங்களின் பட்ஜெட் மிகக் குறைவு என்பதால் அங்கே இப்போது மசாலாப் படங்கள் நம்மவர்களை ஈர்க்கும் அளவுக்கு தயாராவதில்லை.   வித்தியாசப் படங்களை இங்கே விக்ரம் (காசி, மஜா), சூர்யா (பேரழகன்) போன்றோரை வைத்து ரீமேக் செய்து விடுகிறார்கள். பழசிராஜா போரில் மட்டுமில்லாமல் வசூலிலும் இங்கே தோல்வியடைந்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பத்தண்டுகளில் டப்பிங் படங்களைக் குறித்த வரையில் ஏற்பட்ட மாற்றம் டோலிவுட்டுக்குப் பதில் ஹாலிவுட் என்பதே.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1470968473851359111-7763004213538730970?l=muralikkannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muralikkannan.blogspot.com/feeds/7763004213538730970/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1470968473851359111&amp;postID=7763004213538730970' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/7763004213538730970'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/7763004213538730970'/><link rel='alternate' type='text/html' href='http://muralikkannan.blogspot.com/2010/01/2000-2009_22.html' title='டப்பிங் படங்களின் மாற்றம் (2000 - 2009)'/><author><name>முரளிகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15503809310005245433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/-9LwjCz9jyaw/Tv1YpBSgLkI/AAAAAAAAAbM/cbkhikExF40/s220/DSC00675.JPG'/></author><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-2585085917084107714</id><published>2010-01-19T18:48:00.006+05:30</published><updated>2010-01-19T21:19:23.884+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><title type='text'>2000 - 2009 பத்தாண்டுகளில் அறிமுக நடிகர்கள்.</title><content type='html'>70களில் அறிமுகமான (நாயகர்களாக) கமல்ஹாசனும்,ரஜினிகாந்தும் 80,90,1 என 3 தசாப்தங்களைக் கடந்தும் இன்னும் ஸ்டெடியாக இருக்கிறார்கள்.  70களின் இறுதியில் வந்த விஜயகாந்தும் இந்த மூன்று தசாப்தங்களில் நின்று காண்பித்து விட்டார். பாக்யராஜ் 80களின் இறுதிவரை நிலைத்து நின்று தொண்ணூறுகளில் ஆரம்பத்தில் பீல்ட் அவுட் ஆனார்.&lt;br /&gt;&lt;br /&gt;80களில் அறிமுகமாகி வெற்றிக்கொடி நாட்டிய  ராஜேந்தர்,மோகன்,ராமராஜன்,பாண்டியராஜன் ஆகியோர் தொண்ணூறுகளில் பீல்ட் அவுட் ஆனார்கள். கார்த்திக் 90களின் இறுதிவரை நிலைத்தார். பிரபு 90களின் பாதிவரை. முரளியும் 90களின் இறுதிவரை தாக்காட்டினார். சத்யராஜ் நிலைத்து நின்றாலும் மூன்றாம் வரிசை நாயகனாகவே உள்ளார். இதன் இறுதியில் அறிமுகமானவர்களில் இப்பொது வரை ஸ்டெடியாக இருப்பவர் விக்ரம் மட்டுமே.  அர்ஜூன்,சரத்குமார் தள்ளாட்டம், பிரசாந்த் பல கிரகங்களால் அலைக்கழிக்கப்பட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;90களின் ஆரம்பத்தில் அறிமுகமாகி  கோடி ரூபாய் சம்பளத்தை முதலில் தொட்ட ராஜ்கிரணும் அந்தப் பத்தாண்டு இறுதிக்குள்ளேயே அமைதியாகி விட்டார். விஜய்,அஜீத் மற்றும் இறுதியில் அறிமுகமான சூர்யாவும் மட்டுமே இன்னும் பத்தாண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வாய்ப்புடன் இருக்கிறார்கள். அரவிந்த்சாமி, அப்பாஸ் போன்றோர் அஸ்தமித்தே விட்டார்கள். நெப்போலியன் மந்திரியாகிவிட்டார். மகேந்திரனிடம் பாராட்டுப் பெற்ற பிரபுதேவாவும் நடிகராக பத்தாண்டுகளைத் தாண்ட முடியவில்லை. அருண்விஜய்யை எப்படி சொல்வது என்றே குழப்பமாக உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;சரி, இந்தப் பத்தாண்டில் அறிமுகமானவர்களில் யார் யார் அடுத்த இரு பத்தாண்டுகள் வரை நிலைத்திருப்பார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;1.மாதவன்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அலைபாயுதே, மின்னலே,ரன் போன்ற வெற்றிப்படங்கள், அன்பே சிவம்,ஆய்த எழுத்து,நளதமயந்தி,தம்பி போன்ற வித்தியாச கதாபாத்திரங்கள் என நல்ல நடிகர் என்ற பெயரைப் பெற்றவர்.  இந்தியில் ரங் தே பசந்தி, 13 பி, த்ரீ இடியட்ஸ் மூலம் பரவலான கவனிப்பைப் பெற்றவர்.  இப்போதைக்கு தமிழில் அதிக கவனம் செலுத்தாததால் அடுத்த அரவிந்த்சாமி ஆகிவிடுவாரோ என எண்ணத் தோன்றுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;2. தனுஷ்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணனுடையான் அறிமுகத்துக்கு அஞ்சான். ஆனாலும் அடுத்தவர்களின் படங்களிலும் நடித்து வெற்றி பெற்றாகி விட்டது. கடைசி நாலு படங்கள்  ஹிட்.  கல்லூரியில் படித்த அல்லது படிக்காத சேட்டை செய்யும் வாலிபன் என்னும் வட்டத்துக்குள்ளேயே பெரும்பாலான வேடங்கள். உடல் அமைப்பு அப்படி. ஆனால் இப்படியே இருந்தால் எப்படி? உடலைத் தேற்றி பல பாத்திரங்களையும் ஏற்று நடிக்கும்படி மாறினால் இன்னும் பல ஆண்டுகள் வெற்றிநடை போடலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;3.சிலம்பரசன்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நடிப்பு மட்டுமில்லாமல், இயக்குநர்,பாடகர் என தன்னை நிரூபித்து விட்டவர். இப்போதுதான் கௌதம் மேனன், கே வி ஆனந்த் என பெரிய இயக்குநர்களிடம் அட்டாட்ச் ஆகியுள்ளார். பொடென்ஷியல் உள்ள ஆள் என்பதால் இன்னும் பத்தாண்டு கேரண்டி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;4. ஜெயம் ரவி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணனைத் தவிர மற்றவர்களின் படங்களில் எடுபடுவதில்லை என்னும் கூற்று தற்போது பேராண்மை மூலம் உடைந்திருக்கிறது. தெலுங்கு பட உலகமும் (ஆந்திராவா? டெலுங்கானாவா?) அண்ணனும் உள்ளவரை அவ்வப்போது ஹிட் கொடுத்து ஓரளவு நிலைத்து நின்று விடுவார். குரல் மட்டும் இன்னும் மெச்சூர் ஆனால் நன்றாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;5.விஷால்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு வாரிசு என்றாலும், உதவி இயக்குநராகப் போய் அர்ஜூனின் மாறுபட்ட கோணப் பார்வையால் நடிகரானவர். தொடர்ந்து ஹிட் கொடுத்து இப்போது ஆப் ஆகியுள்ளார். இருண்டு கிடந்த விக்ரமையும், மங்கலாக இருந்த சூர்யாவையுமே பிரகாசமாக்கிய பாலா  சும்மா விடுவாரா? திராவிட நிறம் என்பதால் இன்னும் பத்தாண்டு கேரண்டி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;6. ஆர்யா&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மறைந்த ஜீவாவின் கண்பட்டு கதாநாயகனான ஆர்யா அடுத்த அப்பாசோ என நினைத்த வேளையில் பாலா மூலம் அகோரியானார். வரும் படங்களை வைத்துத்தான் இவரை கணிக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;7.ஷாம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குஷி படத்தில் விஜய்யின் நண்பர் குழாமில் ஒருவராக அறிமுகமானாலும் அப்பட கேமராமேன் ஜீவா மூலம் 12 பி யில் அறிமுகமானார். குறைந்த காலத்திலேயே சிம்ரன்,ஜோதிகா,சினேகா,திரிஷா,மீரா ஜாஸ்மின் போன்ற தேவதைகளோடு நடித்தாலும் அதிர்ஷ்ட தேவதையின் கண்பார்வை படவில்லை. இப்போது இரண்டாம் கதாநாயகனாக இவர் நடிக்கும் தில்லாலங்கடியைப் பொறுத்தே இவர் எதிர்காலம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;8. ஜீவா&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு வாரிசு. ராம், கற்றது தமிழ், ஈ என வித்தியாசம் காட்டினாலும் மீண்டும் கமர்ஷியல் பாதைக்கே திரும்பிவிட்டார். வரும் படங்கள் தான் உரைகல். இவராவது பரவாயில்லை  இவர் சகோதரர் ஜித்தன் ரமேஷ் பாவம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;9. கார்த்தி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பராசக்திக்குப் பிறகு இவ்வளவு ஸ்ட்ராங்காக அறிமுகமான நடிகர் இவர்தான் என்பது இண்டஸ்ட்ரி வாக்கு.  நல்ல நடிப்புத் திறமை, பின்புலம். பத்தாண்டு கேரண்டி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;10. சித்தார்த்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாய்ஸ்,ஆய்த எழுத்து என பெரிய இயக்குநர் படங்கள். கிளிக் ஆகாததால்  தெலுங்குக்குப் போய்விட்டார். இங்கு இடமிருக்காது என்பதே தற்போதைய நிலவரம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;11. பரத்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாய்ஸில் அறிமுகமானாலும் செல்லமே, காதல் திருப்புமுனை. பேரரசு வரை இறங்கவும்  முடியும் கண்டேன் காதலை என இயல்பாக நடிக்கவும் முடியும் என்பது பலம். ஆனால் பட்சி இதெல்லாம் தாக்குப் பிடிக்காது என்றே சொல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;12. நகுல்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஷங்கர் செய்ய முடியாததை நாக்க முக்க செய்து விட்டது. ஆனாலும் நீடிப்பது கஷ்டமே.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;13. ஜே கே ரித்தீஸ்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரத்குமார், நெப்போலியன், ராமராஜனுக்கெல்லாம் பல ஆண்டுகள் ஆனது. நாயகனுக்கு ரெண்டே படம் தான் எம்பி ஆகிவிட்டார். அதிமுகவில் இப்படி யெல்லாம் நடக்கும் என்று அங்கலாய்ப்புகள் வேறு. சாம் ஆண்டர்சனை தனியாக விட்டு விட்டு போனதுதான் சோகம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;14. சுந்தர் சி &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியெல்லாம் நடக்கும் என குஷ்பூ கூட எதிர்பார்த்திர்க்க மாட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;15 சேரன் / தருண்கோபி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முடியல  அடுத்த பதிவில தொடருகிறேன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1470968473851359111-2585085917084107714?l=muralikkannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muralikkannan.blogspot.com/feeds/2585085917084107714/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1470968473851359111&amp;postID=2585085917084107714' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/2585085917084107714'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/2585085917084107714'/><link rel='alternate' type='text/html' href='http://muralikkannan.blogspot.com/2010/01/2000-2009_19.html' title='2000 - 2009 பத்தாண்டுகளில் அறிமுக நடிகர்கள்.'/><author><name>முரளிகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15503809310005245433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/-9LwjCz9jyaw/Tv1YpBSgLkI/AAAAAAAAAbM/cbkhikExF40/s220/DSC00675.JPG'/></author><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-5775172356534768651</id><published>2010-01-18T21:07:00.004+05:30</published><updated>2010-01-19T09:21:38.602+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><title type='text'>2000 - 2009 பத்தாண்டுகளில் தமிழ்சினிமா</title><content type='html'>முதலில் மங்களகரமாக வசூலில் இருந்து தொடங்குவோம். முதல் பத்து இடத்தைப் பிடித்த படங்கள் [வரிசைப்படி அல்ல :-))  ]&lt;br /&gt;&lt;br /&gt;1.தசாவதாரம்&lt;br /&gt;2.சிவாஜி&lt;br /&gt;3.சந்திரமுகி&lt;br /&gt;4.கில்லி&lt;br /&gt;5.சாமி&lt;br /&gt;6.கஜினி&lt;br /&gt;7.போக்கிரி&lt;br /&gt;8.அன்னியன்&lt;br /&gt;9.அயன்&lt;br /&gt;10.தூள் மற்றும் ரமணா, ஜெமினி,வானத்தைபோல படங்களும் 10 ஆவது இடத்துக்கான போட்டியில் உள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;சூப்பர் ஸ்டார் நான்கு படங்களில் மட்டுமே நடித்தார். இரண்டு மெகா ஹிட், இரண்டு பிளாப்&lt;br /&gt;&lt;br /&gt;1.பாபா (2002)&lt;br /&gt;2.சந்திரமுகி (2005)&lt;br /&gt;3.சிவாஜி (2007)&lt;br /&gt;4.குசேலன் (2008)&lt;br /&gt;&lt;br /&gt;கமல் 12 படங்களில் நடித்தார்&lt;br /&gt;&lt;br /&gt;1. ஹேராம் (2000) - பிளாப்&lt;br /&gt;2. தெனாலி  (2000) - ஹிட்&lt;br /&gt;3.ஆளவந்தான் (2001) - பிளாப்&lt;br /&gt;4.பம்மல் கே சம்பந்தம் (2002) - ஹிட்&lt;br /&gt;5. பஞ்சதந்திரம் (2002) - ஹிட்&lt;br /&gt;6.அன்பே சிவம் (2003) - பிளாப்&lt;br /&gt;7.விருமாண்டி (2004) - ஹிட்&lt;br /&gt;8. வசூல்ராஜா (2004) - ஹிட்&lt;br /&gt;9.மும்பை எக்ஸ்பிரஸ் (2005) - பிளாப்&lt;br /&gt;10. வேட்டையாடு விளையாடு (2006) - ஹிட்&lt;br /&gt;11. தசாவதாரம் (2008) - சூப்பர் ஹிட்&lt;br /&gt;12.உன்னைப் போல் ஒருவன் (2009) - ஹிட்&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1470968473851359111-5775172356534768651?l=muralikkannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muralikkannan.blogspot.com/feeds/5775172356534768651/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1470968473851359111&amp;postID=5775172356534768651' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/5775172356534768651'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/5775172356534768651'/><link rel='alternate' type='text/html' href='http://muralikkannan.blogspot.com/2010/01/2000-2009.html' title='2000 - 2009 பத்தாண்டுகளில் தமிழ்சினிமா'/><author><name>முரளிகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15503809310005245433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/-9LwjCz9jyaw/Tv1YpBSgLkI/AAAAAAAAAbM/cbkhikExF40/s220/DSC00675.JPG'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-9207168952607026698</id><published>2010-01-18T18:02:00.003+05:30</published><updated>2010-01-18T19:06:52.626+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><title type='text'>1996 ஆம் ஆண்டு படங்கள் - ஒரு பார்வை</title><content type='html'>ஒரே ஆண்டில் சந்தேகத்துக்கே இடமில்லாமல்   ஐந்துக்கும் மேற்பட்ட பெரு வெற்றிப்படங்களும் 10 வெற்றிப்படங்களும் அமைவது எப்போதாவதுதான் நடைபெறும். 1989ல் அப்படி ஒரு நிகழ்வு நடைபெற்றது (அபூர்வ சகோதரர்கள், வருஷம் 16, ராஜாதிராஜா, கரகாட்டக்காரன், புதியபாதை, புதுப்புது அர்த்தங்கள், மாப்பிள்ளை, பாண்டி நாட்டுத்தங்கம்.....). அது போல 1996லிம் அப்படி பெரு வெற்றி பெற்ற படங்கள் வந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;1.இந்தியன்&lt;br /&gt;2.அவ்வை ஷண்முகி&lt;br /&gt;3.உள்ளத்தை அள்ளித்தா&lt;br /&gt;4.பூவே உனக்காக&lt;br /&gt;5.காதல்கோட்டை&lt;br /&gt;&lt;br /&gt;ஆகிய ஐந்து படங்கள் பெருவெற்றி பெற்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கோகுலத்தில் சீதை, நாட்டுப்புறபாட்டு,கோபாலா கோபாலா, சுந்தரபுருஷன், வான்மதி, காதல்தேசம் போன்ற பல படங்கள் நல்ல வெற்றி பெற்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆண்டில் இரண்டுபேருக்கு பெரிய திருப்புமுனை அமைந்தது. ஒன்று விஜய் (பூவே உனக்காக), பிரகாஷ்ராஜ் (கல்கி).&lt;br /&gt;&lt;br /&gt;கவுண்டமனிக்கு இந்த ஆண்டு செமையான அறுவடை. (இந்தியன், அவதார புருஷன்,கோயம்புத்தூர் மாப்ளே, டாட்டா பிர்லா,மேட்டுக்குடி, சேனாதிபதி,ஞானப்பழம்,கட்டப் பஞாயத்து, பூவரசன், மகாபிரபு,பரம்பரை).&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய இயக்குநர்களுக்கு மரண அடி (பாரதிராஜா - அந்திமந்தாரை, தமிழ்செல்வன்: பாலசந்தர் - கல்கி: பாக்யராஜ் - ஞானப்பழம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரஹ்மான் இசையில் இந்தியன்,காதல்தேசம், மிஸ்டர் ரோமியோ மற்றும் லவ்பேர்ட்ஸ் ஆகியவை வந்தன. இந்த நான்கும் முறையே ஏ எம் ரத்னம், கே டி குஞ்சுமோன், ஆர் பி சௌட்த்ரி மற்றும் பிரமிட் நடராஜன் ஆகிய பெருங்கைகளின் தயாரிப்பில் வந்தது. இந்த நால்வரில் ஆர் பி சவுத்ரி மட்டுமே இப்போதும் படம் தயாரிக்கும் நிலையில் உள்ளார். லவ்பேர்ட்ஸ் படம் ரஹ்மான் இசையமைக்க எடுத்துக் கொண்ட நாட்கள் கூட ஓடாமல்  அடிவாங்கியது.  ஆனால் இதே லைனை வைத்து ராகேஷ் ரோஷன் தன் மகன் ரித்திக் ரோஷனை அறிமுகப்படுத்தி எடுத்த கஹோ நா பியார் ஹை பெருவெற்றி பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர் கே செல்வமணி பினாமியாக டைரெக்ட் செய்த கர்ணன் டைப் படமான ராஜாளி,  ராஜ்கிரணுக்கு தோல்விப்பாதை அமைத்துக் கொடுத்த மாணிக்கம் , விஜய்,அஜீத் இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே , பிரசாந்த், அஜீத் இணைந்து நடித்து பூஜாபட் தமிழில் அறிமுகமான கல்லூரி வாசல், லிசா ரே தமிழில் அறிமுகமான் நேதாஜி  என பல தோல்விப்படங்களும் இந்த ஆண்டில் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;விஜயகாந்தை அலெக்சாண்டரும், சரத்குமாரை மகாபிரபுவும் காப்பாற்றினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;விஜய்க்கு செல்வா, மாண்புமிகு மாணவன், ராஜாவின் பார்வையிலே மற்றும் வசந்தவாசல் ஆகிய படங்களின் தோல்வியை பூவே உனக்காக சரிகட்டியது .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1470968473851359111-9207168952607026698?l=muralikkannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muralikkannan.blogspot.com/feeds/9207168952607026698/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1470968473851359111&amp;postID=9207168952607026698' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/9207168952607026698'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/9207168952607026698'/><link rel='alternate' type='text/html' href='http://muralikkannan.blogspot.com/2010/01/1996.html' title='1996 ஆம் ஆண்டு படங்கள் - ஒரு பார்வை'/><author><name>முரளிகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15503809310005245433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/-9LwjCz9jyaw/Tv1YpBSgLkI/AAAAAAAAAbM/cbkhikExF40/s220/DSC00675.JPG'/></author><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-4818704619108126002</id><published>2009-12-21T14:45:00.002+05:30</published><updated>2009-12-21T15:20:26.710+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><title type='text'>பாரபட்சம் காட்டும் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்</title><content type='html'>25 வருடங்களுக்கு முன்னால் பெரிய நடிகர்களின் படமோ, பெரிய தயாரிப்பாளர்களின் படங்களோ வரும் போது நாளிதழ்களில் முழுப்பக்க விளம்பரம் கொடுக்கும் வழக்கம் இருந்தது. இது பூஜையில் இருந்தே ஆரம்பிக்கும். டீக்கடைகள், சலூன் ஆகியவற்றில், தங்கள் அபிமான நடிகர் நடித்த படமெனில் இந்தப் பக்கங்களை கிழித்து ஒட்டி வைத்திருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கலைப்புலி தாணு, டி ராஜேந்தர் ஆகியோர் இப்படி விளம்பரம் பண்ணுவதில் சமர்த்தர்கள். அதுவும் டி ஆர் தினமும் ஒரு அடுக்கு மொழி வசனத்துடன் விளம்பரப்படுத்துவார். &lt;br /&gt;&lt;br /&gt;90களில் பல படங்கள் தோல்வியடைந்து தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் நஷ்டம் அடைந்த போது திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒரு கூட்டம் போட்டனர். அதன் நோக்கம், தயாரிப்புச் செலவைக் குறைப்பது. அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் ஒன்று நாளிதழ்களில் முழுப்பக்க விளம்பரம் கொடுக்கக்கூடாது என்பது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்படி கால் பக்க அளவுக்கே நாளிதழ்களில் விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. 60 கோடியில் தயாரான தசாவதாரமாக இருந்தாலும் சரி. மூன்று கோடியில் உருவான சுப்பிரமணியபுரமாக இருந்தாலும் ஒரே அளவில் தான் விளம்பரம் செய்யவேண்டும் என்பது விதி. மீறுபவர்களுக்கு ரெட் கார்டு போடப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இப்போது நடப்பது என்ன? நாளிதழ்கள் படிப்பவர்களை விட தொலைக்காட்சி பார்ப்போர் அதிகம் உள்ள தமிழ்நாட்டில் கால் மணி நேரத்துக்கு  ஒருமுறை பட விளம்பரம் வெளியே வருகிறது. சன் தொலைக்காட்சியினர் தாங்கள் தயாரிக்கும்/வினியோகிக்கும் படங்களுக்கு இவ்வாறு அதிக விளம்பரம் செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விளம்பரத் தொகையை கணக்குப் பார்த்தால்?&lt;br /&gt;&lt;br /&gt;பிரைம் டைம் மற்றும் சாதாரண நேரங்களில்  சன் டிவி அந்தக் குறிப்பிட்ட வினாடிகளுக்கு வசூலிக்கும் தொகை எவ்வளவு? தினமும் எவ்வளவு நேரம் ஒளிபரப்பாகிறது? எத்தனை நாட்களுக்கு ஒளிபரப்பாகிறது? என்று பார்த்தால் மொத்த விளம்பரத் தொகை கோடிகளை தாண்டும் என்பது சர்வ நிச்சயம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது எந்தக் கணக்கில் வருகிறது? சிறிய பட்ஜெட் படங்களைத் தயாரிப்பவர்கள் இதைச் செய்ய முடியுமா? அரைப்பக்க அளவு தினத்தந்தியில் விளம்பரம் கொடுத்தால் ரெட் காடு போடுபவர்கள் இப்போது எங்கே போனார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;அய்யா உங்களுக்கு சன் டிவியை கண்டிக்க முடியவில்லையா? பரவாயில்லை. இந்த விளம்பர கட்டுப்பாட்டையாவது  நீக்குங்கள். மல்டிப்லெக்ஸ் ஆடியன்ஸ்க்கு படமெடுப்பவர்கள் ஆங்கில தினசரிகளில் முழுப்பக்க விளம்பரம் செய்து தங்கள் படத்தைக் கொண்டு சேர்க்கட்டும். ஜனரஞ்சக படமெடுப்பவர்கள் முழுப் பக்கம் தினத்தந்தியில் விளம்பரம் செய்து கொள்வார்களே? எல்லோரும் வாழ வாய்ப்புக் கொடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சில ஆண்டுகளுக்கு முன் படித்த ஒரு கதை ஞாபகம் வருகிறது&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு நண்பர்கள். திரையரங்குக்கு சென்றிருப்பார்கள். அரசியல்வாதியின் உறவினன் ஒருவன் சிகரெட் குடித்துக் கொண்டு சத்தம் போட்டுக் கொண்டிருப்பான். பின்னால் உட்கார்ந்திருக்கும் இவர்கள் சிகரெட் புகையாலும் சத்தத்தாலும் அவதிப்படுவார்கள். அடுத்த முறை செல்லும் போது அங்கே ஒரு  ஏழை பீடி பிடித்துக் கொண்டிருப்பான். நண்பர்களில் ஒருவன் அவனை கண்டிக்க எந்தரிப்பான். அப்போது இன்னொருவன் சொல்லுவான், சென்ற முறை அவன் செய்த தப்பைத்தானே இவனும் செய்கிறான். அவனை தட்டிக்கேட்காத நமக்கு  இவனை தட்டிக்கேட்க மட்டும் என்ன தார்மீக உரிமை இருக்கிறது? என்று. &lt;br /&gt;&lt;br /&gt;இதே கதை தயாரிப்பாளர் சங்கத்துக்கும் பொருந்தும்தானே?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1470968473851359111-4818704619108126002?l=muralikkannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muralikkannan.blogspot.com/feeds/4818704619108126002/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1470968473851359111&amp;postID=4818704619108126002' title='33 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/4818704619108126002'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/4818704619108126002'/><link rel='alternate' type='text/html' href='http://muralikkannan.blogspot.com/2009/12/blog-post_21.html' title='பாரபட்சம் காட்டும் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்'/><author><name>முரளிகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15503809310005245433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/-9LwjCz9jyaw/Tv1YpBSgLkI/AAAAAAAAAbM/cbkhikExF40/s220/DSC00675.JPG'/></author><thr:total>33</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-2494797496566726880</id><published>2009-12-14T10:54:00.006+05:30</published><updated>2009-12-14T12:58:13.828+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரிக்கெட்'/><title type='text'>இந்திய ஆல் டைம் டெஸ்ட் கிரிக்கெட் அணி - வேகப்பந்து வீச்சாளர்கள்</title><content type='html'>&lt;a href=" http://muralikkannan.blogspot.com/2009/11/blog-post_23.html"&gt;முதல் பகுதி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://muralikkannan.blogspot.com/2009/11/2_24.html"&gt;இரண்டாம் பகுதி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றுதான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தவர் ஆனாலும் சரி நாற்பது ஆண்டுகளாக கிரிக்கெட் பார்ப்பவர்களாய் இருந்தாலும் சரி, மைதானத்தில் நடக்கும் இரண்டே விஷயங்களுக்குத்தான் அவர்களை மீறிய ஆஹாகாரம் வெளிப்படும். ஒன்று பேட்ஸ்மென் அடிக்கும் அடியில் பந்து மைதானத்தை தாண்டி பறக்கும் போது மற்றொன்று பேட்ஸ்மென்னின் மிடில் ஸ்டெம்ப் விக்கெட் கீப்பரைத் தாண்டி  பறக்கும் போது. &lt;br /&gt;&lt;br /&gt;நம் நாட்டில் முதல் சாகஸத்தை செய்ய ஒரு கூட்டமே இருக்கிறது. ஆனால் இரண்டாவதைச் செய்ய?. தேர்வாளர்கள் கூட நம் நாட்டில் வேகப்பந்து வீச்சாளர்கள் உருவாகவே மாட்டார்கள் என்ற நம்பிக்கையை 30 ஆண்டுகளுக்கு முன்னால் வைத்திருந்தார்கள். அதனல் தான் கோச்சிங் கேம்பில் கபில்தேவ் என்ற இளைஞன் எனக்கு நான்கு சப்பாத்தி போதாது, நான் வேகப்பந்து வீச்சாளன், எனக்கு அதிக சக்தி தேவை, அதற்கேற்ற உணாவு கொடுங்கள் என்று கேட்டதற்கு சிரித்து அவமானப்படுத்தினார்கள். இன்னும் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாய் 150 கிமீ வேகத்தில் ஒருவர் பந்து வீசுகிறார் என்ற செய்தி வருகிறது. அதைவிட வேகமாய் அவரது வேகம் அவர்களிடம் இருந்து விடை பெற்று சென்று விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;1.கபில்தேவ்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தன்னுடைய வேகத்தால் முதல் சில ஆண்டுகளும், நேர்த்தியான அவுட்சுவிங்கர்களால் பல ஆண்டுகளும் பேட்ஸ்மென்களை மிரட்டியவர். தன்னுடைய உச்சக்கட்ட பார்மில் இருந்த முதல் பத்தாண்டுகளில் இணையாக பந்து வீச ஆளில்லாமல் அவதிப்பட்டவர். &lt;br /&gt;&lt;br /&gt;டென்னிஸ் லில்லி-தாம்சன், அக்ரம்-யூணுஸ், அம்புரோஸ்- வால்ஷ், டொனால்ட்-போலக் என இணையான வீரர்கள் பந்து வீசும்போது எதிர் அணிக்கு மிகுந்த நெருக்கடி கிடைக்கும். கபில்தேவுக்கு அப்படி யாரும் கிடைக்கவேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ரோஜர் பின்னி ரேஷன் கடை துவரம் பருப்பு போல. நல்ல தண்ணி, காப்பர் பாட்டம்,  கேஸ் ஸ்டவ் என எல்லாம் சாதகமாக இருந்தால் தான் அவர் பருப்பு வேகும்.  அதனால்தான் வெளிநாட்டு ஆடுகளங்களில் பிரகாசித்த அளவுக்கு உள்ளூரில் அவர் பிரகாசிக்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு துணையாக இருந்த மதன்லாலைப் பற்றி ரிச்சர்ட்ஸின் கமெண்ட்&lt;br /&gt;&lt;br /&gt;"ஆப் ஸ்பின் போடுபவர்களிலேயே அதிக தூரத்தில் இருந்து ஓடி வந்து போடுபவர்"&lt;br /&gt;&lt;br /&gt;85 ஆம் ஆண்டு வாக்கில் வந்த சேட்டன் சர்மா வேகமாக இருந்தாலும், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. சார்ஜாவில் போட்ட புல்டாஸில் மனம் உடைந்து போனார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் இன்னொரு வேகப்பந்து வீச்சாளர் பிறந்து  அவர் 434 டெஸ்ட் விக்கெட் எடுப்பாரா என்பது கேள்விக்குறிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;2.மனோஜ் பிரபாகர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;86 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி நம் நாட்டில் சுற்றுப்பயணம் செய்த போது, அக்ரம் ஸ்ரீகாந்தின் நெற்றியைப் பிளந்து விட, அந்த இடத்தில் துவக்க ஆட்டக்காரராக இறங்கியவர் இவர். பின்னர்தான் தெரிந்தது இவர் வேகப்பந்து வீச்சாளர் என்று. 89ஆம் ஆண்டு நம் அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்தபோதுதான் இவரது பொடென்சியல் வெளியே தெரிந்தது. ஒரு பந்து வீச்சாளர்  எதிரணி ஆட்டக்காரர்களுக்கு டெரராய் இருக்கிறார்  என்பதை உணர்த்த பல அளவுகோல்கள் இருந்தாலும் முக்கியமான ஒன்று இருக்கிறது. அது பந்தை எறிகிரார் என எழும்பும் குற்றச்சாட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அக்தார்,முரளிதரன்,ஹர்பஜன் என முண்ணனி வீரர்களை குறித்துத்தான் இந்த குற்றச்சாட்டு கிளம்பும்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அளவுகோலின் படி பார்த்தால் மனோஜ் இம்ரான்,மியான்டாட் வாயால் எறிகிறார் என குற்றம் சாட்டப்பட்டவர். எனவே அவரும் ரவுடிதான். பழைய பந்தை ஸ்விங் செய்வது எப்படி என எனக்கு கற்றுக் கொடுத்தவர் மனோஜ்தான் என கபில்தேவே ஸ்டேட்மெண்ட் கொடுத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த தொடர் சம்பந்தமான கட்டுரை ஒன்றில் இந்தியா டுடே இதழ் இப்படி சொல்லியிருந்தது "மனோஜ் : தாமதமாக மலர்ந்த தாமரை".  அசாருடன் மோதல், புக்கி விவகாரம், ஜெயசூர்யாவால் ஸ்பின்னராக மாற்றப்பட்டது என பல சர்ச்சைகளால் அணியில் இருந்து கழட்டி விடப்பட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும் நல்ல் இன்ஸ்விங்கர் என்ற முறையில் போட்டியில் இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;3. ஜவகல் ஸ்ரீநாத்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பேட்ஸ்மென்கள் குட்டையாய் இருந்தாலும் பரவாயில்லை, பவுலர்களும் குட்டையாய் இருக்கும் அணி நம் அணிதான் என்று ஒரு கேலிப் பேச்சு இருக்கும். ஆறடிக்கு மேல் உயரத்துடன், ஒல்லியான உடல் வாகுடன் வந்த ஸ்ரீநாத் அந்தக் குறையைப் போக்கினார். அவர் உள்ளே நுழையும் போது கபில் தன் இறுதிக்கட்டத்தில் இருந்தார். மனோஜ் மட்டும் துணையாக இருந்தார். இவர்கள் சென்ற உடன் முழுச்சுமையும் இவர் தோளில் விழுந்தது. வெங்கடேஷ் பிரசாத் ஓரளவுக்கே துணை நின்றார். இவர் பந்து வீச்சின் மூலம் சில  டெஸ்ட் வெற்றிகளை இந்தியா பெற்றது. &lt;br /&gt;&lt;br /&gt;தெண்டுல்கர் கேப்டன் ஆனது இவருக்கு வினையானது. அவர் ஸ்ரீநாத்தை அதிகம் உபயோகப்படுத்தி படுத்தி விட்டார். ஷோல்டர் இஞ்சுரியால் விரைவாகவே ஓய்வு பெற்றுவிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;4. ஜாகிர்கான்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு பாகிஸ்தான் வேகப் பந்து வீச்சாளர்களைக் கண்டாலே பொறாமையாய் இருக்கும். சர்பராஷ் நவாஸ் காலத்தில் இருந்தே அவர்கள் ரிவர்ஸ் ஸ்விங் செய்து வருகிறார்கள். கல்லூரியில் என் ஆதர்சம் வாசிம் அக்ரம் தான். ஹம் ஆப்கே&lt;br /&gt;ஹெயின் கோன் படம் பாகிஸ்தானில் ஹிட் ஆன போது அவர்கள் பாடிய மாதுரி தீக்ஸித்தைக் கொடுத்து விட்டு காஷ்மீரை எடுத்துக் கொள்ளுங்கள் (மாதுரி லேலோ காஷ்மிர் ... என என்னவோ இந்தியில் வரும்.மறந்து விட்டது) என்ற வரிகளை மாற்றி நாங்கள் வாசிமை கொடுங்கள் காஷ்மீரை எடுத்துக் கொள்ளுங்கள் என பாடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வாகர் யூணிஸ் இங்கிலாந்தில் தன் பந்து வீச்சால் கலக்கிக் கொண்டிருக்கும் போது ஹென்றி புளோபீல்ட் அடித்த கமெண்ட் " த லைட் கெட்டிங் டார்க்கர் அண்ட் டார்க்கர், வக்கார் கெட்டிங் பாஸ்டர் அண்ட் பாஸ்டர்" . அதைக் கேட்டுவிட்டு இங்கே ஒரு ஆள் இப்படி வரமாட்டானா என ஏங்கியதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஜாகிர் அந்தக்குறையை ஓரளவுக்கு தீர்த்தவர் என்று சொல்லலாம். இந்தியார்களும் ரிவர்ஸ் ஸ்விங் செய்வார்கள் என்று அழுத்தம் திருத்தமாக காட்டியவர். பிட்னஸ்ஸில் மட்டும்  நிறைய கவனம் எடுத்துக் கொண்டிருந்தால் இன்னும் பிரகாசித்திருக்கக் கூடியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;5. இஷாந்த் ஷர்மா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவர் வந்து இரண்டு ஆண்டுகளே ஆகியிருந்தாலும் கவனமாகக் கையாளப்பட்டால் பெரிய உயரங்களுக்கு செல்லும் திறமை வாய்ந்தவர். சமகால வேகப்பந்து வீச்சாளர்களில் பிளிண்டாபுக்கு அடுத்து ரிக்கி பாண்டிங்கை  திணற வைத்தவர் இவரே. மூன்று பார்மட் தவிர ஐபிஎல் என சகட்டுமேனிக்கு விளையாடியதில் டயர்ட் ஆகிவிட்டாரோ எனத் தோன்றுகிறது. அதுவும் கல்கத்தா ஐபிஎல் டீம் இவரை டீமாரலைஸ் செய்து விட்டதைப்போலவே எனக்குத் தோன்றும். உயரமும்,  பத்து ஓவர் வீசினாலும் டயர்ட் ஆகாத உடல்திறனும் அமையப்பெற்ற பந்து வீச்சாளர்.&lt;br /&gt;ரிவர்ஸ் ஸ்விங் மற்றும் இன்சுவிங் யார்க்கர் வீசுவது கூடுதல் பலம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதிவர்கள் தங்களுக்குப் பிடித்த இரு வேகப் பந்து வீச்சாளர்களைத் தெரிவிக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;சென்ற பதிவின் பின்னூட்டங்களின் படி துவக்க ஆட்டக்காரர்களாக தேர்வு பெற்றவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;1.சுனில் கவாஸ்கர்&lt;br /&gt;2.விரேந்திரா சேவாக்&lt;br /&gt;&lt;br /&gt;பின்னூட்டத்தில் தங்கள் தெரிவைத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1470968473851359111-2494797496566726880?l=muralikkannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muralikkannan.blogspot.com/feeds/2494797496566726880/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1470968473851359111&amp;postID=2494797496566726880' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/2494797496566726880'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/2494797496566726880'/><link rel='alternate' type='text/html' href='http://muralikkannan.blogspot.com/2009/12/blog-post_14.html' title='இந்திய ஆல் டைம் டெஸ்ட் கிரிக்கெட் அணி - வேகப்பந்து வீச்சாளர்கள்'/><author><name>முரளிகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15503809310005245433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/-9LwjCz9jyaw/Tv1YpBSgLkI/AAAAAAAAAbM/cbkhikExF40/s220/DSC00675.JPG'/></author><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-17214036707256930</id><published>2009-12-10T13:00:00.000+05:30</published><updated>2009-12-10T13:17:50.912+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>தொழில் தர்மம்</title><content type='html'>கொஞ்சம் பவுடர் போட்டுக்குங்க&lt;br /&gt;கோட் டை ஆப்டா இருக்குமே&lt;br /&gt;நல்லா நிமிந்து உக்காருங்க&lt;br /&gt;லைட்டா பேஸ் லெப்ட்ல திருப்புங்க&lt;br /&gt;போதும் கொஞ்சம் ரைட் &lt;br /&gt;சின் டவுன் பண்ணுங்க&lt;br /&gt;ஸ்மைல் போதாது&lt;br /&gt;&lt;br /&gt;என தொணத்திக் கொண்டே இருப்பவரிடம்&lt;br /&gt;எப்படி சொல்வது&lt;br /&gt;எடுக்கப் போவது செக்யூரிட்டி வேலைக்கான&lt;br /&gt;புகைப்படம் தான் என்பதை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு&lt;br /&gt;&lt;br /&gt;என்டர் கவிதை என்று பின்னூட்டமிடுபவர்களின் பிளாக் ஹேக் செய்யப்படும்&lt;br /&gt;&lt;br /&gt;தினமலர் வாரமலருக்கு அனுப்பலாம் என்பவர்களுக்கு பொங்கல் முதல் நாள் பாண்டியன் எக்ஸ்பிரஸ்சில் அன் ரிசர்வுடு கம்பார்ட்மென்டில் பயணம் செய்வதற்கான டிக்கட் கொடுக்கப்படும்&lt;br /&gt;&lt;br /&gt;மொக்கை குப்பை என பின்னூட்ட மிடுபவர்களுக்கு உரையாடல் கவிதைப் போட்டியின் தேர்வாளர் பொறுப்பு கொடுக்கப்படும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1470968473851359111-17214036707256930?l=muralikkannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muralikkannan.blogspot.com/feeds/17214036707256930/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1470968473851359111&amp;postID=17214036707256930' title='35 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/17214036707256930'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/17214036707256930'/><link rel='alternate' type='text/html' href='http://muralikkannan.blogspot.com/2009/12/blog-post_10.html' title='தொழில் தர்மம்'/><author><name>முரளிகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15503809310005245433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/-9LwjCz9jyaw/Tv1YpBSgLkI/AAAAAAAAAbM/cbkhikExF40/s220/DSC00675.JPG'/></author><thr:total>35</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-1148666012266829631</id><published>2009-12-08T21:17:00.003+05:30</published><updated>2009-12-08T21:50:57.713+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாசிப்பனுபவம்'/><title type='text'>அய்யனார் கம்மா</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_R8PSEYSb0sA/Sx584BcioJI/AAAAAAAAASs/z470e6Nw3r4/s1600-h/ayyanar.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_R8PSEYSb0sA/Sx584BcioJI/AAAAAAAAASs/z470e6Nw3r4/s400/ayyanar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5412901104048578706" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பாடப்புத்தகங்களைத் தவிர எந்த புத்தகத்தையும் வாங்கிய உடன் கடையில் வைத்தே ஒரு புரட்டு புரட்டிவிட்டு நகர்வதுதான் என் வழக்கம். சென்ற செவ்வாயன்று அருமை நண்பர் நர்சிம் எழுதிய அய்யனார் கம்மாவை கையில் வாங்கிய உடன் அம்மாதிரி எதுவும் செய்யவில்லை. இரண்டு காரணங்கள். ஒன்று நாம் ஏற்கனவே படித்ததுதானே என்ற எண்ணம் மற்றொன்று அந்த அரங்கில் நிறைந்திருந்த உற்சாகம்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்கு திரும்பிய உடன் வாசிக்க ஆரம்பித்தேன். நிச்சயம் இணையத்தில் படிப்பதற்கும் அச்சுப்பிரதியை வாசிப்பதற்கும்  நிறைய வித்தியாசம். அலுவலக உணவு இடைவேளை, அலுவல் முடிவிற்கும் வீட்டிற்கு கிளம்புவதற்கும் இடையேயான நேரம் மற்றும் வீட்டில் குழந்தையை பார்த்துக்கொண்ட நேரம் போக மீத மிருக்கும் நேரம் இவையே பெரும்பாலான வாசிக்கும் தருணங்கள். கரும்புச்சாறு கடையில் ஒரு டம்ளர் வாங்கி அருந்தி விட்டு செல்வதைப் போலவே பல பதிவுகளை வாசித்திருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;பொங்கல்  முடிந்த அன்று சாவகாசமாக வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கணுக்கள் குறைந்த கரும்புப் பகுதியை தேடியெடுத்து ஆற அமர சுவைக்கும் சுகம் கிடைத்தது அச்சுப்பிரதியை வாசிக்கும் போது.&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட  ஓராண்டு கால இடைவெளிக்குள்ளேயே எழுதப்பட்டவை அனைத்து கதைகளும். ஆனால்  ஹார்ட் கோர் கிராமம் (செம்பட்டைக் கிழவி, அய்ய்னார் கம்மா), சிறுநகர வாழ்வியல் (நரகம், வெத்தலைப்பெட்டி,மரணம்) மற்றும் பெருநகர கூறுகளை பிரதிபலிக்கும் சந்தர்ப்பவதம் என எல்லாக் களங்களிலும் புகுந்து விளையாடியிருக்கிறார் நூலாசிரியர்.&lt;br /&gt;&lt;br /&gt;செப்டம்பரில் நடந்த சிறுகதைப் பட்டறையின் போது யுவன் சந்திர சேகர் சொன்ன ஒரு கருத்து மிகவும் பிடித்திருந்தது. கிணற்றில் இருந்த தண்ணீரை எடுத்து மீண்டும் கிணற்றில் விடுவதால் என்ன பயன்?. வேறு இடத்தில் இருந்து பாய்ச்சினால் தானே வளம்? அதுபோல் இத்தொகுப்பில் லாடம் அடிப்பது போன்ற நுண்ணிய விபரங்கள் வாழ்க்கையில் இருந்து எடுக்கப்பட்டு கோர்க்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நூலாசிரியர் செய்ய வேண்டியது இன்னும் மலையளவு உள்ளது. அவர் சார்ந்திருக்கும் துறை சம்பந்தமான இலக்கியம் ஒன்றைப் படைக்க வேண்டும் என்பது என் அவா. ஆர்தர் ஹெய்லி எழுதிய வீல்ஸ், ஏர்போர்ட் போல துறை சார்ந்த முழுநாவல் ஒன்றை அவர் எழுதவேண்டும். அதற்குரிய எல்லாத் தகுதிகளும் அவரிடத்தில் இருக்கிறது என்பதற்கு அய்யனார் கம்மாவே சாட்சி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;நூல் : அய்யனார் கம்மா (சிறுகதைகள்)&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர் : நர்சிம்&lt;br /&gt;&lt;br /&gt;பக்கங்கள் : 72&lt;br /&gt;&lt;br /&gt;விலை : ரூ.40&lt;br /&gt;&lt;br /&gt;வெளியீடு : அகநாழிகை,&lt;br /&gt;33, மண்டபம் தெரு, மதுராந்தகம் - 603 306.&lt;br /&gt;போன் : 9994541010&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1470968473851359111-1148666012266829631?l=muralikkannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muralikkannan.blogspot.com/feeds/1148666012266829631/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1470968473851359111&amp;postID=1148666012266829631' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/1148666012266829631'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/1148666012266829631'/><link rel='alternate' type='text/html' href='http://muralikkannan.blogspot.com/2009/12/blog-post.html' title='அய்யனார் கம்மா'/><author><name>முரளிகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15503809310005245433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/-9LwjCz9jyaw/Tv1YpBSgLkI/AAAAAAAAAbM/cbkhikExF40/s220/DSC00675.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_R8PSEYSb0sA/Sx584BcioJI/AAAAAAAAASs/z470e6Nw3r4/s72-c/ayyanar.jpg' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-5613063349657747508</id><published>2009-11-25T21:05:00.000+05:30</published><updated>2009-11-25T21:12:34.263+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>3500</title><content type='html'>குணா கமல் மன்ற&lt;br /&gt;குருதிக்கொடையின் போதுதான்&lt;br /&gt;தெரிந்தது அபூர்வ பிரிவென்று&lt;br /&gt;&lt;br /&gt;அன்று நிமிர்ந்த நெஞ்சு&lt;br /&gt;பலமுறை நிமிர்ந்திருக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;ராஜகுமாரனைப் போலத் தான்&lt;br /&gt;நுழைவேன் ஒவ்வொருமுறையும்&lt;br /&gt;இன்று நடைப்பிணமாய்&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று மாதம் முன்&lt;br /&gt;நின்ற சம்பளம்&lt;br /&gt;தீரப்போகும் லாக்டோஜன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1470968473851359111-5613063349657747508?l=muralikkannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muralikkannan.blogspot.com/feeds/5613063349657747508/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1470968473851359111&amp;postID=5613063349657747508' title='35 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/5613063349657747508'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1470968473851359111/posts/default/5613063349657747508'/><link rel='alternate' type='text/html' href='http://muralikkannan.blogspot.com/2009/11/3500.html' title='3500'/><author><name>முரளிகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15503809310005245433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://4.bp.blogspot.com/-9LwjCz9jyaw/Tv1YpBSgLkI/AAAAAAAAAbM/cbkhikExF40/s220/DSC00675.JPG'/></author><thr:total>35</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-5195877906622462119</id><published>2009-11-24T22:37:00.002+05:30</published><updated>2009-11-24T22:44:31.214+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரிக்கெட்'/><title type='text'>இந்தியா ஆல் டைம் லெவென் பகுதி 2 துவக்க ஆட்டக்காரர்கள்</title><content type='html'>&lt;a href="http://muralikkannan.blogspot.com/2009/11/blog-post_23.html"&gt;முதல் பகுதி இங்கே&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய ஆல் டைம் டெஸ்ட் அணிக்கு யார் துவக்க ஆட்டக்காரர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;துவக்க ஆட்டக்காரர்களுக்கும் மிடில் ஆர்டர் ஆட்டக்காரர்களுக்கும் என்ன வித்தியாசம்? முதல் &lt;br /&gt;பந்தில் ஓப்பனர் அவுட் ஆகிவிட்டால் உடனே நம்பர் த்ரி உள்ளே வந்து விடுகிறாரே? &lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயம் இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;துவக்க ஆட்டக்காரர் உள்ளே நுழையும் போது (அது எந்த இன்னிங்ஸாக இருந்தாலும்) வேகப்பந்து வீச்சாளர்கள் தன் முழு ஆற்றலுடன் இருப்பார்கள். அனலைக் கக்குவார்கள். அவர்களை சமாளிக்க வேண்டும். பந்தும் புதிதாக இருக்கும். அருமையாக ஸ்விங்கும் ஆகும். எனவே நல்ல பேட்டிங் டெக்னிக் இருக்க  வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;பிட்ச் எந்த கண்டிஷனில் இருக்கிறது என்று தெரியாது. எவ்வளவு எம்பும்? இல்லை தாழும் எனத் தெரியாது.விக்கெட் விழாமல் ஆட வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;முதல் இன்னிங்ஸில் எதிர் அணி இரண்டு நாட்கள் ஆடி கடைசி நாலு ஓவர் மட்டும் கொடுக்கும் போது, பேடைக் கட்டிக்கொண்டு போய் நிற்க ஸ்டாமினா வேண்டும். விக்கெட் கொடுக்காமல் ஆட கான்சண்ட்ரேஷன் வேண்டும். ஆனால் பவுலர் பிரெஷாக இருப்பார். &lt;br /&gt;&lt;br /&gt;இதுமாதிரியான சிக்கல்களினால் தான் அது ஸ்பெஷலிஸ்ட் பொசிஷனாக கருதப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;71ல் இருந்து நம் அணியில் ஆடிய துவக்க ஆட்டக்காரகளில் யாரை தேர்ந்தெடுக்கலாம்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;1. சுனில் கவாஸ்கர்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பேட்டிங் ஆவரேஜ் 50க்கு மேல். 10000ஐ முதன் முதலில் பார்த்தவர். 34 சதத்தையும் &lt;br /&gt;முதலில் பார்த்தவர். வேகப் பந்து பிசாசுகளான ஆண்டி ராபர்ட்ஸ்,மைக்கேல் ஹோல்டிங்,கார்னர் மற்றும் மார்ஷல் போன்றோரை அனாசியமாக ஆடியவர். ஸ்விங்கில் வல்லவர்களான லில்லி,ஹேட்லி, போத்தம் ஆகியோரையும் இம்ரான்,அக்ரம் போன்ற வல்லவர்களையும் எளிதாக எதிர் கொண்டவர். &lt;br /&gt;&lt;br /&gt;நீ வேகமாப் போடு. அப்பதான் எனக்கு ஈஸி. தட்டி விட்டாலே போர் போயிடும் என்று அவர்களைப் பார்த்து சிரித்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;கவாஸ்கர் ஸ்டம்புக்கும், மிட் ஆனுக்கும் இடையே உள்ள 'வி' யில் பந்துகளை அருமையாக ட்ரைவ் செய்வார். பவுலரும் தொட முடியாது, மிட் ஆன் பீல்டருக்கும் வாய்ப்பிருக்காது. இது எப்படி எனக் கேட்ட போது அவர் சொன்னது &lt;br /&gt;&lt;br /&gt;“ நான் தெருவில் விளையாடும் போது மிட் ஆனில் இரண்டு கார்கள் நிற்கும். அந்த கண்னாடியில் அடிக்கக் கூடாது என்பதற்காக அந்த வி யில் அடித்தே பழகினேன்”. என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்பின்னர்களையும் தெளிவாக ஆடுவார்.நல்ல ஸ்லிப் பீல்டரும் கூட. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;2. எம் எல் ஜெயசிம்மா&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அசாருதீனுக்கும் லட்சுமணனுக்கும் உள்ள ஒற்றுமை ஹைதராபாத் அணி மற்றும் ரிஸ்டி பிளே. அந்த மணிக்கட்டு திருப்பு ஆட்டத்துக்கும்,லெக் ஸ்டம்பில் போடும் பந்தை நோகாமல் தட்டி பவுண்டரிக்கு அனுப்பும் ஸ்டைலுக்கும் குரு இவர்தான். இவரும் ஹைதராபாத் தான். இவரது லெகஸிதான் அசாருக்கும் பின் லட்சுமணனுக்கும் வந்தது. இவர் முதலில் மிடில் ஆர்டர் ஆட்டக்காரர்தான். ஆனால் நமது அணியில் மிடில் ஆர்டருக்கு எப்போதும் இருக்கும் அடிதடியால் மேக்‌ஷிஃப்ட் ஓப்பனர் ஆகி பின் அதையே நிரந்தரமாக்கிக் கொண்டவர். அப்பொதைய அணியில் பிரசன்னா,வெங்கட்ராகவன்,பேடி,சந்திர சேகர் போன்ற ஸ்பின் ஜாம்பவான்கள் இருந்ததால் மித வேகப் பந்து வீசும் இவரையே துவக்க பந்து &lt;br /&gt;வீச்சாளாராக உபயோகப் படுத்தினார்கள். ஓப்பனிங் பேட்டிங், ஓப்பனிங் பவுலிங் என வாழ்ந்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்பின் இலங்கையின் ரவிரத்னாயகே வும்,நம் மனோஜ் பிரபாகரும் அந்த வாழ்வை அனுபவித்தவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;3. சேட்டன் சௌகான்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செஞ்சுரியே அடிக்காமல் 40 டெஸ்ட் ஆடியவர். ஆனால் கவாஸ்கருக்கு நல்ல துணையாக விளங்கியவர். கவாஸ்கர் ஒருமுறை இந்திய கனவு அணியை தேர்வு செய்த போது இவரைத்தான் துவக்க ஆட்டக்காரராக தேர்வு செய்தார். (இன்னொருவர் கவாஸ்கரேதான்). இவர் எப்படி ஆடுவார் என பார்க்க வேண்டுமென்றால்  ஸ்டார் டிவியில் கிளாசிக் தொகுப்பில் பார்க்கலாம். ஆனால் அகால வேளையில் போடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் விளக்குமாற்றை கிரிக்கெட் பேட்டாக கற்பனை செய்து ஆடி அம்மாவிடம் திட்டு வாங்கினேன். கல்யாணத்தன்று கிப்ட் கொடுத்த நண்பனிடம் ஸ்கோர் என்னாச்சு என்று மணமேடையில் கேட்டு மனைவியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டேன். இப்போது கிரிக்கெட் பார்க்க கார்ட்டூனை மாத்தாதே என மகனிடமும் திட்டு வாங்குகிறேன். மூன்று தலைமுறையும் என்னை கிரிக்கெட் பார்க்க விடாமல் சதி செய்கிறது. &lt;br /&gt;சௌகான் ஆட்டத்தைப் பார்த்தவர்கள் பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;4. கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை அரசு பதிலில் எஸ் ஏ பி (ஐராசு,ராகிரா வாகவும் இருக்கலாம்) சொன்னது, “ ஸ்ரீகாந்த் அடிச்சா நாமே அடிச்சமாதிரி இருக்கும்”. அது உண்மைதான். சராசரியை விட அதிக அகலத்துக்கு காலை அகட்டி நிற்பதும், மூக்கை உறிஞ்சிக்கொள்வதும்,சூரியனை பார்ப்பதும், ரெஸ்ட்லெஸாக லெக் அம்பயரை நோக்கி நடப்பதும் சிரிப்பாகத்தான் இருக்கும். ஆனால் ஆண்டி ராபர்ட்ஸை அவர் அடித்த ஸ்கொயர் ட்ரைவ் இன்னும் கண்ணுக்குள் தான் இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;சார்ஜாவில் மார்ஷலை முதல் பந்தில் மிட்விக்கெட்டில் சிக்சரும், அடுத்த பந்தில் ஸ்கொயர்கட்டில் போரும் அடித்தவுடன், ஸ்லிப்பில் நின்ற ரிச்சர்ட்ஸ் காலில் வென்னீரைக் கொட்டியதுபோல் மார்ஷலிடம் ஓடினார். மார்ஷல் வாழ்க்கையிலேயே கேப்டனிடம் சுடு சொல் வாங்கியது அந்த ஒரு சந்தர்ப்பத்திலாகத்தான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சிட்னியில் ஸ்ரீகாந்த் அடித்த 123ம், சேப்பாக்கத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக அடித்த் 123ம் தான் அவர் செஞ்சுரிகள். ஆனால் இரண்டும் பல ஆண்டுகளுக்கு பேசப்பட்டவை.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;5. நவ்ஜோத் சிங் சித்து&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மே இந்திய தீவுக்கு எதிராக அங்கே போய் 201 அடித்தாலும், இந்தியாவில் சில செஞ்சுரிகள்&lt;br /&gt; அடித்திருந்தாலும் இவருக்கு ஒரு வீக்னெஸ் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல லெங்த்தில் போடப்பட்டு வேகமாக இன்கட் ஆகி உள்ளே வரும் பாலை  ஆட மிகவும் &lt;br /&gt;சிரமப்படுவார். பெரும்பாலான முறை இம்மாதிரி பந்துகளில் அவுட் ஆகி உள்ளார். ஆனால் ஸ்பின்னர்களை ஆடுவதில் கிங். &lt;br /&gt;&lt;
